India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

108-ஐ போல 104 உதவி எண் இருப்பது பற்றி தெரிவதில்லை. மக்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை வழங்க தான் 104 சேவை உள்ளது. 104 கட்டுப்பாட்டு அறையை மக்கள் தொடர்பு கொள்ளும் போது, அவர்களுக்கென தனி பதிவெண் வழங்கப்பட்டு துறை சார்ந்த மருத்துவர்கள் மூலம் ஆலோசனை (கன்சல்டிங்) வழங்கப்படும். உடல்நலம் மட்டுமின்றி மனநலம் தொடர்பான ஆலோசனைகளும் இதில் பெறலாம். கட்டணம் கிடையாது. ஷேர் பண்ணுங்க

தர்மபுரி மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். (SHARE பண்ணுங்க)

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் பெங்களூரு வளாகத்தில் எலெக்ட்ரிக்கல்,மெக்கானிக்கல்,கம்யூட்டர் சயின்ஸ் பிரிவில் காலியாக உள்ள 610 பணியிடங்கள் நிரப்ப பட உள்ளது. BE(எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், கணினி அறிவியல், எலெக்ட்ரிக்கல்)/B.Sc(கணினி அறிவியல்) படித்த 28 வயதிற்குட்பட்டவர்கள் <

தர்மபுரி புதிய கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறிய பூங்கா பலரையும் கவர்ந்து வரும் நிலையில், ஒருநாள் சுற்றுலாவாக குழிப்பட்டி,கருங்கல்மேடு அரசு பள்ளி மாணவர்கள் கலெக்டர் அலுவலகம் வந்தனர். பூங்கா, கலெக்டர் அலுவலகம், ராட்சத கொடி மரம் ஆகியவற்றை வியப்புடன் பார்த்த மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் ஆ.சதீஷை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

தருமபுரி மாவட்டத்தில் நாளை (அக்டோபர் 3) உங்களுடன் ஸ்டாலின் முகாம்
1. தர்மபுரி: சத்யா நகர், என்.கே திருமண மண்டபம்,
2.நல்லம்பள்ளி: சாமிசெட்டிபட்டி, PUMS பள்ளி வளாகம்,
3.கடத்தூர்: ஸ்ரீ மீனாட்சி மகால்,
4.காரிமங்கலம்: கெங்குசெட்டிபட்டி, சமுதாய கூடம்,
5.அரூர்: மோப்பிரிபட்டி, ஆசியா மஹால், ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. ஷேர் பண்ணுங்க

1965ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் இருந்து பிரிந்து புதிய மாவட்டமாக தருமபுரி மாவட்டம் உதயமானது. 60 ஆண்டுகள் நிறைவடைந்தையொட்டி வைர விழா கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளது. இந்த வைர விழா கொண்டாட்டங்கள் அக்டோபர் 2 முதல் 8-ஆம் தேதி வரை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளார்.

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (அக்.1) இரவு ரோந்து செல்லும் காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தலைமை அதிகாரியாக சிவராமன் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 ஐ அழைக்கவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

தருமபுரி மாவட்ட மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

தருமபுரி மாவட்டத்தில் எதிர்வரும் காந்தி ஜெயந்தியை (02.10.2025) முன்னிட்டு, அக்.1 இரவு 10.00 மணி முதல் அக்.3 காலை 12.00 மணி வரை தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) சில்லறை விற்பனைக் கடைகள், இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் அனைத்து வகை மதுக்கடைகளும் மூடப்பட்டிருக்கும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த காலகட்டத்தில் மதுபானங்கள் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.