Dharmapuri

News February 20, 2025

தர்மபுரியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியார்துறை நிறுவனங்களும் தனியார்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் கலந்துகொள்ளும் “தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்” நாளை(பிப்.21) காலை 10 மணிக்கு, தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (७) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ள, தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் ஆட்சியர் சதீஷ் தெரிவித்தார்.

News February 20, 2025

மினிபேருந்து அனுமதிச்சீட்டு வழங்கும் விண்ணப்பங்கள்

image

தருமபுரி மாவட்டத்தில் மினி பேருந்து புதிய விரிவான திட்டம் 01.05.2025 முதல் அமலுக்கு வரவிருக்கிறது. வழித்தடத்திற்கு அதிகபட்சம் 2 அனுமதிச்சீட்டுகள் வழங்கும் பொருட்டு நிபந்தனைகளுக்கு உட்பட்டு மக்கள், மக்கள் பிரதிநிதிகள், தனியார் அமைப்புகள் மற்றும் பேருந்து உரிமையாளர்கள் ஆகியோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என கலெக்டர் சதிஷ் தெரிவித்தார்.

News February 20, 2025

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை மூலமாக வேலை

image

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை மூலமாக வேலை வாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள பழங்குடியின இளைஞர்களை ஒருங்கிணைந்து தருமபுரி மாவட்டத்தை மையமாக கொண்டு பிப்.22ஆம் தேதி தருமபுரி அரசு கலைக்கல்லூரி (Government Arts & Science College, Dharmapuri) இளைஞர்களை (ஆண், பெண்) தெரிவு செய்யும் பணிகள் நடைபெற உள்ளது என ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

News February 20, 2025

தருமபுரி சுகாதாரத்துறையில் வேலை

image

தருமபுரி மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு சுகாதாரம் மற்றும் குடும்பநல துறையின் கீழ் உள்ள காலிப்பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு https://dharmapuri.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். 15 பணியிடங்களுக்கு 28.02.2025 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

News February 19, 2025

லாரி மீது இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி பலி

image

கீழ்மொரப்பூரை சேர்ந்த விஜயகுமார் நேற்று முன்தினம் இரவு இரு சக்கர வாகனத்தில் சோரியம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சாலை ஓரம் நின்றிருந்த டேங்கர் லாரியின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்த நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து நேற்று அரூர் காவலர்கள் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

News February 18, 2025

பள்ளி ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு

image

சென்னை மதுரவாயல், ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியில், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் பிப்.22ஆம் தேதி நடக்கிறது. தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம், பொருளாதாரம், வரலாறு, இந்தி, அறிவியல் என 10,000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளார்கள். தொடர்புக்கு – 8248470862, 9442568675, 8015343462. வேலைவாய்ப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது.

News February 18, 2025

இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

image

தருமபுரியில் உள்ள காடிமடு, லட்சுமிபுரம், சத்திபாளையம், வத்தநல்லூர், கொல்லர்பட்டி, கள்ளர்பட்டிசுங்கம், நல்லம்பள்ளி, திப்பம்பட்டி, கஞ்சம்பட்டி, பூசாரிபட்டி, முத்தம்பட்டி, அஜ்ஜம்பட்டி, விகவுண்டனூர், பி.துரிஞ்சிப்பட்டி, ஓட்டுப்பட்டி, கே.என்.புதூர், சோம்பட்டி, நேதாஜி பைபாஸ் சாலை, ரயில்வே ஸ்டேஷன், நெசவலர் கழனி, சோகத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (பிப்.18) மின்தடை ஏற்படும்.

News February 17, 2025

தொட்டில் குழந்தை திட்டத்திலுள்ள 5 காலி பணியிடங்கள் நிரப்பும் பணி

image

தருமபுரி மாவட்டத்தில் தொட்டில் குழந்தை திட்டத்திலுள்ள 5 காலி பணியிடங்களை தொகுப்பூதியம் மற்றும் தகுதியின் அடிப்படையில் பணியாளர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன பணியிடங்களுக்கு நேர்காணல் குழு மூலமாக தகுதி வாய்ந்த நபர்களை தேர்வு செய்து மாவட்ட ஆட்சியரால் தொகுப்பூதியம் மற்றும் தகுதியின் அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்.28 ஆகும். ஷேர் பண்ணுங்க

News February 17, 2025

மாணவ, மாணவியர்கள் பரிசுத்தொகை வழங்கிய கலெக்டர்

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் இன்று(பிப்.17) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட மைய நூலகத்தின் சார்பில் சிறுவாணி இலக்கியத் திருவிழா-2025 போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள் பரிசுத்தொகைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் சதீஸ் வழங்கினார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News February 17, 2025

எல்லை சாலைகள் அமைப்பில் 411 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர் கொத்தனார், கொல்லன் மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளான. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். 18-25 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். ஷேர் செய்யுங்கள்

error: Content is protected !!