India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் “நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி” திட்டத்தின் கீழ் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான அபாகஸ் பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், இன்று (08.08.2025) குத்துவிளக்கேற்றி, தொடங்கி வைத்தார்
தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆகஸ்ட்.08) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம் வெளியிட்டுள்ளது. தலைமை அதிகாரியாக எஸ் .கரிகால் பாரி சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி லதா, அரூர் ஜெய் கீர்த்தி, பென்னாகரம் இளவரசி, மற்றும் பாலக்கோடு நடராஜன் ஆகியோர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பொதுமக்கள் அவசர தேவை எனில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் தகட்டூரில் அமைந்துள்ள மல்லிகார்ஜூனேசுவரர் ஆலயத்தின் சிறப்பு தெரியுமா? வள்ளல் அதியமான் அவ்வைக்கு நெல்லிக்கனி தந்த தலம் இது. ஆடிப்பூர வளைகாப்பு உற்சவம் இந்த கோயிலின் மிக சிறப்பான விழாவாகும். 2 டன் எடைக் கொண்ட தொங்கும் தூண்கள் இரண்டைப் பெற்றிருக்கும் சிவத்தலம் இது. இங்குள்ள கால பைரவரை வணங்கினால் திருமணத் தடைகள் நீங்கும், வறுமை நீங்கும், தொழிலில் நல்ல லாபம் உண்டாகும் என்பது ஐதீகம்.
தர்மபுரி மாவட்ட வருவாய்த்துறையில் காலியாக உள்ள 39 கிராம உதவியாளர் பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளமாக வழங்கப்படும். ஆக.20-ம் தேதி வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும் தகவல்களுக்கு <
வருமான சான்று, சாதி சான்று, இருப்பிடச் சான்று,கணவனால் கைவிடப்பட்டோர் சான்று, முதல் பட்டதாரி சான்று, விவசாய வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், குடிபெயர்வு சான்றிதழ், சிறு/குறு விவசாயி சான்றிதழ், ஆண் குழந்தை என்பதற்கான சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ், விதவை சான்றிதழ் & வேலையில்லாதோர் சான்றிதழை நீங்கள் இதன் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தருமபுரி மக்களே! சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். இந்த <
வரலட்சுமி நோன்பு அன்று வீட்டை சுத்தம் செய்து, மாவிலைத் தோரணம் கட்டி அலங்கரிக்க வேண்டும். கோலமிட்டு, கலசம் நிறுவி அதன் மேல் தேங்காயை வைக்க வேண்டும். இந்த கலசத்திற்கு அம்மன் முகம், ஆடை, அணிகலன்கள் அணிவித்து மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். பின் பஞ்சமுக நெய் விளக்கேற்றி நைவேத்தியங்களைப் படைக்க வேண்டும். அஷ்டலட்சுமி/ கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டோத்ர சதம் போன்ற மந்திரங்களைச் சொல்லி வழிபடலாம்.
வரலட்சுமி நோன்பு, லட்சுமி தேவியின் அருளை வேண்டி சுமங்கலிப் பெண்கள் அனுசரிக்கும் ஒரு புனிதமான விரதமாகும். இந்த விரதம் ஆடி மாதத்தில் பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி இன்று (ஆக்.08) தருமபுயில் உள்ள மகாலட்சுமி சமேத பரவாசுதேவப் பெருமாள் கோயில் சென்று வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. வரலட்சுமி நோன்பு சிறப்பு பூஜை விமர்சையாக இங்கு நடைபெறும். ஷேர் <<17338875>>தொடர்ச்சி<<>>
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 17, 2025 அன்று தர்மபுரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார். இந்த நிகழ்ச்சியில், பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் நேரில் வழங்கவுள்ளார். தர்மபுரி மாவட்ட மக்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பயன்பெறலாம்.
தருமபுரி வருவாய் கோட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் இன்று (ஆக.8) காலை 11:00 மணிக்கு தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தருமபுரி வருவாய் கோட்ட அலுவலர் தலைமை தாங்கி, விவசாயிகளின் குறைகளைக் கேட்டுத் தீர்த்து வைப்பார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.
Sorry, no posts matched your criteria.