India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக அரசு வழங்கும் மகளிர் உரிமைத்தொகை பெறாத நபர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 17 முதல் சிறப்பு முகாம் நடைபெறுவதாக சில சமூக ஊடகங்களில் தவறான செய்திகள் பரவி வருகின்றன. இந்த வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். மேலும் அரசு மூலம் உரிய அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை எனவே பொதுமக்கள் தவறான செய்திகளை நம்பி மனு அளிக்க ஆட்சியர் அலுவலகம் வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தருமபுரி மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. இதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
தர்மபுரி அரசு கல்லூரி முதல்வர் கண்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் 2024 நடப்பு கல்வி ஆண்டில் முதுநிலை பட்ட மேற்படிப்புக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆகஸ்ட் 19 காலை 10 மணிக்கு கல்லூரி கலை அரங்கில் நடைபெறுகிறது. இதில் முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் தரவரிசைப்படி ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, ஏ.ஜெட்டிஹள்ளி, அரூர், பென்னாகரம், பாலக்கோடு ஆகிய ஆறு இடங்களில் உழவர் சந்தை உள்ளது. இதில் மொத்தம் 192 கடைகள் உள்ளன. அந்த கடைகளில் சராசரியாக நாள் ஒன்றுக்கு சராசரிய 67 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்படுவதோடு ரூ. 22 லட்சத்து 78 ஆயிரம் அளவுக்கு விற்பனை நடக்கிறது. சராசரியா 14,400 பேர் காய்கறிகளை நாள் ஒன்றுக்கு வாங்குவதாக வேளாண் வணிக துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தில் நாளை 17.08.2024 காலை 6 மணி முதல் மறுநாள் 18.08.2024 காலை 6 மணி வரை அரசு மருத்துவர்கள் அவசரம் இல்லா சேவை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். கொல்கத்தாவில் மருத்துவக் கல்லூரி பெண் மருத்துவர் கொலைக்கு நியாயம் வேண்டியும், சேவை செய்யும் மருத்துவர்கள் மீது கொலவெறி தாக்குதல் நடத்துவதை கண்டித்தும் அகில இந்திய மருத்துவர்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்
தர்மபுரி மாவட்ட நல்வாழ்வு சங்கம் சார்பில் MTS , Doctor, Data Assistnt பதவிக்கு 20 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இணையதளம் மூலமாக மட்டுமே வேலைக்கு விண்ணப்பிக்க முடியும்.8th, B.Sc, BBA, BCA, BE/B.Tech, BSMS, D.Pharm, Diploma தேர்ச்சி பெற்ற தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். அதிகபட்சமாக ரூ .40,000 வரை வழங்கப்படும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது . விண்ணப்பிக்க கடைசி நாள் 23.08.2024
தர்மபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு அறிவித்த பெண்களுக்கான உரிமை தொகை விண்ணப்பிக்கும் முகாம் மூன்று தினங்கள் நடைபெறுவதாக செய்தி ஒன்று பரவி வருகிறது. இந்த செய்தியை சரி பார்த்ததில் இது உண்மைக்கு மாறான செய்தி என தெரிய வந்துள்ளது. இதனை நமது தளத்திலும் பதிவிட்டுள்ளோம். செய்தி உண்மைக்கு மாறானது என தெரிந்தவுடன் அதனை நீக்கிவிட்டோம். இந்த செய்தியை யாரும் நம்ப வேண்டாம். அனைவருக்கும் SHARE செய்யவும்.
தமிழக அரசு வழங்கும் மகளிர் உரிமை தொகை மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் பெறாதவர்கள் வருகின்ற நாளை (ஆக 17) முதல் ஆக 20 ஆம் தேதி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
ஏரியூர் அருகே உள்ள ஒட்டன் ஊரை சேர்ந்தவர் கோவிந்தன் இவரும் இவரது மனைவி சின்னப்பொண்ணு ஆகிய இருவரும் ஆடுகளை மேய்க்கும் தொழில் செய்து வருகின்றனர். ஆடு விற்பனையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில், நேற்று கோவிந்தன் மனைவி சின்னப்பொண்ணை கல்லால் தாக்கி கொலை செய்து, பின் அவரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஏரியூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.
தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அலுவலகத்தில் இன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இம் முகாமில் 1000-திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பிட வழிவகை செய்யப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு வேலைவாய்ப்பு செயல் அலுவலர் விஜயகுமார் அறிவுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.