India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தர்மபுரி மக்களே நாட்டு கோழி பண்ணை அமைக்க தமிழ்நாடு அரசு 50% மானியம் வழங்கி வருகிறது. இதன் மூலம் பண்ணை அமைக்க தேவையான செலவில் பாதியை அரசு மானியமாக பெற முடியும். மேலும் 4 வார வயதுடைய 250 நாட்டுக்கோழிக் குஞ்சுகளையம் இலவசமாக இதில் பெறலாம். இதற்கு அருகில் உள்ள கால்நடை மருத்துவ மனைகளில் விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு <<17560499>>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க
நாட்டு கோழி வளர்ப்பு திட்டத்தில் மானியம் பெற 625 சதுரஅடி நிலம், அந்த நிலத்திற்கான பட்டா, சிட்டா, அடங்கல் நகல், மின் இணைப்பு இருக்க வேண்டும். குடியிருப்பு பகுதியில் இருந்து தள்ளி இருக்க வேண்டும். பயனாளி 3 வருடங்களுக்குக் குறையாமல் பண்ணையைப் பராமரிக்க உறுதி அளிக்க வேண்டும். *கோழி பண்ணை அமைத்து வருவாய் பெற நல்ல வாய்ப்பு ஷேர் பண்ணுங்க*
தருமபுரி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட 4 நீா்நிலைகளில் 1050 சிலைகள் நேற்று கரைக்கப்பட்டன. 3 நாள்கள் வழிபாட்டுக்குப் பிறகு மேள தாளங்களுடன் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட விநாயகா் சிலைகள், ஒகேனக்கல், இருமத்தூா் தென்பெண்ணை ஆறு, சின்னாறு அணை, தொப்பையாறு ஆகிய நான்கு இடங்களில் உரிய பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டு தண்ணீரில் கரைக்கப்பட்டன.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக தர்மபுரி மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் துவக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ.மணி, தர்மபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளை துவங்கி வைத்தனர்.
தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆக.29) இரவு ரோந்து செல்லும் காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தலைமை அதிகாரியாக கரிகால் பாரிசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு ஷேர்!
தர்மபுரி மக்களே! பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள், சுயசார்புடன் வாழ சத்யவாணி முத்து அம்மையார் நினைவாக தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கபடுகின்றன. ஆண்டு வருமானம் ரூ.72,000க்கும் குறைவாக உள்ளவர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் அல்லது தர்மபுரி மாவட்ட சமூக நல அலுவலரை (04342-233088) அனுகலாம். SHARE பண்ணுங்க.
தருமபுரி மக்களே மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1,543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளமாக மாதம் Rs.30,000 முதல் 1,20,000 வரை வழங்கப்படும். இதற்கு B.Sc, B.E. ,B.Tech, M.Tech. ME படித்தோர் <
தமிழ்நாடு கூட்டுறவு சங்கம் மற்றும் வங்கிகள் உள்ள 2581 உதவியாளர் காலி பணியிடங்களில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 104 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 29 இன்று கடைசி நாள் மாலை 5:45 மணி வரை http://www.drbcud.in என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த வாய்ப்பினை தருமபுரி மாவட்ட படித்த இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மக்களே உங்கள் ரேஷன் கார்டு ரத்து செய்ய வாய்ப்புள்ளது. ஆம் போலி ரேஷன் கார்டு மூலம் பொருட்கள் வாங்குவதை தடுக்கும் நோக்கில் கேஒய்சி சரிபார்ப்பை அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதற்கு ஆகஸ்ட் 31 கடை தேதி ஆகும். இதற்கு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான<
தர்மபுரி மாவட்டத்தில் இன்று (ஆக.29) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்:
▶️ மல்லிகா பேலஸ் திருமண மண்டபம், பாப்பிரெட்டிப்பட்டி
▶️ ஊராட்சி மன்ற அலுவலக விளையாட்டு மைதானம், மாரவாடி
▶️ சமுதாயக் கூடம், பூதனஹள்ளி
▶️ ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஜக்குபட்டி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் நேரில் சென்று கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.