India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கொங்கவேம்பு அருகே உள்ள வள்ளுவர்புரம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 35). இவர் நேற்று மது போதையில் அங்குள்ள கிணற்றில் இறங்கி மீன் பிடிக்க சென்றுள்ளார். அப்போது மது போதையில் தவறுதலாக கிணற்றில் விழூந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அரூர் தீயணைப்புத் துறையினர் கோவிந்தசாமியின் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி உதவியாளர், எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 47 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இளநிலை பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும். மாதம் ரூ.20,600 முதல் ரூ. 2,05,700 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கில் வரும் மே.5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற இரு சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.கிருஷ்ணகிரி மற்றும் பெங்களூருவை சேர்ந்தவர்கள் விடுமுறைக்கு ஆலம்பாடி காவிரி ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது, பாக்கிய லட்சுமி மற்றும் காவியா இருவரும் ஆழமான பகுதிக்குள் சென்றதால் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது . தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் சிறுமிகளின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தருமபுரி நகராட்சியில் பெண் தூய்மைப் பணியாளர்களை இரவு நேரங்களில் பணியாற்ற நிர்பந்திப்பதை தடுக்கக் கோரி ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை தொழிலாளர் சங்கம் சார்பில் தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்துக்கு கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த மனுவில் “ பெண் தூய்மைப் பணியாளர்கள் இரவு 11 மணி வரை வேலை செய்கிறார்கள். பெண் தொழிலாளர்கள் இரவு நேரங்களில் பணியாற்றுவதை நிறுத்த உத்தரவிட வேண்டும்’ என்றார்
மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!
நல்லம்பள்ளியில் தவறான சிகிச்சையால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹோமியோபதி மருத்துவம் படித்த கிருஷ்ணசாமி காலில் காயத்துடன் வந்த கோவிந்தராஜிக்கு அலோபதி சிகிச்சை அளித்ததில் உயிரிழந்தார். விஷயம் வெளியே தெரியாமல் இருக்க மருத்துவமனை நிர்வாகத்தினர் அவரின் குடும்பத்தினரிடம் ரூ. 10 லட்சம் பேரம் பேசியதாகக் கூறப்படும் நிலையில், அங்கு மாவட்ட சுகாதாரத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
தருமபுரி, குமாரசாமி பேட்டையில் வீற்றிருக்கும் சிவசுப்பிரமணிய சுவாமி மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். முருகனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க
இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கு 11/05/2025 வரை ஆன்லைன் வழியாக இந்த <
தருமபுரி மாவட்டம் NMMS தேர்வில் 387 மாணவர்கள் வெற்றி பெற்று மாநில அளவில் தர்மபுரி மாவட்டம் 5 ஆம் இடத்தை பெற்றுள்ளது.மேலும் புதியதாக பொறுப்பேற்ற தலைமை ஆசிரியர் தலைமையின் கீழ் இயங்கும் தருமபுரி ஔவையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 16 பேர் தேர்ச்சி பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளது. இப்பள்ளிக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
தருமபுரி மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 135 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன. வட்டாரம் வாரியாக நேரடி நியமனம் செய்யப்படவுள்ள சமையல் உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை, அந்தந்த வட்டார அலுவலகங்களில் இனசுழற்சி வாரியாக தகவல் பலகையில் ஒட்டப்படும் என ஆட்சியர் சதிஷ் தகவல் தெரிவித்துள்ளார். *செம வாய்ப்பு. தெரிந்த பெண்களுக்கு பகிரவும்*
Sorry, no posts matched your criteria.