Dharmapuri

News July 3, 2024

உழவர் சந்தையில் கலெக்டர் ஆய்வு

image

தருமபுரி மாவட்டம் ஏ.ஜெட்டிஅள்ளி உழவர் சந்தையில் அடிப்படை வசதி குறித்து, தூய்மை பணிகள் நடைபெற்று வருவது குறித்தும் தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி நேற்று (ஜூலை 2) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்வில் வேளாண்மை இயக்குனர் இளங்கோவன், உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News July 3, 2024

மாவட்ட அளவிலான கட்டுரை, பேச்சு போட்டி

image

தர்மபுரி மாவட்டத்தில் 2024-25ஆம் ஆண்டு தமிழ்நாடு நாளை முன்னிட்டு கட்டுரை, பேச்சு போட்டி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரும் 9ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த போட்டிகளில் அனைத்து பள்ளிகளிலும் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News July 2, 2024

பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடனுதவி திட்டம்

image

தருமபுரி மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினரின் பொருளாதார முன்னேற்றத்திற்காக சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழு கடன் வழங்கப்படுகின்றது. மேலும் விபரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலகத்தை அணுகி அறிந்து கொள்ளலாம் என ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.

News July 2, 2024

தருமபுரி; சைபர் கிரைம் போலீசார் அறிவிப்பு

image

தருமபுரி மாவட்ட சைபர் க்ரைம் காவல் துறை சார்பாக விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கியும் ஆட்டோக்களில் விழிப்புணர்வு பதாகைகளை ஒட்டியும் பொது மக்களிடையே சைபர் க்ரைம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் https://cybercrime.gov.in/இணையதளத்திலும், 1930 சைபர் கிரைம் உதவி எண்ணில் தொடர்பு கொண்டும் புகார் பதிவு செய்யலாம் என மாவட்ட காவல்துறையினர் நேற்று (ஜூலை.1) தெரிவித்துள்ளனர்.

News July 2, 2024

தருமபுரி: மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது

image

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. நிகழ்விற்கு மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமை தாங்கினார். இதில், இலவச பட்டா, வீட்டுமனை, இலவச ஸ்கூட்டர், மிதிவண்டி, உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகளுக்கு பொதுமக்களிடமிருந்து 631 மனுக்கள் பெறப்பட்டன. தொடர்ந்து மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

News July 2, 2024

ஆட்சியரகத்தில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

image

உலக மக்கள் தொகை தினம் வரும் ஜூலை.11 அன்று கொண்டாடுவதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில், அனைத்து துறைக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தலைமை தாங்கினார். இதில், உலக மக்கள் தொகை தினத்தை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், அன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் விவாதித்தனர்.

News July 1, 2024

நாளை சிறப்பு கிராம சபை கூட்டம்

image

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளில் கலைஞர் கனவு இல்லம் மற்றும் ஊரகக் குடியிருப்பு பழுது பார்க்கும் திட்ட சிறப்பு கிராம சபை கூட்டம் நாளை (02/07/2024) காலை 11 மணிக்கு நடத்தப்பட உள்ளது. அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர் மேற்படி நாளில் கிராம சபை கூட்டம் நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வார்கள் என மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தெரிவித்துள்ளார்.

News July 1, 2024

ரூ.1 லட்சத்திற்கான வங்கிக் காசோலை வழங்கிய ஆட்சியர்

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் இன்று (ஜூலை 1) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், அரூர் வட்டம் வேப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்த அருண் என்பவர் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி இறந்ததற்கு, அவரது மனைவி பூவரசி என்பவருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சத்திற்க்கான வங்கிக் காசோலையை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வழங்கினார்.

News July 1, 2024

தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாமை தொடங்கி வைத்த ஆட்சியர்

image

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் ஏ.ஜெட்டி அள்ளி ஊராட்சி, அவ்வை நகர் அங்கன்வாடி மையத்தில் இன்று(ஜூலை 1)பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் மற்றும் வைட்டமின் A திரவம் வழங்கும் பணிகளை தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி துவக்கி வைத்தார்.

News June 30, 2024

முதல்வருக்கு நன்றி தெரிவித்த திமுக மாவட்ட செயலாளர்

image

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் இளைஞர்களின் நலன் காக்க சிறு விளையாட்டு அரங்கம் அமைப்பதாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்ததை அடுத்து நேற்று (ஜூன் 29) தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தமிழக முதல்வர் முக ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆகியோருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

error: Content is protected !!