Dharmapuri

News July 5, 2024

மண் எடுக்க விண்ணப்பிக்கலாம்- ஆட்சியர்

image

தர்மபுரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 95 நீர் நிலைகளில் விவசாய மற்றும் மண்பாண்ட தொழிலுக்கு இலவசமாக வண்டல் மண், களிமண் எடுக்க அரசிதழ்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதை dharmapuri.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் வண்டல் மண்,களிமண் எடுத்து செல்ல https://tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 5, 2024

தருமபுரியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட வட்டங்களை சேர்ந்த விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்காக விவசாயிகளின் குறைதீர் கூட்டம் இன்று(ஜூலை 5) காலை 11 மணியளவில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளும் என அனைவரும் கலந்து கொள்ளுமாறு வருவாய் கோட்ட அலுவலர் காயத்ரி அவர்கள் தெரிவித்துள்ளார்.

News July 4, 2024

தருமபுரியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட வட்டங்களை சேர்ந்த விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்காக விவசாயிகளின் குறைதீர் கூட்டம் (05/07/2024) வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளும் என அனைவரும் கலந்து கொள்ளுமாறு வருவாய் கோட்ட அலுவலர் காயத்ரி அவர்கள் தெரிவித்துள்ளார்.

News July 4, 2024

தலைவர்களின் பிறந்தநாளுக்கான பேச்சு போட்டிகள்

image

தர்மபுரி மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கர், முத்தமிழறிஞர் கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் ஜூலை 10 மற்றும் 11 ஆகிய நாட்களில் தர்மபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முற்பகல் 9.00 மணிக்கு நடைபெறுகிறது. எனவே இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

News July 4, 2024

சட்டவிரோத மின் இணைப்புகள் மீது நடவடிக்கை

image

தர்மபுரி மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் இன்று (ஜூலை 4) வெளியிட்டுள்ள அறிக்கையில்; தர்மபுரி மாவட்டத்தில் வனவிலங்குகளை பாதுகாக்க வனத்துறையின் சார்பில் தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், வனவிலங்குகள் மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தடுக்கப்பட வேண்டும் எனவும் விவசாய நிலங்களில் சட்டவிரோதமாக மின் இணைப்புகள் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

News July 4, 2024

பட்டய கணக்காளரிடமிருந்து விருப்ப உரிமை வரவேற்பு

image

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சமுதாய அமைப்புகளான மகளிர் சுய உதவி குழுக்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் வட்டார அளவிலான கணக்காளரிடமிருந்து 2023-2024 ஆம் ஆண்டிற்கான தணிக்கை மேற்கொள்வதற்கு விருப்பமுள்ள பட்டய கணக்கிட்டாரிடமிருந்து விருப்ப உரிமை கோரிக்கைகள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு 04342-233298 எண்களின் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி தெரிவித்துள்ளார்.

News July 4, 2024

ஓய்வூதியர் குறைதீர் முகாம்

image

தர்மபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் நேற்று ( ஜூலை 3 ) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தர்மபுரி அஞ்சல் கோட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர் முகாம் தலைமை தபால் நிலையத்தில் நடைபெற உள்ளது. ஓய்வூதியர்கள் ஏதேனும் குறைகள் இருந்தால் புகார்களை டி.ஓ. பென்ஷன் அதலாத் என தபால் உறையின் மீது எழுதி கோட்டக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சேரும்படி வருகின்ற 8ஆம் தேதிக்குள் அனுப்பலாம்” என தெரிவித்துள்ளார்.

News July 3, 2024

தர்மபுரி: ஓய்வூதியர் குறைதீர் முகாம்

image

தர்மபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் இன்று ( ஜூலை 3 ) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தர்மபுரி அஞ்சல் கோட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர் முகாம் தலைமை தபால் நிலையத்தில் நடைபெற உள்ளது. ஓய்வூதியர்கள் ஏதேனும் குறைகள் இருந்தால் புகார்களை டி.ஓ. பென்ஷன் அதலாத் என தபால் உறையின் மீது எழுதி கோட்டக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சேரும்படி வருகின்ற 8ஆம் தேதிக்குள் அனுப்பலாம்” என தெரிவித்துள்ளார்.

News July 3, 2024

எஸ்.பி தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம்

image

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரம்தோறும் புதன்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி தருமபுரி மாவட்ட காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளில், இரு தரப்பினரையும் அழைத்து தீர்வு காணும் வகையில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது.

News July 3, 2024

தர்மபுரி: இன்று முதல் ஜூலை 5 வரை

image

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2024-25ஆம் கல்வி ஆண்டிற்கான கல்லூரிகளில் சேர இதற்கு முன் விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, சேர்க்கைக்கு மாணவ மாணவிகள் இன்று (ஜூலை 3) முதல் (ஜூலை 5) தேதி வரை www.tngasa.in என்ற இணையதளத்தில் சென்று உடனடியாக விண்ணப்பம் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

error: Content is protected !!