India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொல்குடி திட்டத்தின் கீழ் 1000 பழங்குடியின இளைஞர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு இதுவரை 405 பழங்குடியின இளைஞர்கள் முன்னணி நிறுவனங்களில் இன்னும் 43 நாட்களில் வேலையில் சேர்வதற்கான திறன் பயிற்சி பெற்று வருகின்றனர். 600+ பழங்குடியின இளைஞர்களுக்கான திறன் பயிற்சி சேர்க்கை முகாம் நாளை (பிப்.22) தர்மபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது.
பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையம் அருகே இன்று (பிப்.21), விசிக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பஞ்சமி நிலங்களை மீண்டும் பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற ஆணையை நடைமுறைப்படுத்திட வலியுறுத்தப்பட்டது. மேலும், போராட்டத்தில் தர்மபுரி மாவட்ட விசிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொல்குடி திட்டத்தின் கீழ் 1000 பழங்குடியின இளைஞர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு இதுவரை 405 பழங்குடியின இளைஞர்கள் முன்னணி நிறுவனங்களில் இன்னும் 43 நாட்களில் வேலையில் சேர்வதற்கான திறன் பயிற்சி பெற்று வருகின்றனர்.
600+ பழங்குடியின இளைஞர்களுக்கான திறன் பயிற்சி சேர்க்கை முகாம் நாளை (பிப்.22) தர்மபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது.
தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியார்துறை நிறுவனங்களும் தனியார்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் கலந்துகொள்ளும் “தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்” இன்று (பிப்.21) காலை 10 மணிக்கு, தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (७) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. இந்த செய்தியை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியார்துறை நிறுவனங்களும் தனியார்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் கலந்துகொள்ளும் “தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்” நாளை(பிப்.21) காலை 10 மணிக்கு, தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (७) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ள, தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் ஆட்சியர் சதீஷ் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டத்தில் மினி பேருந்து புதிய விரிவான திட்டம் 01.05.2025 முதல் அமலுக்கு வரவிருக்கிறது. வழித்தடத்திற்கு அதிகபட்சம் 2 அனுமதிச்சீட்டுகள் வழங்கும் பொருட்டு நிபந்தனைகளுக்கு உட்பட்டு மக்கள், மக்கள் பிரதிநிதிகள், தனியார் அமைப்புகள் மற்றும் பேருந்து உரிமையாளர்கள் ஆகியோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என கலெக்டர் சதிஷ் தெரிவித்தார்.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை மூலமாக வேலை வாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள பழங்குடியின இளைஞர்களை ஒருங்கிணைந்து தருமபுரி மாவட்டத்தை மையமாக கொண்டு பிப்.22ஆம் தேதி தருமபுரி அரசு கலைக்கல்லூரி (Government Arts & Science College, Dharmapuri) இளைஞர்களை (ஆண், பெண்) தெரிவு செய்யும் பணிகள் நடைபெற உள்ளது என ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு சுகாதாரம் மற்றும் குடும்பநல துறையின் கீழ் உள்ள காலிப்பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு https://dharmapuri.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். 15 பணியிடங்களுக்கு 28.02.2025 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
கீழ்மொரப்பூரை சேர்ந்த விஜயகுமார் நேற்று முன்தினம் இரவு இரு சக்கர வாகனத்தில் சோரியம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சாலை ஓரம் நின்றிருந்த டேங்கர் லாரியின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்த நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து நேற்று அரூர் காவலர்கள் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை மதுரவாயல், ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியில், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் பிப்.22ஆம் தேதி நடக்கிறது. தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம், பொருளாதாரம், வரலாறு, இந்தி, அறிவியல் என 10,000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளார்கள். தொடர்புக்கு – 8248470862, 9442568675, 8015343462. வேலைவாய்ப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது.
Sorry, no posts matched your criteria.