India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய தொழில் பாதுகாப்பு படையான CISFல் 1161 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th பாஸ் போதும். 18- 23(1.8.25) வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.21,700- ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் https://cisfrectt.cisf.gov.in/ என்ற இணையதளத்தில் 5-03-2025- 3-04-2025க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
திமுக தர்மபுரி மாவட்ட கிழக்கு பொறுப்பாளராக இருந்த இன்பசேகரன் பதவியில் இருந்து இன்று நீக்கப்பட்டார். இதையடுத்து அவரின் முகநூல் பதிவில் அவர் கூறியது, கழகத்தை எதிர்க்கட்சியுடன் (பாமக+அதிமுக) கூட்டணி சேர்ந்து கொண்டு ஒழிக்க நினைத்தவர், கழகத்தின் உயரிய பொறுப்பான மாவட்ட செயலாளர் பதவிக்கு தகுதியுடைய நபர்தானா? என்று அவர் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில், கும்பமேளா நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடத்திலிருந்து தீர்த்தம் வரவழைக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி தர்மபுரியில் நடைபெற்றது. இதில் தர்மபுரி மாவட்ட பாஜக தலைவர், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தர்மபுரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு மானியத்தால் பயன்பெறும் AAY மற்றும் PHH வகை குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் மார்ச் 31ஆம் தேதிக்குள், தங்களது குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் ஆதாரை, சம்பந்தப்பட்ட நியாய விலை கடைகளுக்கு சென்று e-kyc முறையில் ஆதார் சரிபார்ப்பு செய்து கொள்ள வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இந்திய ரயில்வேயில் உள்ள குரூப்: D பிரிவில் மொத்தமுள்ள 32,438 காலிப்பணியிடங்கள் நிரப்பப்ட உள்ளன. 10 மற்றும் ITI முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பாக தென்னக ரயில்வே கோட்டத்தில் மட்டும் 2,694 பணியிடங்கள் உள்ளன. வயது 18-36க்குள் இருக்க வேண்டும். தொடக்கத்தில் 18,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் மார்ச்.1ஆம் தேதிக்குள் இந்த <
தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக பணியாற்றி வந்த தடங்கம் சுப்பிரமணியம் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டடு அவருக்கு பதிலாக பி .தர்மசெல்வன் தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமனம் செய்யப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று(பிப்.23) அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தருமபுரியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி கடத்திச் சென்று திருமணம் செய்து, தெலுங்கானாவில் பதுங்கியிருந்த ஈஸ்வரன் என்பவரை, அதியமான்கோட்டை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஈஸ்வருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி பிரிந்து சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்திய கடலோரக் காவல்படையில் 300 நவிக் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10, பிளஸ் 2 முடித்த இளைஞர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வயது 18 முதல் 22க்குள் இருக்க வேண்டும். மாத சம்பளமாக 21,700-47,600 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் மெனசி கிராமத்தில் சேலம் மண்டல தென்னை, பனை, பாக்கு மரம் ஏறும் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்துக்கு மண்டலத் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். தமிழக அரசு கள்ளுக்கான தடையை நீக்கி உணவுப் பட்டியலில் சேர்த்து ,மரம் ஏறும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்திய கடலோரக் காவல்படையில் 300 நவிக் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10, பிளஸ் 2 முடித்த இளைஞர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வயது 18 முதல் 22க்குள் இருக்க வேண்டும். மாத சம்பளமாக 21,700-47,600 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
Sorry, no posts matched your criteria.