Cuddalore

News October 28, 2025

கடலூர்: ரூ.30,000 மாத சம்பளத்தில் அரசு வேலை

image

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) காலியாக உள்ள 1429 Health Inspector Grade-II பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. சம்பளம்: ரூ.19,500 – 71,900
3. வயது வரம்பு: 18 வயதிற்கு மேல்
4. கடைசி தேதி : 16.11.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>CLICK <<>>செய்க.
மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News October 28, 2025

கடலூர்: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். மேற்கண்ட தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News October 28, 2025

கடலூர் மாவட்டம் முழுவதும் 10.8 மில்லி மீட்டர் மழை பதிவு

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது‌. இந்த நிலையில் இன்று (அக்டோபர் 28) காலை 8.30 மணி நிலவரப்படி எஸ்ஆர்சி குடிதாங்கி 3 மில்லி மீட்டர், கடலூர் ஆட்சியர் அலுவலகம் 2 மில்லி மீட்டர், பண்ருட்டி 2 மில்லி மீட்டர், வானமாதேவி 2 மில்லி மீட்டர், கடலூர் 1 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 10.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

News October 28, 2025

கடலூர்: உங்க பெயரை மாற்றணுமா? SUPER CHANCE

image

உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இணையத்தில் விண்ணப்பிக்க<> இங்கு கிளிக் <<>>செய்யவும். தமிழில் பெயர் மாற்ற ரூ.150, ஆங்கில பெயர் மாற்ற ரூ.750 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News October 28, 2025

கடலூர்: நாளை சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள் விவரம்

image

கடலூர் மாவட்டத்தில் நாளை (அக்.29) உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விருத்தாசலம் வட்டம், ராஜேந்திரப்பட்டினம் மேல்நிலைப்பள்ளி கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட எம்என்எஸ் மகால், கடலூர் அடுத்த காரணப்பட்டு கிராம ஊராட்சி கட்டிட வளாகம் ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 28, 2025

கடலூர்: ரூ.30,000 சம்பளத்தில் அஞ்சல் துறையில் வேலை

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள 348 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. சம்பளம்: ரூ.30,000
4. வயது வரம்பு: 20 – 35 (SC/ST – 40, OBC – 38)
5. கடைசி தேதி : 29.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>CLICK செய்க.<<>>
மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News October 28, 2025

கடலூர்: இளைஞருக்கு நேர்ந்த சோகம்

image

சிதம்பரம் அடுத்த கிள்ளை, எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (24). தொழிலாளியான இவர் தீபாவளி அன்று பட்டாசுகளை வெடித்தபோது, பறந்து வந்த ஒரு வெடி சந்தோஷின் சட்டைப்பையில் விழுந்து வெடித்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் சந்தோஷ் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கிள்ளை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News October 28, 2025

கடலூர்: ஓடும் ரயிலில் நகை திருட்டு

image

சென்னையில் இருந்து திருச்சி செல்லும் ரயிலில் பயணித்த சரத்குமார் என்ற பயணியின் 2 பவுன் நகையை காணவில்லை என்றும், உடன் வந்த பயணி ஒருவர் திருடி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விருத்தாசலம் ரயில்வே காவல் நிலையத்தில் அந்த நபரை பிடித்து சென்று புகார் அளித்தார். பின்னர் விசாரணையில் அந்த நபர் நகையை திருடியை ஒப்புக் கொண்ட நிலையில், அவரை கைது செய்தனர். பின்னர் மீட்ட நகையை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

News October 28, 2025

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (அக்.27) இரவு 10 மணி முதல் இன்று (அக்.26) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்!

News October 27, 2025

கடலூரில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்; ஆட்சியர் அழைப்பு

image

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற அக்.31ஆம் தேதி விவசாயிகள் குறைத்தீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற உள்ளது. இதில், கோரிக்கை குறித்து பேச விரும்பும் விவசாயிகள் அன்று காலை 8 மணி முதல் 10 மணிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவசாயிகள் மனுக்களை அளித்து பயன்பெறலாம் என ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவிதுள்ளார்.

error: Content is protected !!