India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தருமபுரி என்றதும் நியாபகம் வருவது ஒகேனக்கல் தான். ஒகேனக்கலின் பழைய பெயர் உகுநீர்க்கல் என்பதாகும் கால போக்கில் தான் ஒகேனக்கல் என்று திரிந்து விட்டது. உள்ளூர்,வெளியூர் சுற்றலா பயணிகளுக்கு சுற்றலா என்றதும் முதலில் நியாபகம் வருவது ஒகேனக்கல் அருவி தான். அப்படிபட்ட வரலாற்றை தனக்கென கொண்டுள்ளது இந்த அருவி. இங்கு பரிசல் சவாரி மற்றும் எண்ணெய் குளியல் என்பது தனி சிறப்பு.
தருமபுரியில் உள்ள சென்றாய பெருமாள் கோவில் தமிழகம் முழுவதும் பிரலமான கோவில்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இது ஒரு ஓவல் வடிவ கோட்டையாகும். இந்த கோவில் அதியமான் மற்றும் தகோதூர் வம்சங்களின் பண்டைய தலைநகராக செயல்பட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றன. 13ஆம் நூற்றாண்டின் கலைப்படைப்பு கோவிலின் உட்புற குழியின் சுவர்களில் வரிசையாக உள்ளது. இதனை காண்பதற்கு ஒரு நல்ல சுற்றுலா பகுதியாக இருக்கும். ஷேர் பண்ணுங்க
பென்னாகரம் அருகே உள்ள எமனூர் வனப் பகுதியில் கடந்த மார்ச்.1ஆம் தேதி ஆண் யானை யானை வேட்டையாடப்பட்டு எரித்து, தந்தங்கள் கடத்தப்பட்டது. இந்நிலையில் இதுதொடர்பாக ஏமனூர் அடுத்த கொங்கரப்பட்டியை சேர்ந்த தினேஷ், விஜயகுமார், கோவிந்தராஜூ ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் யானையின் 2 தந்தங்கள் சேலம், ஈரோடு, தருமபுரி மாவட்ட எல்லைகளில் உள்ள காரைக்காடு கிராமத்தில் பறிமுதல் செய்தனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பியூன் பணியிடங்களை நிரப்ப தகுதியான பெண் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.விண்ணப்ப கட்டணம் கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள், இந்த <
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த பி.தர்மசெல்வனை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணியை தருமபுரி கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். கட்சி கூட்டத்தில் பி.தர்மசெல்வன் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
அரூர் அடுத்த எலவடை கிராமத்தை சேர்ந்த திருமூர்த்தி என்பவரை கம்பைநல்லூர் பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவர் திருமணம் நிலையில், ஒரே மாதத்தில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இந்நிலையில் திருமூர்த்திக்கு ஏற்கனவே திருமணம் நடந்ததும், மூன்றாவதாக 17 வயது பெண்ணை திருமணம் செய்ததும் தெரியவந்தது. திருமூர்த்தி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆட்சியரிடம் பிரியதர்ஷினி மனு அளித்தார்.
செயலியை பதிவிறக்கம் செய்யும்போது குறுஞ்செய்திகள் , Contact Access, Galary Access மற்றும் Location போன்றவற்றிற்கு கண்மூடித்தனமாக ஒப்புதல் அளிக்கின்றனர். இதனால் பயனரின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் திருடப்பட்டு சைபர் குற்றவாளிகள் மிரட்டுகின்றனர். குறிப்பாக புகைப்படங்கள் நிதி மோசடி புகார்களுக்கு 1930என்ற எண்ணை அழைக்கவும், சைபர் குற்ற புகார்களை www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யவும்.
தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பாக விட்டமின் ஏ சத்து குறைபாடு நோய்களைகளையும் மாலை கண் தொடர்பான நோய்களை தடுப்பதற்கும் விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் மார்ச் 17 – 22 வரை 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளது. அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் இம்முகாம் நடைபெற உள்ளது. குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு இதை Share பண்ணுங்க
இண்டூர் அருகே, மாக்கன்கொட்டாய் பகுதியை சேர்ந்த நவீன், (14), ரித்திக்ரோஷன், (11), ஆகிய இருவரும் இன்று காலை இருசக்கர வாகனத்தில் ராஜாகொல்லஹள்ளி அருகே சென்றபோது, முன்னால் சென்ற டிப்பர் லாரி மீது மோதியதில், நவீன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். பலத்த காயமடைந்த ரித்திக்ரோஷனை, தருமபுரி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். விபத்து குறித்து, இண்டூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி பணியாளர்களை நிரப்புவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. மொத்தம் 7,783 அங்கான்வாடி பணியாளர்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளனர்.அதிகபட்சம் 12ஆம் வகுப்பும் குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பும் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.வயது 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு கிடையாது.ரூ.24,200 வரை சம்பளம். மேலும் தெரிந்து கொள்ள <
Sorry, no posts matched your criteria.