Dharmapuri

News October 8, 2025

தருமபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

image

தருமபுரி மாவட்டம் முழுவதும் (அக்.07) இரவு 9 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. திரு. சூர்யா தலைமையில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்!

News October 8, 2025

பாஜக தருமபுரி மாவட்ட சமூகஊடக பிரிவு மாவட்ட நிர்வாகிகள் நியமனம்

image

சமூகஊடக பிரிவு மாநில அமைப்பாளர் பாலாஜி அவர்களின் அறிவுறுத்தலின் படி மற்றும் தருமபுரி மாவட்ட தலைவர் C.சரவணன் அவர்களின் ஒப்புதலின் படியும் இரண்டாம் கட்டமாக தருமபுரி மாவட்ட சமூகஊடக பிரிவு மாவட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். எனவே மாவட்ட செயலாளர்கள் , ஆதவன் மற்றும் மோனிஷா தங்களுடைய பணிகள் சிறக்க வாழ்த்துளை தர்மபுரி பாஜக மாவட்டத் தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News October 8, 2025

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் ஆணைகளை வழங்கினார்

image

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், PUES, வெள்ளக்கல் பள்ளி வளாகத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெற்றது. ஆட்சியர் ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (அக்.7) நேரில் பார்வையிட்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள். இந்த நிகழ்வில் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

News October 8, 2025

மருத்துவ முகாம்களை கலெக்டர் பார்வையிட்டார்

image

நல்லம்பள்ளி ஒன்றியம், PUES, வெள்ளக்கல் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் மருத்துவம் நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாம்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ், இன்று அக்.7 பார்வையிட்டார். உடன் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் தேன்மொழி, நல்லம்பள்ளி வட்டாட்சியர் பிரசன்ன மூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News October 7, 2025

தருமபுரி ஆட்சியர் முக்கிய தகவல்

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் இன்று வெயிட்ட செய்திக்குறிப்பில், தருமபுரி மாவட்டத்தில் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ் 2024-2025-ஆம் (மார்ச் 10, 2025 வரை) ஆண்டில் 13,410 நபர்களுக்கு ரூ.11.71 கோடி மதிப்பீட்டில் நிதியுதவி என மொத்தம் 78,360 நபர்கள் ரூ.50.46 கோடி மதிப்பீட்டில் நிதியுதவி பெற்று பயனடைந்துள்ளனர்’ என தெரிவித்துள்ளார்.

News October 7, 2025

தருமபுரி மக்களே ஹோட்டலில் தரமற்ற உணவா?

image

தமிழகத்தில் உணவுப் பாதுகாப்பு துறை பல இடங்களில் தீவிர சோதனையில் ஒரு பக்கம் ஈடுபட்டு வருகிறது. ஆனால் மறுபக்கம் தரமற்ற உணவு, கலப்படப் பொருட்களை கொண்டு சமைத்தல் போன்ற புகார் தொடர்ந்து எழுகிறது. சமீப காலமாக உணவில் தேரை, பல்லி, பாம்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இது போன்ற பிரச்சனைகளுக்கு உடனடியாக 9444042322 என்ற Whatsapp எண்ணில் புகார் தெரிவிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News October 7, 2025

தருமபுரி: இது உங்க போன் – ல கண்டிப்பாக இருக்கனும்!

image

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் போனில் உள்ளதா? இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க

1. UMANG – ஆதார்,கேஸ் முன்பதிவு,PF

2. AIS -வருமானவரித்துறை சேவை

3.DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்

4.POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை

5.BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை

6.M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்

இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க

News October 7, 2025

தருமபுரி: தனியார் பள்ளியில் இலவச சேர்க்கை

image

தருமபுரி மக்களே RTE 2025 – 2026 இன்று முதல் தொடங்க உள்ளதாக பள்ளிக்கல்வி துறை அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. LKG முதல் 8ம் வகுப்பு வரை உங்க குழந்தைகள் தனியார் பள்ளியில் கல்வி கட்டணம் இல்லாமல் படிக்கலாம். விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>செய்யுங்க. ஆவணங்கள்: பிறப்பு , சாதி சான்றிதழ், ஆதார், புகைப்படம் பதிவு செய்ய வேண்டும்.. (அட்மிஷன் தொடங்கவும் விண்ணப்பியுங்க..) இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க…

News October 7, 2025

தருமபுரி: வேளாண் மதிப்புக்கூட்டுதலுக்கு ரூ.1.5 கோடி மானியம்!

image

தருமபுரி மாவட்டத்தில் வேளாண் பொருட்களில் மதிப்புக்கூட்டுதல் மற்றும் பதப்படுத்துதல் தொழிலை ஊக்குவிக்க, ரூ.1.5 கோடி முதலீட்டு மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ் தகவல்படி, வேளாண் தொழில் முனைவோர் மற்றும் நிறுவனங்கள், இந்தச் சிறப்புத் திட்டத்தின் கீழ் மானியம் பெற விரும்பினால், http://www.agrimark.in.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

News October 7, 2025

தருமபுரி: செல் போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

செல்போன் தொலைந்து போனாலோ (அ) திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி (அ) <>இணையத்தில் <<>>செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் & உங்களின் தகவல்களை உள்ளிட்டு புகார் அளிக்கலாம். இதில் புகாரளித்தால் முதலில் செல்போன் செயலிழக்க செய்யப்படும். பின் செல்போனை டிரேஸ் செய்து கண்டறிந்து மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இதன் மூலம் 5 லட்சம் மொபைல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!