Dharmapuri

News October 15, 2025

தருமபுரியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

image

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 16.10.2025 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. பல்வேறு நிறுவனங்கள் விற்பனையாளர், சூப்பர்வைசர், மேலாளர், மெக்கானிக் உள்ளிட்ட பணிகளுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் அறிவுறுத்தியுள்ளார்.

News October 15, 2025

தருமபுரி மாவட்டத்தில் இரவு ரோந்து அதிகாரிகள் நியமனம்

image

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் அக்.15 அன்று இரவு ரோந்து பணிக்கான அதிகாரிகள் பட்டியல் வெளியிடப்பட்டது. மாவட்ட ரோந்து அதிகாரியாக குணவரமன், டி.எஸ்.பி. (DCRB) நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி, ஹரூர், பென்னாகரம், பாலக்கோடு பிரிவுகளுக்கான காவல் நிலையங்களில் பொறுப்பேற்ற அதிகாரிகளின் பெயர், மொபைல் எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

News October 15, 2025

புதிய பேருந்து சேவை தொடங்கிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

image

தருமபுரி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் நான்கு வழித்தடங்களில் மாற்றியமைக்கப்பட்ட மகளிர் விடியல் பேருந்து சேவை அக்.14 இன்று தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ஆட்சியர் ரெ.சதீஸ் முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆ.மணி எம்பி, லட்சுமி நாட்டான் மாது, அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

News October 15, 2025

பூங்கா திறந்து வைத்த அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

image

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள வைர விழா பூங்கா திறப்பு விழா இன்று அக்.14 நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் தர்மபுரி பொறுப்பு அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பூங்காவினை திறந்து வைத்து சிறப்பித்தார் இந்நிகழ்வில் தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தர்மபுரி எம்பி மணி கலந்து கொண்டனர்.

News October 14, 2025

தருமபுரி: தடகளப் போட்டியை துவக்கி வைத்த MP ஆ.மணி

image

தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 14,17 மற்றும்19 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு இன்று (அக்.14) மாவட்ட அளவிலான தடகளப் போட்டி துவங்கியது. இந்த நிகழ்வில்
தர்மபுரி மாவட்ட ஆட்சி தலைவர் ரெ. சதீஷ், தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ.மணி ஆகியோர் பங்கேற்று போட்டியை துவக்கி வைத்தனர்.

News October 14, 2025

தருமபுரி: அரசு திட்டம் வந்து சேரவில்லையா? கவலை வேண்டாம்

image

தமிழக அரசு “நீங்கள் நலமா?” என்ற தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசு திட்டங்கள் சென்றடையாதவர்கள், <>இந்த லிங்க் மூலம்<<>> குறைகளைப் பதிவு செய்யலாம். இந்தத் தளத்தில், முதலமைச்சர் வீடியோ/ஆடியோ அழைப்புகள் மூலமாகவும், உயர் அதிகாரிகள் தொலைபேசி மூலமாகவும் நேரடியாக தொடர்புகொள்ளலாம். முதலமைச்சரின் நேரடிப் பார்வையில் குறைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும். ஷேர்

News October 14, 2025

தருமபுரி: கணவன்/மனைவி சண்டை நீங்க செல்ல வேண்டிய கோவில்

image

தருமபுரியில் கோவில் கொண்டிருக்கும் கல்யாண காமாட்சி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள். தமிழகத்தில் சூலினிக்காக அமைக்கப்பட்ட ஒரே கோவில். வளர்பிறை அஷ்டமியில் இங்கு சிறப்பு பூஜை செய்தால், கணவன்-மனைவிக்குள் எப்பேர் பட்ட சண்டையாய் இருந்தாலும் தீர்ந்து ஒற்றுமையாய் இருப்பர் என்பது பக்தர்களிள் அசைக்க முடியாத நம்பிக்கை. உங்கள் கணவன்/மனைவி அடிக்கடி சண்டை போட்டால் இங்கு செல்லுங்கள். *நண்பர்களுக்கும் பகிரவும்*

News October 14, 2025

தருமபுரி மருத்துவமனையில் சிகிச்சை சரியில்லையா?

image

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளை நம்பி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரி இல்லை என்றாலோ, பணியாளர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ பொதுமக்கள் TOLL FREE 104 எண்ணில் அல்லது உங்க மாவட்ட சுகாதார அலுவலகத்தில் புகார் செய்யலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News October 14, 2025

தருமபுரியில் இலவச செல்போன் ரிப்பேர் மற்றும் சர்வீஸ் பயிற்சி

image

இந்தியன் வங்கி – ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், தருமபுரி மாவட்ட மக்களுக்காக 30 நாட்கள் காலம் கொண்ட செல்போன் ரிப்பேர் & சர்வீஸ் பயிற்சி 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 18 முதல் 45 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள் இதில் கலந்து கொள்ளலாம். காலை 9.30 முதல் மாலை 5.30 வரை இந்த பயிற்சி நடைபெறும். தொடர்புக்கு: 04342-230511, 86676 79474, 63831 47667. ஷேர் பண்ணுங்க. கண்டிப்பாக யாருக்காவது உதவும்.

News October 14, 2025

தர்மபுரி: ரயில்வேயில் சூப்பர் வேலை, இன்றே கடைசி!

image

தமிழக ரயில்வேயில் Seclection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்க <>கிளிக் <<>>செய்து இன்றைக்குள் விண்ணப்பிக்கவும். சந்தேகம் இருப்பின்: 9592001188 என்ற எண்ணை அழைக்கலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!