Cuddalore

News September 28, 2024

பண்ருட்டி: தாயை தாக்கிய மகன் கைது

image

பண்ருட்டி அடுத்த காட்டாண்டிக்குப்பத்தை சேர்ந்தவர் கணபதி மனைவி ஜெயபிருந்தா(65). இவரது மகன் பெருமாள்(49) திருமணமாகி தனியாக அதே பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் பெருமாள் பூர்வீக சொத்தை பிரித்து தரும்படி கேட்டு ஜெயபிருந்தாவிடம் தகராறு செய்து அவரை தாக்கினார். இதுகுறித்த புகாரின் பேரின் காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து பெருமாளை இன்று கைது செய்தனர்.

News September 28, 2024

கடலூர்: பேரிடர் எச்சரிக்கை செயலி அறிமுகம்

image

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், பொதுமக்கள் பேரிடர் குறித்த உடனடி எச்சரிக்கைகளை கைபேசி மூலம் எளிதில் அறிந்து கொள்ள தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் TN-ALERT என்ற கைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள், இந்தச் செயலியினை தங்களது கைபேசிகளில் பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News September 28, 2024

கடலூர் மாவட்டத்தில் 2ஆம் தேதி கிராமசபை கூட்டம்

image

ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தி அன்று கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 2.10.2024 அன்று கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்படும். இதில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கையை மனுவாக எழுதி கொடுத்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று தெரிவித்தார்.

News September 27, 2024

கடலூர் மாவட்டத்தில் ரோந்து பணி அதிகாரிகள் முழு விவரம்

image

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (27/09/2024) கடலூர் காவல் ஆய்வாளர் இராஜாராம், சிதம்பரம் காவல் ஆய்வாளர் ரமேஷ்பாபு, விருத்தாசலம் காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி, நெய்வேலி உதவி ஆய்வாளர் இளவழகி, சேத்தியாத்தோப்பு காவல் ஆய்வாளர் ஆறுமுகம் ஆகியோர் ரோந்துப்பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 27, 2024

வேளாண் அரங்குகளை பார்வையிட்ட ஆட்சியர்

image

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று (27.09.2024) பார்வையிட்டார். தொடர்ந்து அவர் பயிர் சாகுபடி குறித்து கேட்டறிந்தார். அப்போது மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஜென்னடி ஜெபக்குமார் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

News September 27, 2024

கடலூர் தென்பெண்ணையாற்றில் 3 டன் பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றம்

image

கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் தரைபாலத்தின் ஓரத்தில் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் இருந்தன. மழைக்காலம் நெருங்குவதை முன்னிட்டு கடலூர் மாநகராட்சி சார்பில் துப்புரவு பணியாளர்கள் 3 டன் அளவிற்கு அங்கு இருந்து பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் கண்ணாடி பாட்டில்களை அப்புறப்படுத்தினர். இதனால் கடலுக்கு செல்ல வேண்டிய பிளாஸ்டிக் கழிவுகள் அப்புறபடுத்தப்பட்டன.

News September 27, 2024

தனியார் கல்லூரி பேருந்து மோதி முதியவர் பலி

image

குறிஞ்சிப்பாடி கீழ்பூவாணிகுப்பத்தை சேர்ந்தவர் சிங்காரம்(65). இவர் இன்று சைக்கிளில் புதுச்சத்திரம் அருகில் ஆலப்பாக்கம் – பெத்தாங்குப்பம் மெயின் ரோட்டில் சென்றபோது எதிரே வந்த தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் சிங்காரம் சம்பவ இடத்திலேயே தலையில் பலத்த அடிபட்டு உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 27, 2024

பெண்ணாடத்தில் 5ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

image

திட்டக்குடி வட்டம் பெண்ணாடத்தில் உள்ள லோட்டஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் 5.10.2024 அன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 8, 10, 12 மற்றும் கலை கல்லூரி, ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் நேற்று தெரிவித்தார்.

News September 26, 2024

கடலூர் மாவட்டத்தில் ரோந்து பணி மேற்கொள்ளும் அதிகாரிகள் விவரம்

image

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (26/09/2024) கடலூர் உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார், சிதம்பரம் உதவி ஆய்வாளர் செந்தில்குமார், விருத்தாசலம் காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி, நெய்வேலி உதவி ஆய்வாளர் ராஜாங்கம், சேத்தியாத்தோப்பு காவல் ஆய்வாளர் சேதுபதி ஆகியோர் ரோந்துப்பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 26, 2024

வாக்களிப்பதை வலியுறுத்தி பல்வேறு போட்டிகள் – ஆட்சியர்!

image

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிப்பதை வலியுறுத்தும் விதமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் கட்டுரை, ஓவியம், ரங்கோலி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இப்போட்டிகளை வரும் நவம்பர் மாதத்திற்குள் முடித்து, போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ஜனவரி மாதம் 25ம் தேதி பரிசு வழங்கப்படும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

error: Content is protected !!