India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கொட்டுமாரன அள்ளியை சேர்ந்தவர் தலைகொண்டான் விவசாயி. இவர் டூவீலரில் பெரியாம்பட்டிக்கு சென்று விட்டு மீண்டும் ஊர் திரும்பிய போது, நிலைத்தடுமாறி சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து காவல்துறை விசாரித்து வருகின்றது.
சேலத்தை சேர்ந்தவர் அந்தோணிராஜ், திருவண்ணாமலை அடுத்த தன் சகோதரர் வீட்டிற்கு, தாய் மல்லிகா, 64, 4 மகள்களையும் உறவினர் செல்வா என்பவரின் காரில், நேற்று முன்தினம் அனுப்பினார். கார் சேலம் – அரூர் தேசிய நெடுஞ்சாலையில் மஞ்சவாடி கணவாயை கடந்து செல்லும் பொழுது காரின் மீது லாரி மோதியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலயே மல்லிகா உயிரிழந்தார்.மீதம் 4 பேரும் பலத்த காயங்களுடன் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
சேலம், டைடல் பார்க் நிறுவனத்தில், தொழில்நுட்ப உதவியாளர், நிர்வாக உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,87,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்தப் பணியிடங்களுக்கு பி.இ / பி.டெக் முடித்தவர்கள் ஏப்.,2ஆம் தேதி வரை <
மத்திய அரசின் கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பயர்மேன், ரிஜ்ஜர், ஸ்கபோல்டர் என மொத்தம் 12 இடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்ய உள்ளனர். 18-45 வயதிற்குட்பட்டும், 10ஆம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு வடிவில் தேர்வுகள் நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் இன்றைக்குள் (மார் 24) இந்த <
அதியமான் கோட்டையில் தான் இந்த சென்னராயப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. மத்திய தொல்லியல் துறையின் பராமரிப்பில் இருக்கும் இக்கோயிலின் மகாமண்டபத்தின் விதானத்தில் மகாபாரத, இராமாயண காட்சிகளை விளக்கும் பழங்கால சுவரோவியங்கள் உள்ளன. இவை சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்தவையாகக் கருதப்படுகிறன. இக்கோவில் இன்றளவும் தர்மபுரி மக்களின் வாழ்வியலையும் வரலாற்றையும் எடுத்துக்கூறும் சான்றாகவே உள்ளது.
தர்மபுரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”ஆயுதப்படையில் கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் நாளை (மார்ச் 24) ஏலம் விடப்பட உள்ளது. 6 இருசக்கர வாகனங்கள், 15 நான்கு சக்கர வாகனம் என மொத்தம் 21 வாகனங்களுக்கு தர்மபுரி மாவட்ட ஆயுதப்படை அலுவலக வளாகத்தில் காலை 8 மணிக்கு ஏலம் நடைபெறுகிறது. குறைந்த விலையில் வண்டி வாங்க விரும்பும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
ரசாயனம் கலக்கப்பட்ட தர்பூசணியை சாப்பிடும்போது நெஞ்செரிச்சல், செரிமான கோளாறு, புற்றுநோய் போன்ற ஆபத்துகள் வருமென மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தர்பூசணி பழங்களை வெட்டி பஞ்சு, டிஷ்யூ பேப்பர் ஆகியவற்றை கொண்டு துடைத்தால் சிவப்பு நிறம் அதில் ஒட்டிக் கொண்டால் அது ரசாயன கலப்பு கொண்ட பழம். எனவே, கடைகளில் வாங்கும்போது அதில் எங்காவது துளையிடப்பட்டு இருக்கிறதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஷேர் பண்ணுங்க.
கோடை வெயில் அதிகரித்து வரும் சூழ்நிலையில், வெயில் தாக்கத்தில் நம்மை பாதுகாத்துக் கொள்ள வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் தளர்ந்த, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிவது. மோர், இளநீர், உப்பு கலந்த எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றைப் பருகலாம். வெயில் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஆஸ்பிரின் மற்றும் பாராசிட்டமால் மாத்திரைகளை கொடுக்கக்கூடாது என மாவட்ட கலெக்டர் சதீஸ் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில், தக்காளி விலை கடும் சரிவால் நஷ்டம் அடைந்த விவசாயி ஒருவர் இலவசமாக தக்காளிகளை மக்களுக்கு வழங்கினார். 2 லட்சம் ரூபாய் செலவில் விளைவித்த தக்காளிக்கு வெறும் 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே கிடைத்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். விவசாயிகள் பெரும் நஷ்டம் அடையாமல் இருக்க, அரசே விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தடுப்பு மருந்து துறையின் கீழ் 6 மாதம் முதல் 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் வைட்டமின் ஏ திரவம் வழங்கப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து துணை சுகாதார நிலையம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு தலைமை மருத்துவமனைகளில் இன்று மாலை 5 மணிக்குள் அனைத்து குழந்தைகளுக்கும் வைட்டமின் ஏ திரவத்தை வழங்கிட மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.