India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழக அரசு, EDII மூலம், ட்ரோன் பயன்பாடு சிறப்பு வேலைவாய்ப்பு திறன் பயிற்சியை மிகக் குறைந்த கட்டணத்தில் வழங்குகிறது. வரும் நவ.18 முதல் நவ.20 வரை சென்னையில் நடைபெறும் இந்த பயிற்சியில், 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 18 வயதுடையவர்கள் பங்கேற்கலாம். இந்த பயிற்சியை முடிக்கும் நபர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கு <

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் போதை விழிப்புணர்வு பதிவு இன்று (நவ.11) வெளியிடபட்டுள்ளது. அதில், ‘மேதையை அழிக்கும் போதையை ஒழிப்போம். போதையை தொடாது சாதனை படைப்போம். மதியை போக்கும் மதுவே போ.. போ..’ என்ற வாசகத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

12-ம் வகுப்பு/டிகிரி முடித்து வேலை தேடும் இளைஞர்களுக்கு சான்றிதழுடன் விமான நிலையத்தில் Cabin Crew, Air Cargo Introductory+ DGR உட்பட பல்வேறு பிரிவுகளில் பணி செய்ய வாய்ப்பை தாட்கோ ஏற்படுத்தி தருகிறது. இந்த 6 மாத பயிற்சிக்கான செலவுகளை தாட்கோ முற்றிலும் ஏற்கும். விண்ணப்பிக்க விரும்பும் 18 முதல் 23 வயதுடைய இளைஞர்கள் <

தருமபுரியில் போலீசார் வாகனங்களை சோதனை செய்யும்போது லைசென்ஸ் கையில் இல்லை என்ற கவலை வேண்டாம். DigiLocker, M parivaahan போன்ற அரசின் செயலிகளில் RC புக், லைசென்ஸ் போன்ற ஆவணங்களை வைத்து கொண்டு, அதை சோதனையின்போது காண்பிக்கலாம். இந்த செயலி மூலம் காண்பிக்கும் ஆவணங்களை, காவல்துறையினர் ஏற்க முடியாது என்று சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. ஷேர் பண்ணுங்க.

பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. 1. வகை: மத்திய அரசு 2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/- 3) கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech 4. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38) 5. கடைசி தேதி: 14.11.2025 6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: (<

பொம்மிடி, வே.முத்தம்பட்டி, கே.என்.புதூர் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (நவ.11) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பொம்மிடி, அஜ்ஜம்பட்டி, பி.பள்ளிப்பட்டி, வாசிக்கவுண்டனூர், பொ.துரிஞ்சிபட்டி, நடூர், ஒட்டுபட்டி, பில்பருத்தி, ஆகிய சுற்றுவட்டார பகுதியில் நாளை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்து மற்றவர்களை அலெர்ட் பண்ணுங்க!

தருமபுரி, இண்டூர் அருகேயுள்ள நாகலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நவீன் (25) இவர் ஓசூரில் உள்ள கல்குவாரியில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், நேற்று (நவ.10) இண்டூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது, அவ்வழியே வந்த கார் மீது மோதி தூக்கியெறிப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு, அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இவர் உயிரிழந்தார்.

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (நவ.10) இரவு முதல் இன்று காலை வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சூர்யா தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சரவணன், தோப்பூரில் குமரவேல், மதிகோன்பாளையத்தில் மகாலிங்கம் மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்.
Sorry, no posts matched your criteria.