India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாளையம்புதூரில் இன்று நடைபெறும் அரசு விழாவில் தமிழக முதல்வர் கலந்து கொள்வதை முன்னிட்டு மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐஜி புவனேஸ்வரி மேற்பார்வையில் 2 டிஐஜிக்கள், தர்மபுரி எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் உட்பட 4 போலீஸ் சூப்பிரண்டுகள், தர்மபுரி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, கோவை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 1300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அரசு விழாவில் பங்கேற்பதற்காக இன்று(ஜூலை 11) தருமபுரி வருகை தருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னையிலிருந்து சேலம் விமான நிலையம் வந்து, பின்னார் சாலை மார்க்கமாக தருமபுரி வருகிறார். ஊரகப் பகுதி மக்களும் பயன்பெறும் வகையில் மக்களுடன் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை தொடங்கி வைக்கிறார். 2023ல் இத்திட்டம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தருமபுரி மாவட்டம் பாளையம்புதூருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை(ஜூலை 11) வருகை தர உள்ளார். அரசு விழாவில் பங்கேற்க உள்ள அவருக்கு தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர். முதல்வர் வருகைக்காக கலெக்டர் தலைமையிலும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 9/7/24 முதல் 12/7/24 மற்றும் 15/7/24 வரை ஒரு வாரம் தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரமாக அனுசரிக்கப்படுகிறது. மேலும், www.tnskill.tn.gov.in என்ற இணையதளத்தில் திறன் பயிற்சி பற்றி விவரங்களை தெரிந்து கொண்டு தளத்திலோ திறன் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.
தருமபுரியில் படித்த வேலை வாய்ப்பற்றவர்களுக்கு அரசு உதவித்தொகை ரூ.200 முதல் ரூ.1,000 வரை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை பெற விரும்புவோர், தருமபுரி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று வருகின்ற ஜூலை 30-ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் நேரில் வழங்கி பயன்பெறுமாறு தருமபுரி ஆட்சியர் சாந்தி அறிவுறுத்தியுள்ளார்.
முப்படைகளில் பணிபுரிந்து ஒரு கால் மற்றும் இரண்டு கால்களும் செயலற்ற முன்னாள் படை வீரர்களுக்கு முன்னாள் படைவீரர் நலத்துறை மூலம் கைகளால் மட்டும் இயக்கக்கூடிய ஸ்கூட்டர் மட்டும் சிறப்பு நாற்காலிகள் வழங்கப்பட உள்ளன. மாற்றுத்திறனாளி புத்தகம், அடையாள அட்டையுடன் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் நேரில் அணுகி பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் காலியாக உள்ள தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதி உடையவர்கள் நாளை மாலை வரை விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2-ல் தேர்ச்சி பெற்ற நபர்கள் கல்வி சான்றிதழ் உடன் விண்ணப்பங்களை நேரடியாகவோ அஞ்சல் வழியாகவோ ஆதிதிராவிடர் நல அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தில் ஜூலை 11 முதல் செப்டம்பர் 4 ஆம் தேதி காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை 251 ஊராட்சிகளில் 70 இடங்களில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் பொதுமக்கள் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தெரிவித்துள்ளார். மக்களுடன் முகாமை தொடங்கி வைக்க தமிழக முதல்வர் தருமபுரி வருவது குறிப்பிடத்தக்கது.
தர்மபுரி மாவட்டத்தில் ஜூலை 11 முதல் செப்டம்பர் 4 ஆம் தேதி காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை 251 ஊராட்சிகளில் 70 இடங்களில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் பொதுமக்கள் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தெரிவித்துள்ளார். மக்களுடன் முகாமை தொடங்கி வைக்க தமிழக முதல்வர் தருமபுரி வருவது குறிப்பிடத்தக்கது.
அக்னிவீர் வாயு விமானப்படை திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்புக்கான தேர்வில் பங்கேற்க தகுதி உடையவர்கள் ஜூலை 8 ஆம் தேதி முதல் https://agnipathvayu.cdac.in/AV/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு வருகின்ற அக்டோபர் மாதம் 18ஆம் தேதி நடைபெற உள்ளது என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி நேற்று(ஜூலை 5)வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.