India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தர்மபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் பயன்பாட்டில் இருந்த வாகனம் கழிவுநீக்கம் செய்யப்பட்டு வரும் 21ஆம் தேதி அன்று முற்பகல் 11 மணியளவில் தருமபுரி மாவட்ட உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகத்தில் பொதுஏலம் விடப்படுகிறது. எனவே ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் முன்வைப்புத் தொகை வங்கி வரைவு செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.
இந்திய அரசின் சார்பில் 2025 ஆம் ஆண்டிற்கான பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகள் குடியரசு தினத்தன்று வழங்கப்படவுள்ளது. இந்த விருதுகளுக்கு தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தகுதியுடையவர்கள் www.padmaawards.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 21 என மாவட்ட ஆட்சியர் இன்று(ஜூன் 13) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தர்மபுரி அரசு கலை கல்லூரிகளில், 2024-202ஆம் ஆண்டிற்கான இளநிலை படிப்புகளுக்கு 2ஆம் சுற்று மாணவர் சேர்க்கை இன்று முதல் வரும் 15ஆம் தேதி வரை கல்லூரி கலையரங்கில் காலை 10 மணி முதல் நடைபெறுகிறது. இதில், மாணவர்கள் கட்டாயம் பெற்றோர்களுடன் கலந்தாய்வில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு www.gacdpi.ac.in அறிந்து கொள்ளலாம்.
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரிய வெங்காயம் 1 கிலோ ₹30 ரூபாய் முதல் ₹35 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று₹10 முதல் ₹11 ரூபாய் வரை விலை உயர்ந்து, உழவர் சந்தையில் ₹46 ரூபாய் எனவும், வெளி மார்க்கெட்டில் ₹50 ரூபாய் எனவும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
கோவையில் நடைபெறும் முப்பெரும் விழாவில், அனைத்து திமுகவினருக்கு பங்கேற்க வேண்டுமென தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பழனியப்பன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, முதல்வருக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா கோவையில் நடைபெற உள்ளது. இதில் திமுகவினர் அனைத்து பங்குபெற வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (ஜூன்.12) குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவது குறித்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காவல் உயர் அதிகாரிகள், காவலர்கள் காவல் அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டு குழந்தை தொழிலாளர் முறையினை ஒழிப்பது குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய காவலர்களுக்கு இணையவழி குற்றங்கள் தொடர்பான புகார்களை பதிவு செய்வது, தொலைந்து போன செல்போனை கண்டறிவது குறித்து மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியன் தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் காவல்துறையினர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தர்மபுரி; தமிழ்நாடு திறன் மே.கழக வழிகாட்டுதலின்படி தென்னிந்தியா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி சங்கத்தின் மூலமாக 10, 12ஆம் வகுப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில்நுட்ப ஜவுளி பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேற்படி பயிற்சியினை பெற விரும்புபவர்கள் https://tn textiles.tn.gov.in/jobs/என்ற இணையதள முகவரியில் தங்களது விபரங்களை செய்து பயன்பெற கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.
பொம்மிடி ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிப்பட்டு 40 வயது மதிக்கத்தக்க பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இவரது பிரேதத்தை மீட்டு விசாரித்ததில் உறவினர்கள் யாரும் இல்லாத ஆதரவற்றவராக இருந்துள்ளார்.அவரை இன்று (ஜூன் 13) மாலை சேலம் இருப்புப்பாதை காவலர் அருள்குமார், மை தருமபுரி அமரர் சேவை சார்பாக முஹம்மத் ஜாபர், அருண் பிரசாத், தென்றல் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், மிட்டாரெட்டிஅள்ளி முதல் பொம்மிடி சாலையின் இடையே வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் 800 மீட்டர் மண் சாலையை ஜல்லி தார்சாலை அமைக்க சாத்தியக்கூறுகள் உள்ளதா என சட்டமன்ற உறுப்பினர், கூடுதல் ஆட்சியர், வனத்துறை, வருவாய் துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கி. சாந்தி இன்று (ஜூன் 12) நேரடியாக கள ஆய்வு செய்தார்.
Sorry, no posts matched your criteria.