India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வீரத்தமிழன் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் தர்மபுரி மாவட்டம் சோகத்தூர் பகுதியில் 20.5.2025 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக அழைப்பிதழ்கள் வெளியாகி உள்ளது. தர்மபுரியில் ஏற்கனவே ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு பணிகள் முடிந்து ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதி குறிப்பிடப்படாமல் ஒரு பிரிவு ஜல்லிக்கட்டு தொடங்காமல் நிலுவையில் உள்ளது.
பள்ளிப்படிப்பை நிறைவு செய்த மாணவ மாணவிகள் தங்களது உயர் படிப்பை “எங்கு படிக்கலாம் என்ன படிக்கலாம்” என்ற தலைப்பின் கீழ் நாளை (ஏப்.3) தர்மபுரி நான்கு ரோடு பகுதியில் உள்ள ரோட்டரி ஹாலில் முன்னணி பல்கலைக்கழகங்கள் பங்கு பெறும் இலவச உயர் கல்வி வழிகாட்டி நிகழ்வு நடைபெறுகிறது. இதில், கலந்துகொண்டால் மாணவர்களுக்கு நிச்சயம் ஒரு தெளிவு கிடைக்கும். உங்களுக்கு தெரிந்த மாணவர்களுக்கு பகிர்ந்து தெரியப்படுத்தவும்.
தர்மபுரி மாவட்ட வன அலுவலகத்தில் வரும் 4ஆம் தேதி காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் தர்மபுரி மாவட்ட வன வட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளையும் கருத்துகளையும் தெரிவித்து பயன்பெறுமாறு DFO ராஜாங்கம் தகவல் தெரிவித்துள்ளார். *குறைத்தீர் கூட்டத்தில் வழங்கப்படும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, மறக்காம கலந்துக்கோங்க. ஷேர்.
அரூர் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் வசந்தா தலைமையில் அரூர் கோட்டத்தில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவலர்கள் கடந்த மாதம் நடத்திய சோதனையில், மதுபானம் விற்பனை செய்து 7 பெண்கள் உட்பட 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 661 மது பாட்டில்கள், 324 லிட்டர் கள், 2 கிலோ கஞ்சா, 32 லிட்டர் சாராயம் மற்றும் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக நேற்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் பேருந்துகள் வருகை, கால அட்டவணை உள்ளிட்டவை குறித்தும், குடிநீர் வசதி, தாய்மார்கள் பாலூட்டும் அறை மற்றும் அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வு அறை வசதிகள் குறித்தும், கடைகளில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் சதிஷ் அவர்களால் நேற்று இரவு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் இன்று தருமபுரி நகர மற்றும் புறநகர் பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்கள் பயன்படுத்தும் கழிப்பிடம் மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். அப்போது பேருந்து நிலையத்தில் அசுத்தமாக இருந்த கழிவறையை முறையாக பராமரிக்காத ஒப்பந்ததாரருக்கு 5,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார். ஆட்சியர் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. ஷேர் பண்ணுங்க
கடைகளில் இருந்து தர்பூசணி பழங்கள் வாங்கும் போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். சோதனை செய்து பார்த்த பிறகே, தர்பூசணி பழத்தை வாங்குங்கள். ரசாயனம் சேர்க்கப்பட்ட தர்பூசணி பழங்கள் விரைவாக கெட்டு விடும் என்பதால், சில பழங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து அவற்றில் இந்த ரசாயனத்தை கலந்து ஜூஸ் போடுவதாகக் கூறப்படுகிறது. லாபம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக பழங்களில் ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன.
ரசாயனங்களை தண்ணீரில் கலந்து அதனை ஊசி மூலமாக தர்பூசணி பழங்களுக்குள் செலுத்துவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் குமார் அண்மையில் தெரிவித்தார். ரசாயனம் சேர்க்கப்பட்ட தர்பூசணி பழங்கள் அனைத்தும் பார்ப்பதற்கு மிகவும் சிவந்து போய் இருக்கும். அதன் மீது ஒரு டிஷ்யூ பேப்பரை வைத்து தேய்க்கும்போது, டிஷ்யூ பேப்பர் மீது ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறம் படிந்து இருந்தால் அதில் ரசாயனம் கலக்கப்பட்டிருக்கிறது.
ஏரியூர் மஞ்சார அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட, நரசிமேடு பகுதியில், மாணவர் சேர்க்கைக்காக சென்றுகொண்டிருந்த தனியார் பள்ளி வேன் கவிழ்த்து விபத்து ஏற்பட்டது. இதில் மாணவர் சேர்க்கைக்காக சென்றதால் வாகனத்தில் பள்ளி குழந்தைகள் இல்லை. உள்ளே சில ஆசிரியர்கள் மட்டும் இருந்துள்ளனர், காயமடைந்த ஆசியர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள பென்னாகரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இடைப்பாடி அருகே, கல்வடங்கம் காவிரி ஆறு புனித தீர்த்தத்தலமாக விளங்குவதால், தினமும் இங்கு பல்வேறு ஊர்களில் இருந்து மக்கள் தீர்த்தம் எடுத்து செல்கின்றனர்.இந்நிலையில், கல்வடங்கம் காவிரி ஆற்றில், நேற்று ஒரு பெண் சடலம் மிதந்து வெளியே தெரிந்தது. இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர், தகவலின் பெயரில் விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு, விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.