India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தருமபுரியில் ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை உயர்திறன் ஊக்கத்திட்டத்தின் (Skill Development) கீழ் சமூகத்திலிருந்து வரும் மாணவர்கள், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிக்க உதவும் திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக பணம் உறுதியாவணம் (Skill Voucher) வழங்கப்பட உள்ளது. இந்த மூலம் பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு ₹12,000, ₹15,000 மற்றும் ₹25,000 ஆகிய 3 பிரிவின்கீழ் நிதி கிடைக்கும்.
தருமபுரியில் இரவு நேரத்தில் குற்றச் செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்கும், மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அந்தவகையில் தருமபுரி மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று இரவு ரோந்து பணி போலீசாரின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. டிரைவர், ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தகுதி போதுமானது. பணியாளர்களுக்கு ரூ.21,700 – ரூ.69,100 வரை மாத சம்பளம் வழங்கப்படும். உடற்தகுதி, திறன், எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை செய்து <
தாதுகவுண்டனூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் கல்லூரி மாணவர் இவர் இரு தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இதனால் தர்மபுரி சேலம் சாலையில் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தர்மபுரி விஏஓ முருகன் நகர காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்ததன் பேரில் சாலை மறியல் செய்த சந்தோஷ் உறவினர்கள் 11 பேர் மீது நகர காவலர்கள் நேற்று வழக்கு பதிந்துள்ளனர்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (10.02.2025) நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. ஆர்.கவிதா, தனித்துணை ஆட்சியர் (சபாதி) திரு.சுப்பிரமணி, மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
தருமபுரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தொன் போஸ்கோ கல்லூரி, இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் பிப். 15 சனிக்கிழமை காலை 08.00 மணி முதல் 3.00 மணி வரை தொன் போஸ்கோ கல்லூரியில் நடைபெறுகிறது. 8 ஆம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ, டிப்ளமோ, & பொறியியல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க
இந்திய ரயில்வேயில் நாடு முழுவதும் மொத்தம் 32,438 RRB Group D 2025 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் சென்னை மண்டலத்தில் 2,694 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். 18- 36 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.18,000 (அடிப்படை) சம்பளம் வழங்கப்படவுள்ளது. https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளம் மூலம் பிப். 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் மாவட்ட மின்சார வாரியம் அலுவலகம் கட்டிடத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மின்சார வாரியம் தொழிலாளர்கள் சங்க அலுவலகம் திறப்பு விழாவில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.இவ்விழாவில் பாமக நிர்வாகிகள் மற்றும் மின்சார ஊழியர்கள் கலந்துக் கலந்து கொண்டனர்.
தருமபுரி மாவட்டத்தில் நாளை வள்ளலார் நினைவு தினம் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் செயல்பாட்டில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், இணைந்து மது கூடங்கள் மற்றும் உரிமை பெற்ற தனியார் ஹோட்டல்களில் மது விற்பனை கூடம் அனைத்தும் இன்று இரவு 10 மணி முதல் பிப்.12ஆம் தேதி காலை 12 மணி வரை மதுக்கூடங்கள் விற்பனை இன்றி மூடி வைக்க தருமபுரி ஆட்சியர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் இன்று தேசிய குடற்புழு நீக்க நாள் முன்னிட்டு அரசு அங்கன்வாடி மையம் பள்ளி கல்லூரி உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் பொதுமக்கள் ஒத்துழைப்பு அனைத்து துறை பணியாளர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றது என இவ்வாறு தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.