India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தர்மபுரி மாவட்ட இரயில்வே பயணிகள் சங்க தலைவர் திரு, ஸ்ரீதர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று தர்மபுரி மாவட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டும் மத்திய இரயில்வே அமைச்சர் மரியாதைக்குரிய திரு அஸ்வினிவைஷ்ணவ் அவர்களுக்கு மெயில் மூலமாகவும் கடிதம் மூலமாகவும் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தர்மபுரியில் இருந்து சென்னைக்கு நேரடி ரயில் சேவை இயக்க பரிந்துரைத்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அரசு தர்மபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 8 பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி புரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் முதல்வர் அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி அலுவலகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் ஏப்ரல் 04ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க
இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 133 காவலர் பணியிடங்களுக்கு வரும் ஏப்ரல் 2ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரூ.21,700 – 69,100 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேசிய, மாநில, பல்கலை., அளவிலான போட்டிகளில் 3ஆவது இடமாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். விளையாட்டு திறன், உடற்தகுதி, மருத்துவ தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். ஷேர் <
AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும் என்றும் அண்மையில் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.
பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மோட்டுப்பட்டியை சேர்ந்தவர் அல்லி (55). குடிபழக்கம் கொண்ட இவர் நேற்றைய தினம் குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதை அவரின் மனைவி குமாரி கண்டிக்க, இதில் விரக்தி அடைந்த அல்லி நேற்று பூச்சிக்கொல்லி மருந்து குடித்து வீட்டில் வாந்தி எடுத்துள்ளார். உடனடியாக அவரை அவரை மீட்ட உறவினர்கள் தர்மபுரி மருத்துவமறையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
மத்திய அரசின் பாரத் எலக்ட்ரிக்கல் நிறுவத்தின் (BHEL) பெங்களூர் பிரிவில் காலியாக உள்ள 33 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 01.03.2025 தேதியின்படி 32 வயது வரை இருக்கலாம். எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் பொறியியல் முடித்திருக்க வேண்டும். ரூ.45,000- ரூ.88,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில் ‘சொந்தமாக YouTube சேனலை உருவாக்குதல்’ என்ற 3 நாள் பயிற்சியை நடத்த உள்ளது. வரும் ஏப்ரல் 22ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் என அனைவரும் கலந்து கொள்ளலாம். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18+ வயதுக்கு மேற்பட்டோர் கலந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்
ஊத்துபள்ளத்தூர் கிராமத்தை சேர்ந்த தங்கராஜ் லட்சுமி தம்பதிகள் மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகின்றனர். நேற்று அதிகாலை வழக்கம் போல் காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மீன் பிடித்த போது நிலை தடுமாறி லட்சுமி ஆற்றில் விழுந்தார். அவரை காப்பாற்ற தங்கராஜ் ஆற்றல் குதித்தார் இருப்பினும் லட்சுமி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து ஏரியூர் காவலர்கள் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கடந்த 27ஆம் தேதியில் இருந்து வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, நேற்றும் வெப்பம் சுட்டெரித்ததை பார்க்க முடிந்தது. அதன்படி, மதுரை, சென்னை உள்ளிட்ட 10 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவானது. அதிகபட்சமாக மதுரையில் 104 டிகிரி வெப்பம் பதிவாகியிருந்தது. இந்நிலையில் தர்மபுரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 102.2 டிகிரி வெயில் பதிவானதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்
தருமபுரியில் இன்று வெயில் சதமடித்துள்ளது(102.2). இந்நிலையில், சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க, 1. 2 மணி நேரத்துக்கு ஒரு டம்ளர் வீதம் (250 மி.லி) நாளொன்றுக்கு 10- 12 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும். 2. எளிதில் செரிமானமாகும் உணவுகளை சாப்பிடுங்கள். 3. மது, புகைபிடிப்பதை தவிர்க்கவும். 4. நீர் சத்து நிறைந்த உணவுகளை எடுக்க வேண்டும். 5. வெளியே செல்லும் போது குடை எடுத்து செல்லுங்கள். ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.