India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மாதவிடாய் பருவம் எட்டிய பெண்களுக்கு உடலில் ஈஸ்ட்ரோஜின் என்ற ஹாா்மோன் அதிக அளவில் சுரக்கும். ஈஸ்ட்ரோஜின் அதிகமாக சுரக்கும் பருவத்தில் உள்ள இளம்பெண்களுக்கு மாரடைப்பும், இதய நோய்களும் பரவலாக ஏற்படுகிறது. குறிப்பாக, இதய தசை செயலிழப்பு (காா்டியோ மையோபதி) அதிகரித்துள்ளது. அதிலும் 20 – 35 வயதுக்குட்பட்ட இளம்பெண்கள் பலா் அத்தகைய நோய்க்குள்ளாகி வருவதாக ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர் தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் பயிலும் 8ஆம் வகுப்பு மாணவிக்கு (13), அங்கு பணிபுரியும் மொரப்பூர் கலைஞர் நகரைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் முல்லைமொழி (23) என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், அரூர் அனைத்து மகளிர் போலீசார் முல்லைமொழியை இன்று (மார்.7) போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில் ஒளிபரப்பான தனியார் உள்ளூர் சேனல் ஒன்றில் நேற்று (மார்.7) ஆபாசப்படம் ஒளிபரப்பானதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, பொதுமக்கள் அரசு கேபிள் டிவி தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தனர். கேபிள் டிவி தாசில்தார் ராஜராஜன் கூறுகையில் , ”அந்த சேனல் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தது. உடனே ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. சேனல் உரிமையாளர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
பென்னாகரம் வனச்சரகம் ஏமனூர் வனப்பகுதியில், கடந்த வாரம் யானை வேட்டையாடப்பட்டு தும்பிக்கை தனியாகவும், உடல் எரிக்கப்பட்ட நிலையிலும் கண்டெடுக்கப்பட்டது. இதை தடுக்க தவறிய நெருப்பூர் பிரிவு வனவர் சக்திவேல், ஏமனூர் பீட் வனக் காப்பாளர் தாமோதரன் இருவரையும், தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து அரசு நிதி உதவி பெறும் தொடக்க நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளுக்கு மழையின் காரணமாக 16/10/2024 அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. அன்றைய நாளில் ஈடுபட்ட வகையில் நாளை பள்ளிகள் வேலை நாட்களாக செயல்படும் என அறிவிக்கப்படுகின்றது என்று தருமபுரி முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை வெளியிட்டுள்ளார். மற்றவர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க
IDBI வங்கியில் உள்ள ஜூனியர் அசிஸ்டென்ட் மேனேஜர் பிரிவில் 650 காலிப் பணியிடங்கள் உள்ளன. பட்டப்படிப்பு படித்த 20-25 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெறும். தேர்வு செய்யப்படுபர்களுக்கு மாதம் ரூ.15,000 சம்பளம் வழங்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 12ஆம் தேதிக்குள் இந்த லிங்கை <
தருமபுரி மாவட்டத்தில் அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் வழியாக பல்வேறு தனியார் சேனல்கள் ஒளிபரப்பப்படுகின்றன. இதில், தருமபுரி நகராட்சி பகுதியில் குறிப்பிட்ட தனியார் சேனலில் ஆபாச படம் ஒளிபரப்பானதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்கள் பார்வையிடும் சேனலில் இதுபோன்ற நிகழ்ச்சி ஒலிபரப்பு செய்யப்படுவது வருத்தம் அளிப்பதாக மக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விசாரித்து வருகிறது.
அரூர் அருகே ஷேர் ஆட்டோவில் பெண்கள் கூலி வேலைக்கு சென்றிருந்தனர். இதில், மொத்தம் 9 பெண்கள் பயணம் செய்த நிலையில் ஷேர் ஆட்டோ நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 9 பெண்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் காயங்களுடன் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தர்மபுரியில் அமைந்திருக்கும் முக்கிய தீர்த்த ஸ்தலம் அனுமான் தீர்த்தம் ஆகும். இந்த அனுமன் தீர்த்தம், இராமாயணத்துடன் தொடர்புள்ள தீர்த்தம் ஆகும். தீர்த்தமலைக்கு வருவோர் கண்டிப்பாக அனுமான் தீர்த்தத்தைக் கண்ட பின் தான் தீர்த்தமலை செல்வர். மேலும் இந்த அனுமன் தீர்த்தமலையானது, நோய் தீர்க்கும் அற்புத மலையாகும். இங்குள்ள தீர்த்தங்களில் நீராடுவதன் மூலம், பல வகையான நோய்கள் நீங்குகின்றன. ஷேர் பண்ணுங்க
தருமபுரி மாவட்டத்தில் பிரதம மந்திரி தேசிய இன்டர்ன்ஷிப் பயிற்சி திட்டத்தில் 7 நிறுவனங்களில் 55 இளைஞர்களுக்கு 12 மாத இன்டர்ன்ஷிப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சிக்கு வயது வரம்பு 21 முதல் 24 ஆண்டுகள் ஆகும். கல்வித்தகுதி ஐ.டி.ஐ. 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, டிப்ளமோ மற்றும் டிகிரி ஆகும். மேலும் விபரங்களுக்கு <
Sorry, no posts matched your criteria.