India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தருமபுரி மாவட்டத்தில் 241 கிராம ஊராட்சிகளிலும் 01/11/2025 இன்று காலை 11.00 மணி அளவில் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து ஊராட்சியில் உள்ள வாக்காளர்கள் பொது மக்கள் மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்று (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே<

தருமபுரி மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம்.தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

தருமபுரி மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் <

தமிழக முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உட்பட 37,770 பயனாளிகளின் இல்லத்திற்கு நேரில் சென்று பொது விநியோகத் திட்ட பொருட்கள் மாதம் தோறும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு நவம்பர் மாதத்திற்குரிய பொது விநியோகத் திட்ட பொருட்களை எதிர்வரும் நவம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதி வழங்கப்படும். என தருமபுரி ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தருமபுரியில் இன்று (நவ.01) மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் டி.என்.வி ராஜ் மஹாலில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 125க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, பத்தாம் வகுப்பு முதல் பட்டய படிப்பு வரை படித்து முடித்த வேலைவாய்ப்பற்றோர் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் 241 கிராம ஊராட்சிகளிலும் 01/11/2025 இன்று காலை 11.00 மணி அளவில் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து ஊராட்சியில் உள்ள வாக்காளர்கள் பொது மக்கள் மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் முழுவதும் (அக்.31) இரவு 9 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. காவலர் சூர்யா தலைமையில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்

தமிழக முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உட்பட 37,770 பயனாளிகளின் இல்லத்திற்கு நேரில் சென்று பொது விநியோகத் திட்ட பொருட்கள் மாதம் தோறும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு நவம்பர் மாதத்திற்குரிய பொது விநியோகத் திட்ட பொருட்களை எதிர்வரும் நவம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதி வழங்கப்படும். என தருமபுரி ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர் அறிவது. முன்னாள் படைவீரர்களின் 40 வயதிற்குட்பட்ட மனைவி / கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்களுக்கு இலவசமாக தையல் இயந்திரம் வழங்கப்படவுள்ளது. இதனால், மேற்காணும் தகுதியுள்ள முன்னாள் படைவீரர்களின் சார்ந்தோர்கள் தருமபுரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை அணுகி பயன் அடையுமாறு ஆட்சியர் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.