India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பஞ்சப்பள்ளி கிராமம் சின்னாறு நீர்த்தேக்கத்திலிருந்து 2024-25 ஆம் (பசலி 1434) ஆண்டிற்கு விவசாய நிலம் பாசனத்திற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி மற்றும் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன் இன்று (ஜன 3) விவசாயிகள் பாசனம் பெறும் வகையில் காலை 9.30 மணி தண்ணீர் திறந்து வைக்க உள்ளனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தருமபுரி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நாளை(ஜன 4) காலை 7 மணிக்கு ஸ்ரீ விஜய் வித்யாலயா ஆண்கள் மெட்ரிக் பள்ளி பேருந்து நிறுத்தம் அருகில் இருந்து 15 கிலோமீட்டர், 20 கிலோ மீட்டர் சைக்கிள் பந்தயம் நடைபெறுகிறது. வெற்றி பெருபவர்களுக்கு முதல் பரிசு ரூ 5000, 2ஆம் பரிசு ரூ 3000, 3ஆம் பரிசு ரூ.2000 என அறிவிக்கப்பட்டுள்ளது.
தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் எண் 11021 மும்பை தாதர் – திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில் ஜன.7ஆம் தேதியன்று இரவு 21:30 மணிக்கு மும்பையில் புறப்பட்டு, SMVT பெங்களூரு, பையப்பனஹள்ளி, கிருஷ்ணராஜபுரம், குப்பம், ஜோலார்பேட்டை மற்றும் சேலம் வழியாக இயக்கப்படும். ஓசூர்(ஜனவரி 8) மற்றும் தருமபுரி(ஜனவரி 9) நிறுத்தங்கள் தவிர்க்கப்படுகிறது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் மோப்பிரிப்பட்டி-தொட்டம்பட்டியை இணைத்து, அரூா் பேரூராட்சியை நகராட்சியாகத் தரம் உயா்த்தப்படும் என தருமபுரியில் கடந்த ஆண்டு நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி, அரூரை நகராட்சியாக உருவாக்கம் செய்யப்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
அரூர்-தர்மபுரி சாலை வனப்பகுதியையொட்டி உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், சந்தன மரம் உள்ளிட்ட ஏராளமான மரங்கள் உள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கல்லூரி வளாகத்தில் இருந்த, 2 பழமையான சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்திச் சென்றுள்ளனர். இதுகுறித்து, நேற்று அரூர் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
இந்தியன் வங்கி, ஊருக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து வழங்கும் இருசக்கர வாகன பழுது பார்த்தல் இலவச பயிற்சி வகுப்பு 30 நாட்களுக்கு வழங்கப்படுகின்றது. இந்த பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் பின்புறம் உள்ள கட்டுமான சங்க அலுவலகம் அருகில் உள்ள ஆர்எஸ்இடி அலுவலகத்தை அணுகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் ஜவைரி.03 ஆம் தேதி அன்று முற்பகல் 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. எனவே தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது குறைகளையும், கருத்துகளையும் எடுத்துக் கூறி பயனடையலாம்.
தருமபுரி மாவட்ட நூலகத்தில் ஐயன் திருவள்ளுவரின் 133அடி உயர திருவுருவச் சிலை முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு வெள்ளி விழா திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் நடைபெற்றது. இதில் மூக்கனூர் அரசு பள்ளி 9ஆம் வகுப்பு மாணவி மீனாட்சி முதலிடமும், ஜீவா நகர் அரசு பள்ளி 5ஆம் வகுப்பு ஹாசினி இரண்டாம் இடமும், வேலனூர் அரசு பள்ளி 5ஆம் வகுப்பு மாணவர் யோகேஷ் மூன்றாம் இடம் பிடித்தனர்.
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டுறங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில், காரிமங்கலம் வட்டம் குண்டஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த சத்யா பிரதாப் என்பவர் இணையவழியாக குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் இன்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி குடும்ப அட்டையை வழங்கினார்.
தருமபுரி மாவட்டத்தில் டிசம்பர் 30 மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு பகுதி மக்களும் தங்களது குறைகளை எடுத்துரைத்து மனு வழங்கினர். இதில், பொதுமக்கள் இலவச பட்டா, இலவச வீட்டு மனை, இலவச ஸ்கூட்டர், மிதிவண்டி உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம் போன்ற பல்வேறு குறைகள் தொடர்பாக 405 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சாந்தி அறிவுறுத்தினார்.
Sorry, no posts matched your criteria.