Dharmapuri

News October 18, 2025

தருமபுரி : மக்களே ரயில்வேயில் வேலை ரெடி!

image

ரைட்ஸ் எனப்படும் ரயில்வே நிறுவனத்தில் சிவில், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் போன்ற பிரிவுகளில் காலியாக உள்ள 600 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பதவிகளுக்கு ஏற்ப தகுதிகள் மாறுபடும். இதற்கு 18- 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.16,000-ரூ 29,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ.12க்குள் <>இந்த லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News October 18, 2025

தருமபுரி மக்களுக்கு நற்செய்தி

image

வடகிழக்கு பருவமழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் நவம்பர் 2025 மாதத்திற்குரிய அரிசியை அக்டோபர் 2025 மாதத்திலேயே பெற்றுக்கொள்ளலாம். இந்த வசதியினை தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களும் பயன்படுத்தி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் தெரிவித்துள்ளார்.

News October 18, 2025

தருமபுரி: வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் படிக்க கடனுதவி

image

தருமபுரி மாவட்டத்தில், வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் உயர்கல்வி தொடர விரும்பும் பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதாரக் கழகம் சார்பில் கடனுதவி வழங்கப்படுகிறது.கடன் வரம்பு – ரூ.15,00,000,வட்டி விகிதம் – 8%விண்ணப்பங்களை www.tabcedco.tn.gov.in m இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். ஷேர்

News October 18, 2025

தருமபுரி மாணவர்கள் கவனத்திற்கு

image

தருமபுரி மாவட்டத்தில் புதியதாக துவங்கப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையம் காரிமங்கலத்தில் 2025-ஆம் கல்வியாண்டிற்கான நேரடி சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்தொழிற்பயிற்சி நிலையமானது கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்படும். சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மேலே உள்ள புகைப்படத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்

News October 18, 2025

தருமபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

image

தருமபுரி மாவட்டம் முழுவதும் (அக்.17) இரவு 9 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. திரு. சூர்யா தலைமையில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக் கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்

News October 17, 2025

தருமபுரி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான தருமபுரி மாவட்டம், அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரியில், மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளில் மாவட்ட அளவிலான நேரடி சேர்க்கை 15.10.2025 முதல் 14.11.2025 வரை நடைபெறும். இக்கல்லூரியில் வழங்கப்படும். மேலும், 04342-233600 மற்றும் 7418844106 மாவட்ட எண்ணகளை தொடர்பு கொண்டு தகவல்களை அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

News October 17, 2025

தருமபுரி: 2,708 உதவிப் பேராசிரியர் வேலை.. APPLY NOW

image

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சம்பளமாக மாதம் ரூ.57,700 – ரூ.1,82,400 வரை வழங்கப்படும். மேலும் விண்ணப்பிக்க மற்றும் கல்வி தகுதிகள் குறித்து அறிய <>இந்த லிங்கில்<<>> சென்று இன்று- அக்.17 முதல் நவ-10, வரை விண்ணப்பிக்கலாம். *தெரிந்தவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*

News October 17, 2025

விளம்பர பதாகைகளை வெளியிட்ட ஆட்சியர் சதீஸ்

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் தருமபுரி மாவட்டத்தில் பாலின விகிதாச்சாரம் குறித்து அனைத்து மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுடனான விழிப்புணர்வு நடைபெற்றது. இதில், கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை தெரிந்துக்கொள்ளும் வழிமுறைகள் என்று இணையவழியாக பொய்யாக பரப்பப்படுகின்றது. இந்த செய்தியை கண்டிக்கும் வகையில் விளம்பர பதாகைகளை ஆட்சியர் சதீஷ் வெளியிட்டுள்ளார்.

News October 17, 2025

ஆட்சியர் சதீஸ் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம்

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் தருமபுரி மாவட்டத்தில் பாலின விகிதாச்சாரம் குறித்து அனைத்து மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சதீஸ், தலைமையில் நேற்று அக்.16 நடைபெற்றது. உடன் இணை இயக்குநர் (நலப்பணிகள்)சாந்தி, மாவட்ட சுகாதார அலுவலர் ராஜேந்திரன், துணை இயக்குநர் (குடும்பநலம்) பாரதி, மற்றும் முக்கிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News October 17, 2025

தருமபுரி: இலவச தையல் மிஷின் பெறுவது எப்படி?

image

தருமபுரியில் அரசு வழங்கும் இலவச தையல் மிஷின் பெற 6 மாத தையல் பயிற்சி சான்றிதழ் இருக்க வேண்டியது அவசியம். அருகே உள்ள இ-சேவை மையத்தையோ, பொதுசேவை மையத்தையோ அணுகி இந்தத் திட்டத்திற்கு ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம். ஒருவேலை நீங்கள் தையல் பயிறிச் பெறாதவர்களாக இருந்தால் ‘வெற்றி நிச்சயம்’ திட்டம் மூலம் உங்களுக்கு இலவச பயிற்சியும் வழங்கப்படும். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!