India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 17, 2025 அன்று தர்மபுரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார். இந்த நிகழ்ச்சியில், பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் நேரில் வழங்கவுள்ளார். தர்மபுரி மாவட்ட மக்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பயன்பெறலாம்.
தருமபுரி வருவாய் கோட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் இன்று (ஆக.8) காலை 11:00 மணிக்கு தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தருமபுரி வருவாய் கோட்ட அலுவலர் தலைமை தாங்கி, விவசாயிகளின் குறைகளைக் கேட்டுத் தீர்த்து வைப்பார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.
தர்மபுரி மக்களே, உங்களது நிலம் தொடர்பான ஆவணங்கள் குறித்து எளிதில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் இதன் மூலம் தங்களது நில விவரம், பட்டா, சிட்டா திருத்தம் போன்ற சேவைகளை மேற்கொள்ளலாம் (அல்லது) அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள கம்மாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி வையாபுரி (வயது.37) இவர் இன்று உறவினர் வீட்டுக்கு செல்ல மொபெட் வாகனத்தில் பாப்பாரப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். தொட்லாம்பட்டி பெருமாள் கோயில் அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த மினி சரக்கு வாகனம் மோதியதில் வையாபுரி தலை நசுங்கி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிர் இழந்தார்.
தருமபுரி மாவட்ட ஆரம்ப சுகாதார மையங்களில் காலியாக உள்ள பாரா மெடிக்கல் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியானது. இதன் மூலம் மருத்துவ உதவியாளர், டிரைவர், லேப் டெக்னீஷியன், ஸ்டாப் நர்ஸ் உட்பட 103 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பத்தை <
தருமபுரி மாவட்ட கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. ✔ தருமபுரி – 12 ✔ காரிமங்கலம் – 02, ✔ நல்லம்பள்ளி – 07, ✔ பாலக்கோடு – 08 ✔ பென்னாகரம் – 10. இந்த <
தர்மபுரி மாவட்டத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் ₹2,000 வழங்கும் தாய்மணம் ‘அன்பு கரங்கள்’ திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சேர விரும்புவோர் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் அல்லது உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பிக்கலாம். பயனாளிகளுக்கு 18 வயது வரை உதவித்தொகை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 10277 கிளர்க் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 894 காலிப்பணியிடங்கள் உள்ளன. 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். தமிழ் பேச எழுத தெரிந்து இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும். ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுடையவர்கள் இந்த <
தர்மபுரி மாவட்டம் மணியம்பாடி பகுதி சேர்ந்த குப்பன் மகன் மாரியப்பன்(45), கூலி தொழிலாளி. கடத்தூரிலிருந்து வாணியம்பாடி நோக்கி சென்ற போது தர்மபுரியில் இருந்து வந்த வாகனத்தில் மோதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கடத்தூர் போலீஸ் அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் செறிவூட்டப்பட்ட உணவு பொருள் தொடர்பான விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் இன்று (06.08.2025) கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் தருமபுரி நகர்மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, மாவட்ட நியமன அலுவலர் மரு.P.K.கைலாஷ் குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.