Dharmapuri

News February 11, 2025

சாலை மறியலில் ஈடுபட்ட 11 பேர் மீது வழக்கு பதிவு

image

தாதுகவுண்டனூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் கல்லூரி மாணவர் இவர் இரு தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இதனால் தர்மபுரி சேலம் சாலையில் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தர்மபுரி விஏஓ முருகன் நகர காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்ததன் பேரில் சாலை மறியல் செய்த சந்தோஷ் உறவினர்கள் 11 பேர் மீது நகர காவலர்கள் நேற்று வழக்கு பதிந்துள்ளனர்.

News February 11, 2025

இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (10.02.2025) நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. ஆர்.கவிதா, தனித்துணை ஆட்சியர் (சபாதி) திரு.சுப்பிரமணி, மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

News February 10, 2025

தருமபுரி மாவட்டத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

image

தருமபுரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் பிப். 15 சனிக்கிழமை காலை 08.00 மணி முதல் 3.00 மணி வரை தொன் போஸ்கோ கல்லூரியில் நடைபெறுகிறது. 8 ஆம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ, டிப்ளமோ, & பொறியியல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க

News February 10, 2025

RRB Group D 2025: சென்னை மண்டலத்தில் 2,694 பணியிடங்கள்

image

இந்திய ரயில்வேயில் நாடு முழுவதும் மொத்தம் 32,438 RRB Group D 2025 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் சென்னை மண்டலத்தில் 2,694 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். 18- 36 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.18,000 (அடிப்படை) சம்பளம் வழங்கப்படவுள்ளது. https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளம் மூலம் பிப். 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News February 10, 2025

பாட்டாளி மின்சார தொழிலாளர்கள் சங்க அலுவலகம் திறப்பு விழா

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் மாவட்ட மின்சார வாரியம் அலுவலகம் கட்டிடத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மின்சார வாரியம் தொழிலாளர்கள் சங்க அலுவலகம் திறப்பு விழாவில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.இவ்விழாவில் பாமக நிர்வாகிகள் மற்றும் மின்சார ஊழியர்கள் கலந்துக் கலந்து கொண்டனர்.

News February 10, 2025

தருமபுரி மாவட்டத்தில் மதுக்கடை மூட உத்தரவு

image

தருமபுரி மாவட்டத்தில்  நாளை வள்ளலார் நினைவு தினம் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் செயல்பாட்டில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், இணைந்து மது கூடங்கள் மற்றும் உரிமை பெற்ற தனியார் ஹோட்டல்களில் மது விற்பனை கூடம் அனைத்தும் இன்று இரவு 10 மணி முதல் பிப்.12ஆம் தேதி காலை 12 மணி வரை மதுக்கூடங்கள் விற்பனை இன்றி மூடி வைக்க தருமபுரி ஆட்சியர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார்.  

News February 10, 2025

தேசிய குடற்புழு நீக்க நாள் சிறப்பு முகாம்

image

தருமபுரி மாவட்டத்தில்  இன்று தேசிய குடற்புழு நீக்க நாள் முன்னிட்டு அரசு அங்கன்வாடி மையம் பள்ளி கல்லூரி உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் பொதுமக்கள் ஒத்துழைப்பு அனைத்து துறை பணியாளர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றது என இவ்வாறு தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News February 10, 2025

ஆண்டியூர் அருகே லாரி மோதியதில் இருவர் படுகாயம் 

image

அரூர் அடுத்த ஆண்டியூர் அருகே டி.அம்மாபேட்டை கிராமத்தை சேர்ந்த டி.அம்மாபேட்டை கிராமத்தை சேர்ந்த கணேசன், (62) ,மாணிக்கம், (60) ஆகியோர் செல்லம்பட்டி சென்று விட்டு  வாகனத்தில் ஆண்டியூர் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த லாரி மோதியதில் இருவருக்கும் கால் முறிந்தது படுகாயம் ஏற்பட்டது. அவரை மீட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 9, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

தருமபுரியில் இரவு நேரத்தில் குற்றச் செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்கும், மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அந்தவகையில் தருமபுரி மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று இரவு ரோந்து பணி போலீசாரின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

News February 9, 2025

காரிமங்கலத்திற்கு அன்புமணி வருகை

image

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கோவிலூரில் நமக்கு நாமே திட்டம் மூலம் ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் விழா துவக்கி வைப்பதற்காக பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இன்று வருகை தந்தார். இந்நிலையில் தருமபுரி பாமக மாவட்ட கழக செயலாளர் அரசாங்கம் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பளித்தார். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். ஷேர் பண்ணுங்க. 

error: Content is protected !!