Dharmapuri

News January 11, 2025

பயிர் சேதங்கள் கணக்கெடுப்பு குறித்து ஆய்வுக் கூட்டம்

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ச.திவ்யதர்ஷினி தலைமையில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி முன்னிலையில் பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் தருமபுரி மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் பயிர் சேதங்கள் உள்ளிட்ட கணக்கெடுப்பு குறித்து, துறை அலுவலர் ஆய்வுக் கூட்டம் நடந்தது.

News January 10, 2025

தர்மபுரி மக்களுக்கு ஆட்சியர் அறிவுரை

image

தர்மபுரி ஆட்சியர் சாந்தி வெளியிட்ட அறிக்கையில், ”தமிழர் திருநாளான பொங்கலுக்கு முதல் நாள் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சில பழைய பொருட்களை எரிப்பது வழக்கம். இந்நாளில் கிழிந்த பாய்கள், பழைய துணிகள், தேவையற்ற விவசாய கழிவுகள் இதுபோன்ற செயல்களை தடை செய்த உயர்நீதிமன்றம் பழைய மரம்வறட்டி தவிர வேறு எதையும் எரிப்பதற்கு தடை விதித்தது. மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

News January 10, 2025

தர்மபுரி: 2 நாள்களுக்கு மதுகடை விடுமுறை

image

தர்மபுரி மாவட்டத்தில் 2 நாள்கள் மதுகடைகள் இயங்காது என மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார். அதன்படி, திருவள்ளுவர் தினம்(ஜன.15) மற்றும் குடியரசு தினம்(ஜன.26) அன்று மதுக்கடைகள் இயங்காது. மேலும் விதியை மீறி மதுபான கூடங்கள் மது விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

News January 10, 2025

Way2Newsல் நிருபராக விருப்பமா?

image

தமிழின் முன்னணி செய்தி நிறுவனமான Way2News Appல் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, புலிக்கரை, வெள்ளிச்சந்தை உள்ளிட்ட தாலுகாக்களில் செய்தியாளராக விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட லிங்கில் இந்த லிங்கில் <>உங்களை பற்றிய<<>> தகவல்களை பதிவு செய்யவும், நீங்கள் பகுதி நேர வருவாய் ஈட்ட இது ஒரு அறிய வாய்ப்பு, மேலும் விவரங்களுக்கு +9133022122 என்ற இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.

News January 10, 2025

HMPV வைரஸால் பாதிக்கப்பட்டோருக்கு சிறப்பு வார்டு தயார்

image

தருமபுரி அரசு மருத்துவமனையில் இதுவரை HMPV வைரஸ் தொற்று பாதிப்பு யாருக்கும் கண்டறியப்படவில்லை. மேலும் HMPV வைரஸ்தொற்று அறிகுறி கண்டறியப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க 20 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் மக்கள் மாஸ்க் அணியவும் மருத்துவமனை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News January 10, 2025

விவசாயிகளுக்கு மின் மோட்டார் மானியம்: கலெக்டர்

image

தமிழ்நாடு அரசு வேளாண்மை இயந்திர மக்கள் திட்டத்தின் கீழ் 2024/2025 நிதியாண்டில் 5.13 லட்சம் மதிப்பிலான 187 மின் மோட்டார் மானியத்தில் வழங்கப்படும் என்று கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு உதவி செயற்பொறியாளர் வேளாண்மை பொறியியல் துறையை 04346296077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News January 9, 2025

தாட்கோ மூலம் பயிற்சி பெற வாய்ப்பு

image

மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று(ஜன.9)  வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு, தொழில் நுட்பபயிற்சியாளர் மற்றும் பிராட்பேண்ட் டெக்னிஷியன் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது.  இப்பயிற்சி முடித்த உடன்,  பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலம் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என 

News January 9, 2025

அரூரில் வாகன தணிக்கையில் ரூ.4.49 லட்சம் அபராதம் வசூல்

image

அரூரில் கடந்த மாதம் மொத்தம் 302 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன. இதில் 90 வாகனங்களுக்கு ரூ. 3.17 லட்சம் அபராதமும், முறையாக வரி செலுத்தாத வாகனங்களிடமிருந்து ரூ. 1.31 லட்சம் ரூபாய் வரியும் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், விதியை மீறியதாக 16 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் கடந்த மாதம் மொத்தம் ரூ. 4.49 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

News January 9, 2025

எஸ்பி தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

image

தர்மபுரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புதன்கிழமை தோறும் பொதுமக்கள் குறைத்தீர்க்கும் முகாம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் தருமபுரி மாவட்ட எஸ்பி மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் 70 கோரிக்கை மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 70 மனுக்கள் மீதும் உடனடியாக தீர்வு காணப்பட்டது. மேலும் நேற்றைய முகாமில் 28 புதியதாக மனுக்கள் பெறப்பட்டது.

News January 9, 2025

 புதிய தொழிற்பள்ளிகள் துவக்க ஆட்சியர் அறிக்கை

image

2025-2026 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள் / தொழிற்பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. 02.01.2025 முதல் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!