India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <

தற்போது அரசின் சேவைகள் மட்டுமல்லாது, அனைத்திற்கும் ஆதார் தேவைப்படுகிறது. பல இடங்களில் நம்முடைய ஆதாரை நாம் தருகிறோம். அப்படியிருக்க, உங்களுக்கே தெரியாமல் ஆதார் misuse செய்யப்பட வாய்ப்புண்டு. இங்கு கிளிக் செய்து ஆதார் அட்டையை login செய்து misuse பண்றாங்களான்னு தெரிஞ்சுக்கோங்க. அப்படி இருந்தால், 1947 என்ற எண்ணில் புகார் செய்க. ஷேர் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்க.<<18878973>> தொடர்ச்சி.<<>>

<

தருமபுரி மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

ஒகேனக்கல், தாசம்பட்டி வனப்பகுதியில் நேற்று (ஜன.16) வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 8 வயதுக்குட்பட்ட ஆண் சிறுத்தை மர்மமான முறையில் இறந்து கிடந்தது. தகவல் அறிந்த மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் மற்றும் அதிகாரிகள் வனப்பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் சிறுத்தையின் உடல் வனப்பகுதியிலேயே எரிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தருமபுரி உழவர் சந்தையில் இன்றைய (ஜன.17) காய்கறி விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி (1 கிலோ) தக்காளி: ரூ.26, கத்தரிக்காய்: ரூ.20, வெண்டைக்காய்: ரூ.30, முள்ளங்கி: ரூ.10, அவரைக்காய்: ரூ.20, கொத்தவரை: ரூ.45, பச்சைமிளகாய்: ரூ.36, பப்பாளி: ரூ.30, கொய்யா: ரூ.50 மற்றும் முருங்கைக்கீரை (50-கிராம்) ரூ.15 என விற்பனை செய்யப்படுகின்றன.

மாரண்டஅள்ளி போலீசார் எம்.செட்டிஅள்ளி நேற்று (ஜன.16) ஏரிக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும் ஒருவர் தப்பி ஓட முயன்றார். அந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் அவர் எம்.செட்டிஅள்ளியை சேர்ந்த மணிகண்டன் (32) என்பதும், அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. மேலும் போலீசார் அந்த இளைஞரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

நல்லம்பள்ளியை அடுத்த தேவர் ஊத்துப்பள்ளத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி குமரேசன் (34). இவர் சம்பவத்தன்று இரவு அவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் தவறி விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் முயற்சித்தும் காப்பாற்ற முடியாத நிலையில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் வருவதற்குள் குமரேசன் கிணற்றில் மூழ்கி இறந்தார். இதுகுறித்து அதிய மான்கோட்டை போலீசார் விசாரணை நடத்தினர்.

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு – இன்று (ஜன.17) காலை வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் ராஜசுந்தர் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் ராமர், தொப்பூரில் கேசவன் , மதிகோன்பாளையத்தில் முத்து மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு – இன்று (ஜன.17) காலை வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் ராஜசுந்தர் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் ராமர், தொப்பூரில் கேசவன் , மதிகோன்பாளையத்தில் முத்து மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.