Dharmapuri

News February 15, 2025

பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் முக்கிய ஆலோசனை

image

பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினரும் பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவருமான ஜி.கே.மணி, பாமக சார்பில் கும்பகோணத்தில் நடைபெறும் சமய-சமுதாய நல்லிணக்க சோழ மண்டல மாநாடு குறித்து கடலூரில் இன்று (14/02/2025) நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

News February 14, 2025

மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் தேதி அறிவிப்பு

image

நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை, இண்டூர், பாலவாடி, பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம் (மூன்றாம் கட்டம்) முகாம் 19.02.2025 புதன்கிழமை நடைபெறுகிறது. அப்பகுதியை சார்ந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுகளை வழங்கி விரைந்து தீர்வு காண கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் சதிஷ் தெரிவித்துள்ளார்.

News February 14, 2025

தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தல்

image

நாட்டில் அன்றாட கூலியாக பணிபுரியும் பெண்களுக்கான வேலை வாய்ப்பு திட்டங்களை உருவாக்க வேண்டியும், ஊதிய ஏற்ற தாழ்வுகளை தடுத்து பணியிடப் பாதுகாப்பை உறுதி செய்யவும் மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களவையில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ.மணி வலியுறுத்தி பேசியுள்ளார்.

News February 14, 2025

அஞ்சல் துறையில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 83 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <>விண்ணப்பிக்க <<>>வேண்டும். ஷேர் பண்ணுங்க

News February 14, 2025

தருமபுரியில் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

image

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளையோர் பயன்பெறும் வகையில், மாவட்ட நிர்வாகமும், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையமும் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்,  நாளை (பிப்) 15-ம் தேதி தருமபுரியை அடுத்த சோகத்தூர் பகுதியில் உள்ள தொன் போஸ்கோ கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறவுள்ளது. இம்முகாமில் பங்குபெற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News February 14, 2025

மனைவி கண்டிப்பு: கணவன் விஷம் அருந்தி பலி 

image

அரூர், வீரப்ப நாயக்கன் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வேடியப்பன்ர்கூலித் தொழிலாளி இவருக்கு சுமிதா என்ற கு மனைவியும், 2 மகன்கள் உள்ளனர். வேடியப்பனுக்கு அதிக குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் வேடியப்பன் குடி போதையில் இருந்ததை கண்டு மனைவி கண்டித்துள்ளார். இதனால் வேடியப்பன் மனமுடைந்து அரளி விதை உண்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 13, 2025

ஒப்புதலுக்கு பின்னரே ஜல்லிக்கட்டு; ஆட்சியர்

image

தருமபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த நாளது தேதி வரை மாவட்ட நிர்வாகத்தினால் எந்த அமைப்புக்கும் அனுமதியேதும் வழங்கப்படவில்லை என்பதால், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் செய்திகளை நம்ப வேண்டாம். PR பேரவை சார்பாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தெரிவித்து வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் செய்தி உலா வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் சதிஷ் விளக்கமளித்துள்ளார்.

News February 13, 2025

தர்மபுரி மாவட்டத்தில் அஞ்சல் துறையில் வேலை

image

இந்திய அஞ்சல் துறை தர்மபுரி மாவட்டத்தில் கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு காலியாக உள்ள 83 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு India Pos thttps://www.indiapost.gov.inRecruitments என்ற இணையதளத்தில் அறிந்து மார்ச் 3ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது. ஷேர் பண்ணுங்க

News February 13, 2025

கொடிக் கம்பங்களை அகற்ற ஆட்சியர் உத்தரவு

image

தருமபுரி மாவட்டத்தில், நெடுஞ்சாலை, மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி மற்றும் பிற அரசு துறைகளுக்குச் சொந்தமான இடங்கள் பொது இடங்களில் நிரந்தரமாக அமைக்கப்பட்ட தொடர்புடைய அரசியல், மதம் போன்ற அனைத்து அமைப்புகளும், பொது இடங்களில் அனுமதி இல்லாத கொடிக்கம்பங்களையும் தாங்களாகவே அகற்றிக்கொள்ள வேண்டும், கொடி கம்பம் அகற்றவில்லை என்றால் நீதிமன்ற ஆணைப்படி நடடிவக்கை என மாவட்ட ஆட்சியர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News February 13, 2025

கோல் இந்தியா நிறுவனத்தில் 434 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. கணினி வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். 1 வருட பயிற்சிக்கு பின்னர் ரூ.60,000 – ரூ.1,80,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். நாளைக்குள் (பிப்.14) <>லிங்கை<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

error: Content is protected !!