India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தர்மபுரி மக்களே, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் காலியாக உள்ள 1446 Airport Ground Staff, Loaders, பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு, மற்றும் 12ம் வகுப்பு போதுமானது. சம்பளமாக ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ( ஆகஸ்ட் 31 ) ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி நிலவரப்படி, நீர்வரத்து 24,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனால், மாவட்ட ஆட்சியர் சதீஷ் பொது மக்கள் அருவிகளில் குளிக்க தடை விதித்துள்ளார்.
தர்மபுரி மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். (கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க)
தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகில் தேசிய விளையாட்டு தினத்தையொட்டி இன்று நடைபெற்ற மிதிவண்டி பேரணியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ் கலந்து கொண்டார். உடன் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி, மருத்துவ பணிகள் இணை இயக்குநர் சாந்தி, நகர் நல அலுவலர் இலட்சிய வர்ணா உள்ளிட்ட பயிற்றுநர்கள், பள்ளி மாணவ மாணவிகள் ஆகியோர் உள்ளனர்.
உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சரியாக ஊதியம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நல வாரியத்தில் புகாரளிக்கலாம். தொழிலாளர் துறை ஆணையர்-044-24321302, தொழிலாளர் மேம்பாட்டு துறை-044-25665566, கட்டுமான தொழிலாளர் நலவாரியம்-044-28264950, உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம்-044-28110147, வீட்டு பணியாளர் நலவாரியம்-044-28110147. ஆட்சியர் அலுவகத்தில் உள்ள தொழிலாளர் நலவாரிய அலுவலகத்திலும் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க
பென்னாகரம் அருகே, மடம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ், தனியார் பஸ் கண்டக்டர்.கடந்த, 28ல், தன் பைக்கில் தர்மபுரி நோக்கி சென்றுள்ளார். அப்போது வண்ணாத்திப்பட்டி அருகே, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து பென்னாகரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், பெரியாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் & மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் “நலம் காக்கும் ஸ்டாலின்” என்ற முழு உடல் பரிசோதனை மருத்துவமுகாம் நடைபெற்றது. இதை மாவட்ட ஆட்சியர் சதீஸ் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் இந்த முகாமில் 103 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டையை வழங்கினார். இதில் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
மத்திய அரசின் மின்சாரத்துறையில் காலியாக உள்ள ‘1543’ இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது . இதற்கு 18 வயது நிரம்பிய B.Sc, B.E., B.Tech, M.Tech, ME படித்தோர் விண்ணபிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ30,000 முதல் ரூ1,20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
ஐ.டியில் வேலை தேடும் இளைஞர்கள் அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இலவசமாக பயிற்சி பெற்று வேலை வாய்ப்பை பெறலாம். இந்த பயிற்சி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் போன்ற மாவட்டங்களில் நடைபெற உள்ளது. பயிற்சி கட்டணம் இல்லை, உணவு, தங்கும் இடம் இலவசம். மேலும் மாதம் ரூ.12,000 உதவித்தொகை உண்டு. இந்த <
இலவசமாக ஐ.டி பயிற்சி பெற 2022 – 25 கல்வியாண்டில் CSE,ECE,EEE,BCA, B.Sc (CS) , MCA அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் கொண்ட கலை அறிவியல் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அரியர்ஸ் இருக்க கூடாது. வயது 18 – 35க்குள் இருக்க வேண்டும். *ஐ.டி துறையில் செலவில்லாமல் பயிற்சி பெற்று வேலைக்கு செல்ல நல்ல வாய்ப்பு. வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.