Dharmapuri

News March 22, 2025

குடிநீா் கேன்களை 50 முறைக்கு மேல் பயன்படுத்தக்கூடாது

image

தர்மபுரி கேன் குடிநீா் உற்பத்தியாளா்கள், விற்பனையாளா்களுக்கான உணா்திறன் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஒரு குடிநீா் கேனை 50 முறைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம். அழுக்கடைந்த கீறல் விழுந்த குடிநீா் கேன்களை பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டாம். அதுமட்டுமன்றி நேரடியாக சூரிய ஒளியில் வைக்கப்பட்ட குடிநீா் கேன்களை பயன்படுத்த வேண்டாம். குடிநீரின் தரத்தை உறுதி செய்வது அவசியம் என வலியுறுத்தப்பட்டது.

News March 22, 2025

1200 வருட பழமையான கால பைரவர் கோவிலில் பூஜை

image

நல்லம்பிள்ளை வட்டம் அதியமான் கோட்டை ஊராட்சியில் உள்ள 1200 வருட பழமையான ஸ்ரீ தட்சிணகாசி காலபைரவர் கோவிலில் இன்று தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடைபெருக்கிறது. இதில் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும் கர்நாடக மாநிலங்களில் இருந்து பக்தர்கள் கூட்டம் அதிகமாக வருகை தருவதால் போக்குவரத்தை சரி செய்ய காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

News March 21, 2025

தர்மபுரியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

தருமபுரியில் கடந்த சில தினங்களாக, வெயில் சுட்டெரித்து வந்தது. இதனிடையே நகரின் சில பகுதிகளில், கடந்த ஒரு வாரமாக பரவலாக மழைபெய்து வருகிறது. இந்நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மாவட்டத்தில் சில இடங்களில் நாளை (மார்ச்.22) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை வெளியே செல்லும் போது குடை, ரெயின் கோர்ட் உள்ளிட்டவற்றை மறக்காம எடுத்துட்டு போங்க. ஷேர் பண்ணுங்க

News March 21, 2025

ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

image

ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு இன்று (மார்.21) முதல் விண்ணப்பிக்கலாம். சென்னை மாநகர போக்குவரத்து கழகம் – 364, மாநில அரசு விரைவு போக்குவரத்து கழகம் – 318, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) – 322 பணியிடங்கள் உள்ளன. 24 வயது நிறைந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத பேச தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் கட்டாயம். விண்ணப்பிக்கும் <>லிங்க்<<>>

News March 21, 2025

மூச்சுத் திணறி 5 மாத பெண் குழந்தை பலி

image

பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கடசமுத்திரம் அடுத்த பூனையானுர் கிராமத்தைச் சேர்ந்த விஜய் (30) என்பவருக்கு இனியா ஸ்ரீ என்ற 5 மாத பெண் குழந்தை இருந்தது, இந்த குழந்தைக்கு நேற்று மூச்சு திணறல் அதிகமானதால், குழந்தையை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.

News March 21, 2025

16 வயது சிறுமி கர்ப்பம்

image

பெரியப்பட்டியை சேர்ந்தவர் பிரபு (20) இவர் 16 வயது சிறுமியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் கர்ப்பமடைந்த சிறுமியை கடந்த ஜன.20 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் அச்சிறுமிக்கு கடந்த, 11ல் கரு கலைந்துள்ளது, தொடர்ந்து வயிற்று வலி ஏற்பட்டதால், மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார்.இதையறிந்த காவல்துறையினர் போக்சோ வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News March 20, 2025

அரசு மருத்துவமனையில் தற்காலிக பணி

image

அரசு தர்மபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 8 பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி புரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்கள் இடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் முதல்வர் அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரியில் இன்று முதல் விண்ணப்பங்களை பெற்று வரும் ஏப்ரல் 04ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் அலுவலகத்தில் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News March 20, 2025

தருமபுரிக்கு விரைவில் சிப்காட் – அமைச்சர்

image

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய பென்னாகரம் எம்.எல்.ஏ ஜி.கே.மணி, “தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் அமைக்க அரசு முன்வர வேண்டும்” என்றார். அவருக்கு பதிலளித்த தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, “தருமபுரியில் சிப்காட் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியிருப்பதாகவும், விரைவில் நடைமுறைக்கு வரும்” என்றார். இதன்மூலம் தருமபுரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும்

News March 20, 2025

தருமபுரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

image

தருமபுரியில் மாா்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், சூப்பா்வைசா், மேலாளா், கம்ப்யூட்டா் ஆப்ரேட்டா், அக்கவுண்டன்ட், மெக்கானிக் போன்ற பணியிடங்களுக்கு ஆள்கள் தேவை என தனியாா் துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதில் 10,12th மற்றும் பட்ட படிப்பு படித்தவர்கள் நாளை காலை 10 மணிக்கு தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நடைபெறவுள்ள தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளுங்கள், ஷேர் பண்ணுங்கள்.

News March 20, 2025

இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

image

அரண்மனைபள்ளம் கிராமத்தை சேர்ந்த மாதேஷ், இவரது மனைவி ஆனந்தி. குழந்தை பிறந்ததிலிருந்தே ஆனந்திக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ஆனந்தி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

error: Content is protected !!