Dharmapuri

News August 8, 2025

தர்மபுரி: 10th போதும் ரூ.35,000 சம்பளத்தில் அரசு வேலை

image

தர்மபுரி மாவட்ட வருவாய்த்துறையில் காலியாக உள்ள 39 கிராம உதவியாளர் பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளமாக வழங்கப்படும். ஆக.20-ம் தேதி வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும் தகவல்களுக்கு <>இங்கே கிளிக்<<>> செய்து தெரிந்துக்கொள்ளுங்கள். வேலை தேடும் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க.

News August 8, 2025

தருமபுரி: சான்றிதழ் தொலைந்தால் இதை செய்யுங்க! 2/2

image

வருமான சான்று, சாதி சான்று, இருப்பிடச் சான்று,கணவனால் கைவிடப்பட்டோர் சான்று, முதல் பட்டதாரி சான்று, விவசாய வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், குடிபெயர்வு சான்றிதழ், சிறு/குறு விவசாயி சான்றிதழ், ஆண் குழந்தை என்பதற்கான சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ், விதவை சான்றிதழ் & வேலையில்லாதோர் சான்றிதழை நீங்கள் இதன் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

News August 8, 2025

தருமபுரி: சான்றிதழ் தொலைந்தால் இதை செய்யுங்க! 1/2

image

தருமபுரி மக்களே! சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். இந்த <>லிங்கில் <<>>சென்று உங்கள் சான்றிதழ் எண்ணை பதிவிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஷேர் செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க. <<17340405>>தொடர்ச்சி!<<>>

News August 8, 2025

வரலட்சுமி நோன்பு அன்று செய்ய வேண்டியவை

image

வரலட்சுமி நோன்பு அன்று வீட்டை சுத்தம் செய்து, மாவிலைத் தோரணம் கட்டி அலங்கரிக்க வேண்டும். கோலமிட்டு, கலசம் நிறுவி அதன் மேல் தேங்காயை வைக்க வேண்டும். இந்த கலசத்திற்கு அம்மன் முகம், ஆடை, அணிகலன்கள் அணிவித்து மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். பின் பஞ்சமுக நெய் விளக்கேற்றி நைவேத்தியங்களைப் படைக்க வேண்டும். அஷ்டலட்சுமி/ கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டோத்ர சதம் போன்ற மந்திரங்களைச் சொல்லி வழிபடலாம்.

News August 8, 2025

தருமபுரியில் வரலட்சுமி நோன்பிற்கு இதை செய்யுங்க

image

வரலட்சுமி நோன்பு, லட்சுமி தேவியின் அருளை வேண்டி சுமங்கலிப் பெண்கள் அனுசரிக்கும் ஒரு புனிதமான விரதமாகும். இந்த விரதம் ஆடி மாதத்தில் பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி இன்று (ஆக்.08) தருமபுயில் உள்ள மகாலட்சுமி சமேத பரவாசுதேவப் பெருமாள் கோயில் சென்று வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. வரலட்சுமி நோன்பு சிறப்பு பூஜை விமர்சையாக இங்கு நடைபெறும். ஷேர் <<17338875>>தொடர்ச்சி<<>>

News August 8, 2025

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தர்மபுரி வருகை

image

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 17, 2025 அன்று தர்மபுரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார். இந்த நிகழ்ச்சியில், பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் நேரில் வழங்கவுள்ளார். தர்மபுரி மாவட்ட மக்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பயன்பெறலாம்.

News August 8, 2025

இன்று தர்மபுரியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

தருமபுரி வருவாய் கோட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் இன்று (ஆக.8) காலை 11:00 மணிக்கு தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தருமபுரி வருவாய் கோட்ட அலுவலர் தலைமை தாங்கி, விவசாயிகளின் குறைகளைக் கேட்டுத் தீர்த்து வைப்பார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.

News August 7, 2025

தர்மபுரி: பட்டா சிட்டா விபரங்களை அறிய வேண்டுமா?

image

தர்மபுரி மக்களே, உங்களது நிலம் தொடர்பான ஆவணங்கள் குறித்து எளிதில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் இதன் மூலம் தங்களது நில விவரம், பட்டா, சிட்டா திருத்தம் போன்ற சேவைகளை மேற்கொள்ளலாம் (அல்லது) அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

News August 7, 2025

மினி சரக்கு வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு

image

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள கம்மாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி வையாபுரி (வயது.37) இவர் இன்று உறவினர் வீட்டுக்கு செல்ல மொபெட் வாகனத்தில் பாப்பாரப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். தொட்லாம்பட்டி பெருமாள் கோயில் அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த மினி சரக்கு வாகனம் மோதியதில் வையாபுரி தலை நசுங்கி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிர் இழந்தார்.

News August 7, 2025

தருமபுரி ஆரம்ப சுகாதார மையங்களில் வேலை வாய்ப்பு

image

தருமபுரி மாவட்ட ஆரம்ப சுகாதார மையங்களில் காலியாக உள்ள பாரா மெடிக்கல் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியானது. இதன் மூலம் மருத்துவ உதவியாளர், டிரைவர், லேப் டெக்னீஷியன், ஸ்டாப் நர்ஸ் உட்பட 103 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பத்தை <>இணையத்தில் <<>>பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தருமபுரி மாவட்ட சுகாதார இயக்குநர் அலுவலகத்தில் ஆக்.8க்குள் சமர்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!