Dharmapuri

News March 2, 2025

தவெக நிர்வாகி போக்சோவில் கைது

image

தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே +1 மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தவெக நிர்வாகி போக்சோவில் கைது செய்யப்பட்டான். மாணவி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார், விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், கைதான சுதாகரன் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். தவெக நகரப் பொறுப்பாளராக இருந்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது.

News March 1, 2025

பார்மசி படிப்பு முடித்தவர்களுக்கு வேலை

image

தமிழக அரசின் மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருந்தாளுனர் (Pharmacist) காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பார்மசி படிப்பில் டிப்ளமோ, இளங்கலை பட்டப்படிப்பு, Pharm. D முடித்திருக்க வேண்டும். தமிழ்நாடு பார்மசி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். ரூ.35,400- ரூ.1,30,400 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் 10ஆம் தேதிக்குள் <>இந்த லிங்கை<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News March 1, 2025

தருமபுரி மக்கள் விண்ணப்பிக்கலாம்

image

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர், மஞ்சப்பை விருதுகளை அறிவித்துள்ளார். இதில் தர்மபுரி மாவட்ட மக்கள் பங்கேற்க விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்திலும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இணையதளத்திலும் (www.tnpcb.gov.in) செய்து கொள்ளலாம் என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதிஸ் அவர்கள் தெரிவித்துள்ளார் .

News February 28, 2025

தருமபுரி மக்கள் விண்ணப்பிக்கலாம்

image

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர், மஞ்சப்பை விருதுகளை அறிவித்துள்ளார். இதில் தர்மபுரி மாவட்ட மக்கள் பங்கேற்க விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்திலும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இணையதளத்திலும் (www.tnpcb.gov.in) செய்து கொள்ளலாம் என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதிஸ் அவர்கள் தெரிவித்துள்ளார் .

News February 28, 2025

வனத்தில் கீரிப்பிள்ளை வேட்டை; 2 பேர் கைது

image

அரூர் அடுத்த பச்சனாம்பட்டியை சேர்ந்தவர் அருணாசலம் (54) இவரும், சுரேஷ், (37) என்பவரும் கடந்த பிப்.25ல், வேப்பம்பட்டியில் உள்ள விநாயகா ரைஸ்மில் அருகில் கட்டுவலை வைத்து கீரிப்பிள்ளையை பிடித்தனர். அங்கு வந்த தர்மபுரி வனப்பாதுகாப்பு படையினர் இருவரையும் பிடித்து, தீர்த்தமலை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவுப்படி, இருவரும் அரூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

News February 28, 2025

SBI வங்கியில் வேலை: கைநிறைய சம்பளம்

image

SBI வங்கியில் ஓய்வு பெற்றவர்களுக்கான 88 வேலைவாய்ப்பு வெளியாகியுள்ளது. வங்கி சேவைகள் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் கடன் / தணிக்கை / அந்நிய செலாவணி ஆகியவற்றில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பிக்கும் நபர்கள் 60 – 63 வயது வரை இருக்கலாம். ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படுவர். தகுதி அடிப்படையில் ரூ.45,000 – ரூ.80,000 வரை மாதம் சம்பளம் வழங்கப்படும். ஷேர் பண்ணுங்

News February 28, 2025

விபத்து காப்பீடு பதிவு –  இன்றே கடைசி நாள்

image

தருமபுரி அஞ்சலகங்களில், சிறப்பு விபத்து காப்பீடு திட்டம் பதிவு செய்யும் வாரம் இன்று வரை நடைபெற உள்ளதாக அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். விபத்து காப்பீடு திட்டத்தை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு போய் சேர்க்கும் விதமாக, விபத்து காப்பீடு பதிவு வாரம் கடந்த 24ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இன்று இத்திட்டம் முடிவடைகிறது.

News February 28, 2025

மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை முகாம் 

image

தருமபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் நாளை பிப்.28 நடைபெறும் முகாமில், சிறப்பு மருத்துவர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு தகுதியானவர்களுக்கு அன்றே தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன. குடும்ப அட்டை, ஆதார் அட்டை அசல் மற்றும் 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் கொண்டு வரவேண்டும் என்று மாற்று திறனாளிகள் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு பயன்பெறலாம்.

News February 27, 2025

தர்மபுரி நாம் தமிழர் மண்டல செயலாளர் விலகல்

image

தர்மபுரி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி மண்டல கிழக்கு மேற்கு மண்டல செயலாளர் வழக்கறிஞர் அண்ணாதுரை, நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே ஜனநாயகம் இல்லாத ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி தான் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

News February 27, 2025

நாதக தருமபுரி நிர்வாகி விலகல்

image

நாம் தமிழர் கட்சியில் இருந்து தருமபுரி மண்டல நிர்வாகியும், வழக்கறிஞருமான அண்ணாதுரை விலகுவதாக அறிவித்துள்ளார். அவர், “நாட்டில் ஜனநாயகமில்லாத ஒரே கட்சி நாம் தமிழர் எனவும், பொதுக்குழு, செயற்குழு கூட்டி எந்த முடிவையும் சீமான் எடுப்பதில்லை என்றும் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். NTKவில் இருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகுவது சீமானுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!