Dharmapuri

News May 8, 2025

அரசு கலை கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

image

+2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் மே 27 வரை விண்ணப்பிக்கலாம். B.A,B.Sc,BCA உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு இங்க <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.50, SC/ST பிரிவினருக்கு ரூ.2 மட்டும். மதிப்பெண் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படும். ஷேர் பண்ணுங்க

News May 7, 2025

தர்மபுரியில் இன்றைய வானிலை நிலவரம்

image

தர்மபுரியில் 01.05.2025 இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37°C யையும், குறைந்தபட்ச வெப்பநிலை 29°C யையும் ஒட்டியிருக்கும். மாலை காற்று வெப்பநிலை குறைகிறது 28 – 31°C, பனி புள்ளி 21,6°C. அதிக வெப்பம் நிலவுவதால் மக்கள் அடிக்கடி வெளியே வருவதை தவிர்ப்பது நல்லது.

News May 7, 2025

தர்மபுரி முக்கிய காவல் அதிகாரிகள் எண்கள்

image

▶️தர்மபுரி SP மகேஸ்வரன்- 9498102295,
▶️ADSP பாலசுப்ரமணியன்- 9842117868,
▶️ADSP ஸ்ரீதரன் – 9443373016,
▶️தர்மபுரி DSP – 9498110861,
▶️அரூர் DSP – 7904709340,
▶️பென்னாகரம் DSP -9498230175,
▶️பாலக்கோடு DSP – 9498170237
குற்றங்கள் அதிகரித்துள்ள இக்காலத்தில் இந்த நம்பர்கள் மிகவும் அவசியம். உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.

News May 7, 2025

தர்மபுரியில் குட்கா கடத்தல்: 3 பேர் கைது

image

தொப்பூர் வழியாக குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, தொப்பூர் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி ரோந்து பணியில் ஈடுபட்டார். நேற்று காலை, பப்பிரெட்டியூர் காட்டுவளவு பகுதியில், சந்தேகப்படும் படி நிறுத்தியிருந்த காரில் இருந்த, 3 பேரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது 2 லட்சம்ரூபாய் மதிப்பிலான குட்கா கடத்தி வந்தது தெரிய வந்தது. குட்கா கடத்தி வந்த 3 பேரை கைது செய்தனர்.

News May 7, 2025

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

image

மாரண்டஅள்ளி மேல் தெருவை சேர்ந்த சுரேஷ் மகன் ஹரிராம். இவர் 1ஆம் வகுப்பு படித்து வருகின்றார். பள்ளி விடுமுறை என்பதால் நேற்று அங்கு உள்ள தண்ணீர் தொட்டியில் நண்பர்களுடன் நேற்று விளையாடும் போது, ஹரிராம் தண்ணீரில் மூழ்கினார். அருகில் இருந்தவர்கள் விரைந்து காப்பாற்ற முயன்றனர். அதற்குள் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து மாரண்டஹள்ளி காவலர்கள் நேற்று வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News May 7, 2025

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

image

மாரண்டஅள்ளி மேல் தெருவை சேர்ந்த சுரேஷ் மகன் ஹரிராம். இவர் 1ஆம் வகுப்பு படித்து வருகின்றார். பள்ளி விடுமுறை என்பதால் நேற்று அங்கு உள்ள தண்ணீர் தொட்டியில் நண்பர்களுடன் நேற்று விளையாடும் போது, ஹரிராம் தண்ணீரில் மூழ்கினார். அருகில் இருந்தவர்கள் விரைந்து காப்பாற்ற முயன்றனர். அதற்குள் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து மாரண்டஹள்ளி காவலர்கள் நேற்று வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News May 7, 2025

செல்வம் கொழிக்க வைக்கும் அட்சய திருதியை வழிபாடு

image

அட்சய திருதியை அன்று செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியை பூஜை செய்வது சிறப்பு. இதனால் செல்வம் பெருகும், லட்சுமி கடாட்சம் உண்டாகும். இந்த நல்ல நாளில் மாலை 6 மணிக்கு வீட்டில் விளக்கேற்றி வைத்து விட்டு, அருகில் உள்ள மகாலட்சுமி அல்லது பெருமாள் கோயிகளுக்கு சென்று தாமரை மற்றும் துளசி மாலை அணிவித்து வழிபாடு செய்தால் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதை உங்கள் அன்பானவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

News May 7, 2025

தர்மபுரியில் அடிப்படை பிரச்சனையா?.. இத பண்ணுங்க!

image

தர்மபுரி மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க ‘ஊராட்சி மணி’ அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, சாலை வசதி, குடிநீர், தெருவிளக்கு, மின்சாரம் மற்றும் ரேஷன் கடைகள் குறித்தான புகார்களை 155340 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். குறிப்பாக தற்போது கோடை காலம் என்பதால் குடிநீர் பிரச்சனை இருந்தால் 1916 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News May 7, 2025

தர்மபுரி: கார் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

image

இலக்கியம்பட்டி செந்தில்நகரை சேர்ந்த வித்யாசாகர் மற்றும் மனைவி புஷ்பலதா, உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு நேற்று (ஏப்ரல்-29) காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, பொம்மனூர் மேம்பாலத்தில் திடீரென நாய் வாகனத்தின் முன் வந்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்து, 20 அடி பள்ளத்தில் விழுந்து நொறுங்கியது. இதில், புஷ்பலதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

News April 30, 2025

அட்சய திருதியை: தங்கம் வாங்க போறிங்களா?

image

அட்சய திருதியையான இன்று (ஏப்ரல் 30) செய்யப்படும் எந்தவொரு முதலீடும் உங்களுக்கு செழிப்பை தரும். அதுவும் மங்களகரமான பொருட்களை வாங்குவது அதிர்ஷ்டம். அதனால், உங்கள் வீட்டின் அருகில் உள்ள லட்சுமி, பெருமாள் கோயிலுக்கு சென்றுவிட்டு வாங்குவது நல்லது. காலை 9:30 – 10:30 மற்றும் மாலை 4:30 – 5:30 மணி வரை நல்ல நேரம் என்பதால் அந்த நேரத்தில் தங்கம் வாங்குங்கள். உங்கள் வீட்டில் செல்வம் செழிக்கும். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!