India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தர்மபுரி புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் மாற்றத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி பொறுப்பு அமைச்சரும், தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சருமான எம்ஆர்கே பன்னீர்செல்வம் கலந்துகொண்டு மூன்று சக்கர வாகனங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி சிறப்பித்தார்.
தர்மபுரி மாவட்ட காவல் துறை சார்பில் இன்று (ஜூலை 07, 2025) இரவு ரோந்து பணிக்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட இரவு ரோந்து அலுவலராக எம். ரவிச்சந்திரன் செயல்படுவார். தர்மபுரி, அரூர், பென்னாகரம், பாலக்கோடு ஆகிய பகுதிகளுக்கு காவல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர உதவிக்கு அவர்களின் மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன; தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம்.
இன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் புதிய கூடுதல் அலுவலகத்தில் மாண்புமிகு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் கலந்து கொண்டனர்.
ஏழுர் பிள்ளையார் கோயில், சாலை விநாயகர் கோயில்- தருமபுரி, கணேசசாமி கோயில் – நாகமரை, ராககான பிள்ளையார் கோயில்-நடுஅள்ளி, பசுவண்ண பிள்ளையார் கோயில்- பென்னாகரம், பாலி விநாயகர் கோயில்-அரூர், ஆகாசவிநாயகர் கோயில்-குரும்பட்டி, சுந்தரவிநாயகர் கோயில்- கம்பைநல்லூர், இரட்டை விநாயகர் கோயில்-பாரூர், ஜோதி விநாயகர் கோயில் – பாலக்கோடு, சக்தி விநாயகர் கோயில்-சந்தைப்பேட்டை. உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
இந்திய கடற்படையில் உள்ள குரூப்.பி மற்றும் குரூப்-சி பிரிவில் உள்ள சார்ஜ்மேன், ஸ்டோர் கீப்பர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 1,097 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. வயது 18 முதல் 45 வரை இருக்கலாம். 10th முதல் பொறியில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் 18,000- 1,42,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜூலை 18க்குள் <
தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்கு மேல் இருக்க கூடாது. வருமான சான்று, ரேஷன் கார்டு, அடையாள சான்று, முகவரி சான்று, ஆதார் கார்டு ஆகிய ஆவணங்களின் நகல்கள் மற்றும் <
முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (<
ஓசூரில் கடந்த 21ஆம் தேதி பாலம் விரிசல் ஏற்பட்டதால் பெங்களூரு, மைசூர் செல்லும் வாகனங்களை தர்மபுரிக்கு மாற்றம் செய்து பிரித்து விடும் பணி தொடங்கியுள்ளது. இதன்படி தர்மபுரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி வழியாக (என்எச்-44) செல்லும் கார்கள் மற்றும் சரக்கு வாகனங்களை, தர்மபுரி-ஓசூர் வழியாக கர்நாடக மாநிலம் நல்லூருக்கு அமைக்கப்பட்டு வரும் புதிய தேசிய நெடுஞ்சாலை வழியாக பிரித்து அனுப்பப்படுகிறது.
தர்மபுரி கோட்டத்திற்குட்பட்ட தர்மபுரி, சோலை கொட்டாய் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (ஜூலை.08) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் மதிகோன்பாளையம், கோட்டை, தர்மபுரி பஸ் நிலையம், கடைவீதி, அன்னசாகரம், விருபாட்சிபுரம், அளேதர்மபுரி, கடகத்தூர், கொளகத்தூர், குண்டல்பட்டி, ஏ.ஜெட்டிஅள்ளி, ஏ.ரெட்டிஅள்ளி, வி.ஜி.பாளையம், செட்டிகரை, நீலாபுரம், வெள்ளோலை,கோம்பை, ஏ.கொல்லஅள்ளி <<16972667>>தொடர்ச்சி<<>>
குளியனூர், மொடக்கேரி, முக்கல்நாயக்கன்பட்டி, நூலஅள்ளி, குப்பூர், சோலைகொட்டாய், மூக்கனூர், கொட்டாவூர், மாரவாடி, செம்மாண்டகுப்பம், நாயக்கனஅள்ளி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும். இந்த தகவலை தர்மபுரி மின்வாரிய செயற்பொறியாளர் ஜெயா தெரிவித்துள்ளார். உங்க பகுதி மக்களுக்கு இந்த செய்தியை தெரியப்படுத்துங்க.
Sorry, no posts matched your criteria.