Dharmapuri

News March 16, 2025

தீர்த்தமலையின் சிறப்புகள் !!

image

அருள்மிகு தீர்த்த கிரீஸ்வரர் திருக்கோவில், இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். மலைக்கு மேற்கே ராமன் தீர்த்தம், வாயு தீர்த்தம், வருண தீர்த்தம் உள்ளது. கிழக்கே இந்திர தீர்த்தம், வடக்கே அனுமந்த தீர்த்தம் உள்ளது. தெற்கே எம தீர்த்தம் உள்ளது, இப்படியாக தீர்த்தங்களால் சூழப்பெற்ற மலை தீர்த்தமலை ஆகும். இம்மலை இன்றளவும் சுற்றுலா பயணிகளை வியப்படைய வைக்கும் ஓர் அற்புத தளமாகவே உள்ளது.

News March 15, 2025

மருத்துவர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்களுக்கு வேலை

image

208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் தொடங்கப்பட உள்ளதால், மாவட்ட சுகாதார சங்கம் சார்பில், 208 மருத்துவர்கள் மற்றும் நர்சுகள், 832 மருத்துவ பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் அங்கு நியமனம் செய்யப்பட உள்ளனர். மருத்துவர்களுக்கு மாதம், ரூ.60,000, நர்சுகளுக்கு ரூ.18,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 24ஆம் தேதிக்குள் இந்த க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க<>க்ளிக்<<>>

News March 15, 2025

குற்றச்செயல்களை கண்காணிக்க 1600 கண்காணிப்பு கேமராக்கள்

image

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 1400 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் தருமபுரி கோட்டத்தில் 200 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுவரை 1600 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் சாலை விபத்துக்கள் மற்றும் திருட்டு, வழிப்பறி, நகை திருட்டு உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களை விரைவாக அடையாளம் காணப்படுகிறது என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News March 15, 2025

தருமபுரி மக்களின் 84 ஆண்டு கால கனவு: அன்புமணி கேள்வி

image

தருமபுரி – மொரப்பூர் தொடர்வண்டிப் பாதை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதில் என்ன சிக்கல்? 6 ஆண்டுகள் ஆகியும் தமிழ்நாடு அரசு நிலம் கையகப்படுத்தாதது ஏன் என பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் அறிக்கையில், நிலங்களைக் கையகப்படுத்தாததற்கு தமிழக அரசு கூறியிருக்கும் காரணம் ஏற்றுக்கொள்ள முடியாதது. தேவையான நிலங்களை கையகப்படுத்தி கொடுக்க அரசு தவறி விட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

News March 14, 2025

குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்

image

தருமபுரி மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் வருகின்ற 17.03.2025 முதல் 22.03.2025 வரை நடைபெற உள்ளது. பொது மக்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் கொடுத்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என ஆட்சியர் சதிஷ் தெரிவித்துள்ளார்.

News March 14, 2025

விவசாயிகள் பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

image

விவசாயிகள் அரசின் பல்வேறு திட்ட பலன்களைப் பெறுவதற்கு, தொடர்புடைய ஆவணங்களை சமர்ப்பித்தல் விவசாயிகளின் பதிவு விவரங்களை மின்னணு முறையில் சேகரித்திட தமிழ்நாட்டில் வேளாண் அடுக்குத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தருமபுரி மாவட்ட விவசாயிகள் வேளாண் அடுக்கு திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்ய 31.03.2025 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News March 14, 2025

சூறைக்காற்றில் தூக்கி வீசப்பட்ட அரசு பள்ளியின் கூரை

image

கம்பைநல்லுார் அடுத்த, கே.ஈச்சம்பாடியில், உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின், 6 முதல், 8ம் வகுப்பு கட்டடங்களின் கூரை சீரமைக்கப்பட்டு, இரும்பு தகடுகளான ஷீட்கள் பொருத்தப்பட்டன. இந்நிலையில் நேற்று முன்தினம்( மார்ச் 12) மாலையில் சூறை காற்றுடன் பெய்த கனமழையால், பள்ளி கூரையில் இருந்த ஷீட்கள் தூக்கி வீசப்பட்டன. அதிர்ஷ்டவசமாக பள்ளியில் மாணவர்கள் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

News March 14, 2025

தர்மபுரியில் மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

image

பூஞ்சோலை கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி (50), இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம், பூந்தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக சின்னசாமி சென்றுள்ளார். அப்போது கீழே கிடந்த ஒயரை எதிர்பாராத விதமாக மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு தூக்கிசென்று பரிசோதித்த பொழுது,ஏற்கனவே சின்னசாமி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

News March 13, 2025

SBI வங்கியில் ஓய்வு பெற்றவர்களுக்கு வேலை

image

SBI வங்கியில் ஓய்வு பெற்றவர்களுக்கான 88 தணிக்கையாளர் (Concurrent Auditor) வேலைவாய்ப்பு உள்ளது. வங்கி சேவைகள் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். 1 வருடத்திற்கு ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படுவார்கள். அதிகபடியாக 3 ஆண்டுகள் வரை விரிவாக்கம் செய்யப்படும். தகுதி அடிப்படையில் ரூ.45,000 – ரூ.80,000 வரை மாதம் சம்பளம் வழங்கப்படும். 15ஆம் தேதிக்குள் <>விண்ணப்பியுங்கள்<<>>.

News March 13, 2025

தருமபுரியில் வீட்டை உடைத்து 100 பவுன் நடை திருட்டு

image

தருமபுரி மாவட்டம் நல்லபள்ளி அருகே ஷேர்லின்பெல்மா என்றவர் ஆசிரியராக பணி புரிந்து வரும் இவர் ஓய்வுபெற்ற ஆசிரியையும்,தனது தாயாருமான மேரியுடன் வசித்து வருகிறார்.மேரி மருத்துவ சிகிச்சைக்காக,வேலூருக்கு சென்ற நிலையில் ஷேர்லின்பெல்மா வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்கு சென்றுள்ளார்.வீடு திரும்பிய அவர் பூட்டு உடைக்கப்பட்டு 100 பவுன் நகை மற்றும் 1.5 லட்ச ருபாய் மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்துள்ளது.

error: Content is protected !!