Dharmapuri

News April 8, 2025

தருமபுரி மாவட்ட குறைத்தீர் கூட்டம் நிறைவு

image

தருமபுரி மாவட்டத்தில் (07/04/25) இன்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு பகுதி மக்களும் தங்களது குறைகளை எடுத்துரைத்து மனு வழங்கினர். இதில், பொதுமக்கள் இலவச பட்டா, இலவச வீட்டு மனை, இலவச ஸ்கூட்டர், மிதிவண்டி உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம் போன்ற 808 மனுக்களை வழங்கியுள்ளனர். இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சதீஷ் அறிவுறுத்தி உள்ளார்.

News April 7, 2025

தர்மபுரி இளைஞர் வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்

image

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே நெருப்பூர் வனப்பகுதியில் யானையை கொன்ற வழக்கில் வனத்துறையிடம் தப்பி ஓடியதாக கூறப்பட்ட செந்தில் சரகாடு வனப்பகுதியில் அழுகிய நிலையில் மீட்கப்பட்டார். இதையடுத்து, அவரது உறவினர்கள் இது தற்கொலை அல்ல கொலை என்று குற்றஞ்சாட்டி வந்தனர். இந்நிலையில், இவ்வழக்கு இன்று சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. 

News April 7, 2025

தருமபுரியில் கட்டாயம் போக வேண்டிய விநாயகர் கோவில்கள்

image

ஏழுர் பிள்ளையார் கோவில், சாலை விநாயகர் கோயில்- தருமபுரி, கணேசசாமி கோவில் – நாகமரை, ராககான பிள்ளையார் கோவில்-நடுஅள்ளி, பசுவண்ண பிள்ளையார் கோவில்- பென்னாகரம், பாலி விநாயகர் கோவில்-அரூர், ஆகாசவிநாயகர் கோவில்-குரும்பட்டி, சுந்தரவிநாயகர் கோவில்- கம்பைநல்லூர், இரட்டை விநாயகர் கோவில்-பாரூர், ஜோதி விநாயகர் கோவில்-பாலக்கோடு, சக்தி விநாயகர் கோவில்-சந்தைப்பேட்டை.*கண்டிப்பாக போங்க. நண்பர்களுக்கும் பகிருங்கள்

News April 7, 2025

பால் உற்பத்தியில் தர்மபுரி மாவட்டம் முன்னிலை

image

தர்மபுரி ஆவின் நிர்வாகத்தினர் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் பால் உற்பத்தியில் தர்மபுரி உற்பத்தியாளர்கள் தினசரி 1.20 லட்சம் லி. சென்னைக்கு அனுப்புகின்றனர். மாவட்ட நுகர்வோர் தேவைக்கு ஒரு நாளுக்கு 7000 லிட்டர் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், மாவட்டத்தில் 132 ஆவின் பாலகங்கள், 3 ஹைடெக் பாலகங்கள் என மாதம் ரூ.16.50 லட்சத்திற்கு பால் பாக்கெட்கள் விற்கப்படுகின்றன” என குறிப்பிட்டுள்ளனர்.

News April 7, 2025

அங்கன்வாடி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

image

தர்மபுரி மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து ஏப்ரல் 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். இதற்கு 25-35 வயதுடைய 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News April 7, 2025

மக்கள் குறை தீர்க்கும் நடைமுறைகள்

image

பொதுமக்கள் தங்களுடைய குறை சார்ந்த மனுக்களை <>இந்த முனையத்தில் <<>>கிளிக் செய்து சமர்ப்பிக்கலாம். ஆரம்பநிலை பரிசீலனைக்குப் பிறகு, சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு மனுவும் சமர்ப்பிக்கப்படும் போதும் மற்றும் தீர்வின் போதும் மனுதாரர் ஒரு குறுந்தகவலைப் பெறுவார். இவ்வசதியைப் பயன்படுத்த, ஒரு கைபேசி எண் அவசியம். ஷேர் செய்யுங்கள்

News April 7, 2025

சரக்கு லாரி மோதி ஊழியர் பலி

image

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கல்கூடப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் மீது சரக்கு லாரி மோதியதில், நிதி நிறுவன ஊழியர் ராஜா பலியானார். இந்த தகவலறிந்த பாலக்கோடு போலீசார் விரைந்து சென்று, காயமடைந்தவரை அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். ராஜாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

News April 6, 2025

தர்மபுரி மாவட்ட மக்களுக்கு தெரிய வேண்டிய எண்கள்

image

தர்மபுரி ஆட்சியரகம் 04342231500, எஸ்.பி 9498101055, வருவாய் அலுவலர் 9445000908, பேரிடர் கால உதவி-1077, காவல் கட்டுப்பாட்டு அறை-100, தீத்தடுப்பு- 101, அவசர கால ஊர்தி உதவி- 102, விபத்துக்கால உதவி- 108, குழந்தைகள் உதவி- 1098, பாலியல் வன்கொடுமை தடுப்பு- 1091, BSNL உதவி-1500, மாநில கட்டுப்பாட்டு அறை- 1070. *மிக முக்கிய எண்களான இவற்றை உங்களுக்கு தெரிந்த பெண்கள், பெற்றோர் உள்ளிட்ட அனைவருக்கும் பகிரவும்.

News April 6, 2025

தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்த தருமபுரி நிர்வாகி

image

திமுக இளைஞரணி மாநிலத் துணைச் செயலாளரும் சேலம் தருமபுரி 4 வது மண்டல பொறுப்பாளருமான சீனிவாசன் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவர் மு க ஸ்டாலினை இன்று சந்தித்து புத்தகம் வழங்கி வாழ்த்துக்களை பெற்றார். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் என பலரும் உடன் இருந்தனர்.

News April 6, 2025

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை

image

சென்னை உயர்நீதிமன்றத்தில் சோப்தார், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 392 பணியிடங்கள் உள்ளன. ரூ.15,700 – ரூ.58,100 சம்பளம் வழங்கப்படும். 8 முதல் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து வரும் மே மாதம் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!