Dharmapuri

News April 2, 2025

கஞ்சா, கள், சாராயம் விற்ற பெண்கள் உட்பட 63 பேர் கைது

image

அரூர் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் வசந்தா தலைமையில் அரூர் கோட்டத்தில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவலர்கள் கடந்த மாதம் நடத்திய சோதனையில், மதுபானம் விற்பனை செய்து 7 பெண்கள் உட்பட 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 661 மது பாட்டில்கள், 324 லிட்டர் கள், 2 கிலோ கஞ்சா, 32 லிட்டர் சாராயம் மற்றும் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக நேற்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

News April 2, 2025

காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? ஆட்சியர் அதிரடி

image

தர்மபுரி மாவட்டத்தில் பேருந்துகள் வருகை, கால அட்டவணை உள்ளிட்டவை குறித்தும், குடிநீர் வசதி, தாய்மார்கள் பாலூட்டும் அறை மற்றும் அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வு அறை வசதிகள் குறித்தும், கடைகளில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் சதிஷ் அவர்களால் நேற்று இரவு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது

News April 1, 2025

அசுத்தமான பேருந்து நிலைய கழிப்பறை; பைன் போட்ட கலெக்டர்

image

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் இன்று தருமபுரி நகர மற்றும் புறநகர் பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்கள் பயன்படுத்தும் கழிப்பிடம் மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். அப்போது பேருந்து நிலையத்தில் அசுத்தமாக இருந்த கழிவறையை முறையாக பராமரிக்காத ஒப்பந்ததாரருக்கு 5,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார். ஆட்சியர் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. ஷேர் பண்ணுங்க

News April 1, 2025

சோதனை செய்த பிறகே தர்பூசணியை வாங்குங்கள்

image

கடைகளில் இருந்து தர்பூசணி பழங்கள் வாங்கும் போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். சோதனை செய்து பார்த்த பிறகே, தர்பூசணி பழத்தை வாங்குங்கள். ரசாயனம் சேர்க்கப்பட்ட தர்பூசணி பழங்கள் விரைவாக கெட்டு விடும் என்பதால், சில பழங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து அவற்றில் இந்த ரசாயனத்தை கலந்து ஜூஸ் போடுவதாகக் கூறப்படுகிறது. லாபம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக பழங்களில் ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன.

News April 1, 2025

ரசாயனம் கலந்த தர்பூசணியா? ஒரு டிஷ்யூ பேப்பர் போதும்

image

ரசாயனங்களை தண்ணீரில் கலந்து அதனை ஊசி மூலமாக தர்பூசணி பழங்களுக்குள் செலுத்துவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் குமார் அண்மையில் தெரிவித்தார். ரசாயனம் சேர்க்கப்பட்ட தர்பூசணி பழங்கள் அனைத்தும் பார்ப்பதற்கு மிகவும் சிவந்து போய் இருக்கும். அதன் மீது ஒரு டிஷ்யூ பேப்பரை வைத்து தேய்க்கும்போது, டிஷ்யூ பேப்பர் மீது ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறம் படிந்து இருந்தால் அதில் ரசாயனம் கலக்கப்பட்டிருக்கிறது.

News April 1, 2025

தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து

image

ஏரியூர் மஞ்சார அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட, நரசிமேடு பகுதியில், மாணவர் சேர்க்கைக்காக சென்றுகொண்டிருந்த தனியார் பள்ளி வேன் கவிழ்த்து விபத்து ஏற்பட்டது. இதில் மாணவர் சேர்க்கைக்காக சென்றதால் வாகனத்தில் பள்ளி குழந்தைகள் இல்லை. உள்ளே சில ஆசிரியர்கள் மட்டும் இருந்துள்ளனர், காயமடைந்த ஆசியர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள பென்னாகரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News April 1, 2025

காவிரி ஆற்றில்மிதந்த பெண் சடலம்

image

இடைப்பாடி அருகே, கல்வடங்கம் காவிரி ஆறு புனித தீர்த்தத்தலமாக விளங்குவதால், தினமும் இங்கு பல்வேறு ஊர்களில் இருந்து மக்கள் தீர்த்தம் எடுத்து செல்கின்றனர்.இந்நிலையில், கல்வடங்கம் காவிரி ஆற்றில், நேற்று ஒரு பெண் சடலம் மிதந்து வெளியே தெரிந்தது. இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர், தகவலின் பெயரில் விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு, விசாரித்து வருகின்றனர்.

News March 31, 2025

இரயில்வே அமைச்சருக்கும் பரிந்துரை கடிதம்

image

தர்மபுரி மாவட்ட இரயில்வே பயணிகள் சங்க தலைவர் திரு, ஸ்ரீதர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று தர்மபுரி மாவட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டும் மத்திய இரயில்வே அமைச்சர் மரியாதைக்குரிய திரு அஸ்வினிவைஷ்ணவ் அவர்களுக்கு மெயில் மூலமாகவும் கடிதம் மூலமாகவும் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தர்மபுரியில் இருந்து சென்னைக்கு நேரடி ரயில் சேவை இயக்க பரிந்துரைத்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

News March 31, 2025

அரசு மருத்துவமனையில் தற்காலிக பணி

image

அரசு தர்மபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 8 பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி புரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் முதல்வர் அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி அலுவலகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் ஏப்ரல் 04ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News March 31, 2025

பாதுகாப்பு படையில் வேலை: விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு

image

இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 133 காவலர் பணியிடங்களுக்கு வரும் ஏப்ரல் 2ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரூ.21,700 – 69,100 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேசிய, மாநில, பல்கலை., அளவிலான போட்டிகளில் 3ஆவது இடமாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். விளையாட்டு திறன், உடற்தகுதி, மருத்துவ தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். ஷேர் <>பண்ணுங்க.<<>>

error: Content is protected !!