Dharmapuri

News October 10, 2025

தருமபுரி: லைசன்ஸ் இல்லையா No Problem!

image

தருமபுரி, போலீசார் வாகனங்களை சோதனை செய்யும்போது லைசென்ஸ் கையில் இல்லை என்ற கவலை வேண்டாம். DigiLocker, M parivaahan போன்ற அரசின் செயலிகளில் RC புக், லைசென்ஸ் போன்ற ஆவணங்களை வைத்து கொண்டு, அதை சோதனையின்போது காண்பிக்கலாம். இந்த செயலி மூலம் காண்பிக்கும் ஆவணங்களை, காவல்துறையினர் ஏற்க முடியாது என்று சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. ஷேர் பண்ணுங்க.

News October 10, 2025

தருமபுரி: SIM CARD வைத்திருப்போர் இதை தெரிஞ்சிக்கோங்க!

image

இந்தியாவில் ஒருவர் 9 சிம் கார்டுகள் மட்டுமே வைத்திருக்க முடியும் என்ற புதிய விதி அமலானது. உங்கள் ஆதார் விவரங்களைப் பயன்படுத்தி வேறு யாராவது சிம் கார்டு வாங்கி இருக்கிறார்களா என்பதைச் சரிபார்க்க, <>இந்த லிங்கில்<<>> உங்கள் எண்ணை உள்ளிட்டு OTP மூலம் உள்நுழையலாம். உங்கள் பெயரில் உள்ள அனைத்து எண்களின் பட்டியலும் காட்டப்படும். அடையாளம் தெரியாத எண்கள் இருந்தால் உடனடியாகப் புகார் செய்து பிளாக் செய்யலாம். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

News October 10, 2025

தருமபுரி: நலம் காக்கும் மருத்துவ முகாம் அறிவிப்பு!

image

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அக்டோபர் 11, 2025 (சனிக்கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. முகாமில் பல்வேறு பரிசோதனைகள் மற்றும் நிபுணர் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும். தொழிலாளர் நல அட்டையுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

News October 10, 2025

தருமபுரி: டிகிரி போதும் ரயில்வேயில் நிரந்தர வேலை

image

தமிழக ரயில்வேயில் selection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்க <>கிளிக் <<>>செய்து அக்.14க்குள் விண்ணப்பிக்கவும். சந்தேகம் இருப்பின்: 9592001188 என்ற எண்ணை அழைக்கலாம். ஷேர் பண்ணுங்க

News October 10, 2025

தர்மபுரி: இந்த முக்கிய எண்களை நோட் பண்ணிக்கோங்க!

image

மழை பாதிப்பு நேரத்தில் இந்த எண்களை தொடர்புகொள்ளவும்
தருமபுரி: வருவாய் கோட்ட அலுவலர் (94450 00428)
அரூர்: வருவாய் கோட்ட அலுவலர்(94454 61802)
பாலக்கோடு: தனித்துணை ஆட்சியர் (9445461734)
பென்னாகரம்: உதவி ஆணையர் (94445 55118)
பாப்பிரெட்டிப்பட்டி: மாவட்ட வழங்கல் அலுவலர் (94450 00216)
காரிமங்கலம்: மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் (94454 77851)
நல்லம்பள்ளி: மாவட்ட ஆதிதிரவிடர் நல அலுவலர் (73388 01256)

News October 10, 2025

தருமபுரி மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்

image

தருமபுரி மாவட்டத்தில் (அக்.11) சனிக்கிழமை காலை 11 மணிக்கு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. மக்கள் தங்கள் ஊர் வளர்ச்சி, அரசு நலத்திட்டங்கள் மற்றும் பொதுப் பிரச்சினைகள் குறித்து கருத்துகள் தெரிவிக்கலாம். இந்த கூட்டத்துக்கு மக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

News October 10, 2025

அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஜி.கே.மணி ஆய்வு

image

பென்னாகரம் அரசு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நலன் விசாரித்து மருத்துவர்கள், செவிலியர்கள் நல்ல முறையில் பார்த்துக் கொள்கிறார்களா என பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி இன்று அக்.9 நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் முக்கிய நிர்வாகிகள் மற்றும் செவிலியர்கள் உடனிருந்தனர்.

News October 9, 2025

தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

image

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இன்று ( அக்-9) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்.

News October 9, 2025

தருமபுரி : டிகிரி போதும், மத்திய அரசு வேலை

image

இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் இந்திய முழுவதும் காலியாக உள்ள 348 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதோனும் ஒரு டிகிரி முடித்த இதற்கு 18 வயது முதல் 30 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்க் மூலம் <<>>இன்று முதல் அக்.29க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க

News October 9, 2025

தர்மபுரி: வேளாண்துறை சார்பில் மானியம்!

image

சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்துத் தரப்படும் என வேளாண்மைத்துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களுடன் உங்கள் அருகே உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரடியாகச் சென்று விண்ணப்பிக்கலாம். அல்லது இந்த <>லிங்க் <<>>மூலமாகவும் விண்ணைப்பிக்கலாம். விவசாயிகளுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!