Dharmapuri

News April 25, 2025

தர்மபுரியில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் இன்று (ஏப்ரல் 25) 20 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் பல இடங்களில் மழை பொழிய வாய்ப்புள்ளதால் வெளியே செல்லும் போது குடை, ரெயின் கோர்ட் எடுத்து செல்லுங்கள். உங்கள் நண்பர்களுக்கு ஹேர் பண்ணுங்க

News April 24, 2025

தர்மபுரி பெண்களிடம் இருக்க வேண்டிய எண்கள்

image

பெண்களுக்கு எதிராக பல குற்றச்சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே, அனைத்து பெண்களும் மகளிர் போலீஸ் எண்களை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலையம்- 04342 – 260058, ஆரூர் – 04346 – 223744, பென்னாகரம் – 04342 – 255200.
இந்த எண்களை உங்கள் வீடு மற்றும் அனைத்து பெண்களுக்கும் பகிர்ந்து சேவ் பண்ணிக்கோங்க!

News April 24, 2025

பில்லி சூனியம் நீக்கும் மல்லிகார்ஜுனேசுவரர்

image

தர்மபுரி மாவட்டம் தகட்டூர் பகுதியில் மல்லிகார்ஜுனேசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு சென்று மல்லிகார்ஜுனேசுவரரை வழிபட்டால் பில்லி, சூனியம் போன்ற மந்திர பிரயோகத்தால் ஏற்படும் தொல்லைகளில் இருந்து விடை கிடைக்கும் என நம்பப்படுகிறது. மேலும், ஈசனை மனமுருகி வழிபட்டால் கடன் தொல்லையில் இருந்தும் விடை கிடைக்கும் என கூறப்படுகிறது.
மந்திர பிரயோகத்தால் சிரமப்படும் நண்பர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!

News April 24, 2025

இ-சேவையில் 60 ரூபாய்க்கு இத்தனை வசதியா?

image

அரசு இ – சேவை மையங்களில் ஆவணங்கள் தொடர்பான பிரச்னைகளை வெறும் 60 ரூபாயில் முடித்துவிடலாம். ஆம், பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, குடிபெயர்வு, விவசாய வருமானம், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு வெறும் 60 ரூபாய் கட்டணம் போதும். வெளியே சென்று விண்ணப்பித்தால் ரூ.100+க்கு மேல் வசூலிக்கப்படும். ஷேர் பண்ணுங்க

News April 24, 2025

நாளை பெண்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

image

தர்மபுரி அரசு கலைக் கல்லூரியில் நாளை காலை 9:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை டாடா எலக்ட்ரானிக் நிறுவனம் நடத்தும் பெண்களுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. கல்வி தகுதிக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும். அசல் கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ வுடன் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அறிவித்துள்ளார்.

News April 23, 2025

கடன் தொல்லை நீக்கும் தீர்த்தகிரீசுவரர்

image

தர்மபுரி மாவட்டம் தீர்த்தமலை பகுதியில் அமைந்துள்ள தீர்த்தகிரீசுவரர் திருக்கோயிலில், சிவன் சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு சென்று ஈசனை மனமுருகி வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும் என சொல்லப்படுகிறது. மேலும், அங்குள்ள மரத்தில் தொட்டில் கட்டி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் எனவும் நம்பப்படுகிறது.
கடன் தொல்லையால் தவிக்கும் நண்பர்களுக்கு இதனை ஷேர் செய்யவும்..,

News April 23, 2025

குறைகளை ’TN SMART’ தளத்தில் புகாராக அளிக்கலாம்

image

தருமபுரி மாவட்ட பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை<> ‘TN SMART’<<>> இணையதளத்தில் புகாராக பதிவு செய்யலாம். இதற்கு, ‘புகார் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்கள் பெயர், முகவரி, மொபைல் எண், புகார் விவரம் மற்றும் அதன் புகைப்படத்தை சமர்ப்பிக்கவும். அவசர நிலைகளுக்கு 1070 அல்லது 1077-ஐ அழைக்கவும். உங்கள் புகாரின் நிலை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News April 23, 2025

தருமபுரிக்கு பெருமை சேர்ந்த இளைஞர்

image

நாடு முழுவதும் நேற்று யுபிஎஸ்சி தேர்வு முடிகள் நேற்று வெளியான நிலையில், தமிழக அளவில் தருமபுரியை சேர்ந்த சிவசந்திரன் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். மாநில அளவில் முதலிடமும், தேசியளவில் 23-ம் இடத்தையும் பிடித்துள்ளார். 4 முறை யுபிஎஸ்சி தேர்வில் தோல்வி அடைந்த நிலையில், 5ஆவது முறையாக தேர்வு எழுதி சாதித்துள்ளார். தருமபுரிக்கு பெருமை சேர்த்த சிவசந்திரனை பற்றி மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க

News April 22, 2025

திருமணத் தடை நீக்கும் சுயம்பு மூர்த்தி

image

தர்மபுரி மாவட்டம் அமானிமல்லாபுரம் பகுதியில் சுயம்புலிங்கேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு பக்தர்களுக்கு அருள்பாளித்து வரும் சுயம்பு மூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என நம்பப்படுகிறது. மேலும், குழந்தை பாக்கியம் கிட்டும் எனவும் கல்வியில் சிறந்து விளங்கலாம் எனவும் கூறப்படுகிறது. திருமணத்தடை உள்ள நண்பர்களுக்கு இதை சேர் செய்யவும்..,

News April 22, 2025

மின்தடையா? இந்த எண்களுக்கு கால் பண்ணுங்க

image

கோடைக்காலம் தொடங்கிவிட்டதால், அடிக்கடி மின்வெட்டும் ஏற்படும். அவ்வாறு, முன்னறிவிப்பின்றி ஏற்படும் மின்வெட்டு குறித்து புகார் அளிக்க மின்னகத்தின் (9498794987) எண்ணை தொடர்வு கொள்ளவும். ஒருவேளை லைன் கிடைக்கவில்லை அல்லது பிசியாக இருந்தால், (6380281341) என்ற வாட்ஸ்-அப் எண்ணிலும் புகார்களை தெரிவிக்கலாம். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் <>அதிகாரப்பூர்வ X பக்கத்திலும் <<>>புகார்களை கொடுக்கலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!