Dharmapuri

News April 4, 2025

தருமபுரி மாவட்டத்தில் மழை வெளுக்கும்

image

தருமபுரியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்தது. இந்நிலையில் நேற்று, காரிமங்கலம், பென்னாகரம், இண்டூர், தீர்த்தமலை போன்ற பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நாளை (ஏப்ரல்.5) தருமபுரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அண்டை மாவட்டங்களான சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News April 3, 2025

மகளிர் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் கலெக்டர்

image

மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் தனிநபர் வருமானம் பெருக்கும் நோக்கத்திலும் கிராம மட்டத்தில் 10, 20 பெண்களுடன் ஏற்படுத்தப்பட்ட குழுக்கள் ஆகும் இந்த குழுக்களுக்கு சுழல் நிதி கடன் பொருளாதார கடன் வங்கி கடன்கள் வழங்கப்படுகின்றது. இந்த கடன் உதவிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தர்மபுரி கலெக்டர் சதீஷ் அறிவுறுத்தியுள்ளார்.

News April 3, 2025

கல்வி உரிமைச் சட்டம் (RTE) – 2025 விண்ணப்ப விவரங்கள்

image

கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ், தனியார் பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்க விண்ணப்பிக்க தேவையான முக்கிய தகவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை LKG மற்றும் 1-ம் வகுப்பில் சேர்க்க விண்ணப்பிக்கலாம். ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். வரும் ஏப்ரல்.22 முதல் மே.20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தருமபுரி மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News April 3, 2025

தருமபுரியில் ஒரு ஊட்டி

image

மேலே நீங்கள் பார்க்கும் படம் ஊட்டியோ, கொடைக்கனலோ அல்ல. கிழக்குத்தொடர்ச்சி மலைகளுள் ஒன்றான சித்தேரிமலை தான். தருமபுரி பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள சித்தேரிமலை பசுமையான காடுகளையும், அழகிய மலை தொடர்களையும் செல்லும் வழி எங்கும் ரசித்துக் கொண்டே செல்லலாம். தற்போது வெயில் வாட்டி வைத்து வரும் நிலையில், இங்கு குடும்பத்துடன் சென்றால் அமைதியான சூழலில் பொழுதை கழிக்க இது ஒரு நல்ல ஸ்பாட். ஷேர் பண்ணுங்க

News April 3, 2025

ரயில்வே வேலை: ரூ.1 லட்சத்திற்கு மேல் சம்பளம்

image

ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும், இந்திய சரக்கு வழித்தட கழகம் (DFCCIL) நிறுவனத்தில் 642 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூனியர் மேனேஜர், எக்சிகியூட்டிவ், மல்டி டாஸ்க் ஸ்டாப் என பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். 2 கட்ட கணிணி வழி எழுத்து தேர்வு, உடல் திறன் தேர்வு இருக்கும். ஷேர் செய்யுங்கள்

News April 3, 2025

டூவீலரில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

image

பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த நம்பிப்பட்டி சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன்கள் வீரமணி (42), அழகிரி (40). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம், டூவீலரில் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது வேப்பநத்தம் – ஈச்சம்பாடி செல்லும் சாலையில் வந்தபோது, திடீரென டூவீலரில் இருந்து இருவரும் தவறி கீழே விழுந்தனர். இதில் படுகாயமடைந்த வீரமணி பரிதாபமாக உயிரிழந்தார். 

News April 2, 2025

தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸில் ஓட்டுநர் மற்றும் நர்ஸ் வேலை

image

தருமபுரி அரசு மருத்துவமனையில் வரும் ஏப்.05 அன்று 10AM- 2PM வரை 108 ஆம்புலன் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுனருக்கான நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. ஒட்டுனர்களுக்கு 10 வகுப்பில் தேர்ச்சியும், மருத்துவ உதவியாளருக்கு பி.எஸ்.இ நர்ஸ்ங் முடித்திருக்க வேண்டும். 19-35 வயதுடையோர் அசல் சான்றிதழ்களுடன் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம். 10 வகுப்பு தேர்ச்சி பெற்ற நண்பர்களுக்கு பகிரவும்

News April 2, 2025

தர்மபுரியில் அடுத்த மாதம் ஜல்லிக்கட்டு?

image

வீரத்தமிழன் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் தர்மபுரி மாவட்டம் சோகத்தூர் பகுதியில் 20.5.2025 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக அழைப்பிதழ்கள் வெளியாகி உள்ளது. தர்மபுரியில் ஏற்கனவே ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு பணிகள் முடிந்து ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதி குறிப்பிடப்படாமல் ஒரு பிரிவு ஜல்லிக்கட்டு தொடங்காமல் நிலுவையில் உள்ளது.

News April 2, 2025

தர்மபுரியில் இலவச உயர்கல்வி வழிகாட்டி முகாம் அறிவிப்பு

image

பள்ளிப்படிப்பை நிறைவு செய்த மாணவ மாணவிகள் தங்களது உயர் படிப்பை “எங்கு படிக்கலாம் என்ன படிக்கலாம்” என்ற தலைப்பின் கீழ் நாளை (ஏப்.3) தர்மபுரி நான்கு ரோடு பகுதியில் உள்ள ரோட்டரி ஹாலில் முன்னணி பல்கலைக்கழகங்கள் பங்கு பெறும் இலவச உயர் கல்வி வழிகாட்டி நிகழ்வு நடைபெறுகிறது. இதில், கலந்துகொண்டால் மாணவர்களுக்கு நிச்சயம் ஒரு தெளிவு கிடைக்கும். உங்களுக்கு தெரிந்த மாணவர்களுக்கு பகிர்ந்து தெரியப்படுத்தவும்.

News April 2, 2025

தர்மபுரியில் விவசாயிகள் குறைத்தீர் கூட்டம் அறிவிப்பு

image

தர்மபுரி மாவட்ட வன அலுவலகத்தில் வரும் 4ஆம் தேதி காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் தர்மபுரி மாவட்ட வன வட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளையும் கருத்துகளையும் தெரிவித்து பயன்பெறுமாறு DFO ராஜாங்கம் தகவல் தெரிவித்துள்ளார். *குறைத்தீர் கூட்டத்தில் வழங்கப்படும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, மறக்காம கலந்துக்கோங்க. ஷேர்.

error: Content is protected !!