India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வங்கக்கடலில் நிலவியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தருமபுரி மாவட்டத்தில் நேற்றிரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. அரூர், பொம்மிடி, கடத்தூர், மானியதஅள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, கோட்டப்பட்டி ஆகிய பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருகெடுத்து ஓடுவதால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். உங்க ஏரியாவில் மழையா?
கலைஞர் கைவினைத் திட்ட மூலம் ரூ.3 லட்சம் வரை பிணையற்ற கடன் உதவி, ரூ.50,000 மானியம் 5 சதவீதம் வரை வட்டி மானியம், திறன் மேம்பாட்டிற்கான சிறப்பு பயிற்சிகள், மேலும் கலைஞர் கைவினை திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புவோர் msmeonline.tn.gov.in இணையதளத்திற்கு செல்லவும் அல்லது மாவட்ட தொழில் மையத்தை தொடர்பு கொள்ளலாம்.
கலைஞர் கைவினைத் திட்ட மூலம் ரூபாய் மூன்று லட்சம் வரை பிணையற்ற கடன் உதவி, ரூபாய் 50000 மானியம் ஐந்து சதவீதம் வரை வட்டி மானியம், திறன் மேம்பாட்டிற்கான சிறப்பு பயிற்சிகள், மேலும் கலைஞர் கைவினை திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புவோர்msmeonline.tn.gov.in இணையதளத்திற்கு செல்லவும் அல்லது மாவட்ட தொழில் மையத்தை தொடர்பு கொள்ளலாம்.
2025-ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று வழங்கப்படவுள்ள கபீர் புரஸ்கார் விருதிற்கான தகுதியானவர்களை விண்ணப்பங்கள்/பரிந்துரைகள் இந்த தெரிவு நோக்கத்திற்காக செய்வதற்கான வடிவமைக்கப்பட்ட https://awards/tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே 15.12.2024 அன்று அல்லது அதற்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்தார்.
மாவட்ட அளவிலான 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கையுந்து பந்து போட்டி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. அதில் அரசு மேல்நிலைப்பள்ளி இராமியணஹள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு முதலிடத்தை பெற்றுள்ளனர். அதன் மூலம் மாநில அளவில் நடைபெறும் கையுந்து பந்து போட்டிகளுக்கு தேர்வாகியுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் கொடுத்து தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டினர்.
தர்மபுரி மாவட்டம் இந்தியன் வங்கி ஊருக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து வழங்கும் சணல்பை தயாரித்தல் இலவச பயிற்சி வகுப்பு இன்று முதல் 13 நாட்களுக்கு பயிற்சி வழங்கப்படுகின்றது . மேலும் இந்த பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் பின்புறம் உள்ள கட்டுமான சங்க அலுவலகம் அருகில் உள்ள ஆர்எஸ்இடி அலுவலகத்தை அணுகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், மாரண்டஅள்ளி உள்வட்டம், கும்மனூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் 11.12.2024 அன்று நடைபெற உள்ளது. பாலக்கோடு வட்டம், மாரண்டஅள்ளி, கும்மனூர் அதன் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள மின் நுகர்வோர்கள் மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு மின் கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்கான காலக்கெடு நாளையுடன்(டிச 10) முடிவடைகிறது. எனவே மின் கட்டணம் செலுத்துவோர் அபராதம் இல்லாமல் மின் கட்டணத்தை செலுத்தமாறு அறிவுறுத்தப்படுகிறது.
வேலை தருவதாக இணையம் மூலமாக விளம்பரம் செய்து, அதை நம்பி வரும் மக்களை, தங்களின் இடத்துக்கு வரவழைத்து சிலர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற மோசடிகளில் சிக்கிக் கொள்ளாமல் விழிப்புடன் இருக்க வேண்டும். இத்தகைய மோசடிகளுக்கு ஆளாகி இருந்தால் சைபர் க்ரைம் கட்டணமில்லா தொலைபேசி எண் 1930-ஐ அழைத்து புகார் தெரிவிக்கலாம். அல்லது www. cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரை பதிவு செய்யலாம்.
தருமபுரி மாவட்டம் கடத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் வளாகத்தில் நாளை முதல் தேசிய தொழில் பழகுனர் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு தேசிய தொழில் பழகுனர் சான்றிதழ் பெறலாம், மாதத்திற்கு 8,500 முதல் 18,000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும் தகவலுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலும் அல்லது 94422 86874,8778447162,7548844547, என ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.