India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புயல் எதிரொலியாக பல மாவட்டங்களில் விடியவிடிய பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் தருமபுரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.இந்நிலையில் தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டு கொல்லப்படுகின்றனர்.
பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு 2024-2025 ஆம் ஆண்டிற்கான அவ்வையார் விருது 08.03.2025உலக மகளிர் தினவிழாவில் மாண்புமிகு தமிழகமுதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட உள்ளது விருதுகள் @(https://award.tn.gov.in) 18.11.2024-5இவ்விருதுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்.31.12.2024இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் ஆட்சியர் சாந்தி தெரிவித்தார்
தருமபுரி அருகே அலகட்டு கிராமத்தில் பாம்பு கடித்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு நிதியுதவி என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும், பாம்பு கடித்து உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கும், அவரது உறவினர்களுக்கும் இரங்கலை தெரிவித்துள்ளார். இந்நிலையில், முதலமைச்சர் அறிவித்த ரூ.3 லட்சத்திற்கான காசோலையை முன்னாள் எம்எல்ஏ தடங்கம் சுப்பிரமணி குழந்தையின் பெற்றோரிடம் வழங்கினார்.
தருமபுரி மாவட்ட தோட்டக்கலை துறை துணை இயக்குனர் பாத்திமா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 2024-25ம் ஆண்டு ராபி பருவ தோட்டக்கலை பயிர்களான வாழை, வெங்காயம், கத்திரிக்காய், வெண்டை, தக்காளி பயிர்களுக்கு பிரீமியம் செலுத்த அடுத்த ஆண்டு ஜன.31 கடைசி நாளாகும் எனவே விவசாயிகள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலையில் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக டிச.1 ஆம் தேதி தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்
இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற தருமபுரி மாவட்ட இதர பிற்படுத்தப்பட்டோர் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் சீர்மரபினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த மாணவ மாணவிகள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி நேற்று தெரிவித்துள்ளார்.
இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற தருமபுரி மாவட்ட இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தேசிய கல்வி உதவித்தொகை / National Scholarship Portal மூலம் நவ.30ஆம் தேதிகுள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை முற்பகல் 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெறுகிறது. தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான குறைகளையும் கருத்துகளையும் எடுத்துக் கூறி பயனடையலாம் என ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.
வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக விவசாயிகள் எளிதில் பணி மேற்கொள்ள வேளாண் இயந்திரமக்கள் துணை இயக்க திட்டத்தின் கீழ் அலைபேசி வழியாக செயல்படுத்த மின் மோட்டார் 40% மானியம் அல்லது அதிகபட்சமாக மானியத்தொகை ரூ.4000 வரை வழங்கப்படுகின்றது. மேலும் விவரங்களுக்கு; 04342 296132 தொடர்பு கொள்ளலாம் தர்மபுரி கலெக்டர் சாந்தி நேற்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.