Dharmapuri

News February 23, 2025

இந்திய ரயில்வேயில் வேலை: 10th பாஸ் போதும்

image

இந்திய ரயில்வேயில் உள்ள குரூப்: D பிரிவில் மொத்தமுள்ள 32,438 காலிப்பணியிடங்கள் நிரப்பப்ட உள்ளன. 10 மற்றும் ITI முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பாக தென்னக ரயில்வே கோட்டத்தில் மட்டும் 2,694 பணியிடங்கள் உள்ளன. வயது 18-36க்குள் இருக்க வேண்டும். தொடக்கத்தில் 18,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் மார்ச்.1ஆம் தேதிக்குள் இந்த <>இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்<<>>. ஷேர் பண்ணுங்க

News February 23, 2025

தர்மபுரி திமுக புதிய மாவட்ட பொறுப்பாளர் நியமனம்

image

தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக பணியாற்றி வந்த தடங்கம் சுப்பிரமணியம் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டடு அவருக்கு பதிலாக பி .தர்மசெல்வன் தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமனம் செய்யப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று(பிப்.23) அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News February 23, 2025

சிறுமியை கடத்திய நபர் போக்சோவில் கைது

image

தருமபுரியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி கடத்திச் சென்று திருமணம் செய்து, தெலுங்கானாவில் பதுங்கியிருந்த ஈஸ்வரன் என்பவரை, அதியமான்கோட்டை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஈஸ்வருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி பிரிந்து சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

News February 22, 2025

இந்திய கடலோரக் காவல்படையில் வேலை

image

இந்திய கடலோரக் காவல்படையில் 300 நவிக் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10, பிளஸ் 2 முடித்த இளைஞர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வயது 18 முதல் 22க்குள் இருக்க வேண்டும். மாத சம்பளமாக 21,700-47,600 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த இணையதளத்தில்<<>> வரும் பிப்.25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News February 22, 2025

கள்ளுக்கான தடையை நீக்க கோரிக்கை

image

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் மெனசி கிராமத்தில் சேலம் மண்டல தென்னை, பனை, பாக்கு மரம் ஏறும் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்துக்கு மண்டலத் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். தமிழக அரசு கள்ளுக்கான தடையை நீக்கி உணவுப் பட்டியலில் சேர்த்து ,மரம் ஏறும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

News February 22, 2025

இந்திய கடலோரக் காவல்படையில் வேலை

image

இந்திய கடலோரக் காவல்படையில் 300 நவிக் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10, பிளஸ் 2 முடித்த இளைஞர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வயது 18 முதல் 22க்குள் இருக்க வேண்டும். மாத சம்பளமாக 21,700-47,600 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த இணையதளத்தில்<<>> வரும் பிப்.25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News February 22, 2025

1000 பழங்குடியின இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

image

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொல்குடி திட்டத்தின் கீழ் 1000 பழங்குடியின இளைஞர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு இதுவரை 405 பழங்குடியின இளைஞர்கள் முன்னணி நிறுவனங்களில் இன்னும் 43 நாட்களில் வேலையில் சேர்வதற்கான திறன் பயிற்சி பெற்று வருகின்றனர். 600+ பழங்குடியின இளைஞர்களுக்கான திறன் பயிற்சி சேர்க்கை முகாம் நாளை (பிப்.22) தர்மபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது.

News February 21, 2025

பாப்பிரெட்டிபட்டியில் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

image

பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையம் அருகே இன்று (பிப்.21), விசிக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பஞ்சமி நிலங்களை மீண்டும் பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற ஆணையை நடைமுறைப்படுத்திட வலியுறுத்தப்பட்டது. மேலும், போராட்டத்தில் தர்மபுரி மாவட்ட விசிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News February 21, 2025

1000 பழங்குடியின இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

image

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொல்குடி திட்டத்தின் கீழ் 1000 பழங்குடியின இளைஞர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு இதுவரை 405 பழங்குடியின இளைஞர்கள் முன்னணி நிறுவனங்களில் இன்னும் 43 நாட்களில் வேலையில் சேர்வதற்கான திறன் பயிற்சி பெற்று வருகின்றனர்.
600+ பழங்குடியின இளைஞர்களுக்கான திறன் பயிற்சி சேர்க்கை முகாம் நாளை (பிப்.22) தர்மபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது.

News February 21, 2025

தர்மபுரியில் இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியார்துறை நிறுவனங்களும் தனியார்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் கலந்துகொள்ளும் “தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்” இன்று (பிப்.21) காலை 10 மணிக்கு, தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (७) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. இந்த செய்தியை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!