Cuddalore

News August 29, 2025

கடலூர் மக்களே சொந்த வீடு கட்ட சூப்பர் திட்டம்!

image

கடலூர் மக்களே, முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். SHARE பண்ணுங்க!

News August 29, 2025

கடலூர் மக்களே இ-ஸ்கூட்டர் வாங்க மானியம் வேண்டுமா?

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க<> https://tnuwwb.tn.gov.in<<>>/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில், Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். மேலும் விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணு

News August 29, 2025

கடலூர்: இன்ஜினியர் பணியிடங்கள் அறிவிப்பு

image

மத்திய அரசின் மின்சாரத்துறையில் காலியாக உள்ள ‘1543’ இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது . இதற்கு 18 வயது நிரம்பிய B.Sc, B.E., B.Tech, M.Tech, ME படித்தோர் விண்ணபிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ30,000 முதல் ரூ1,20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து, வரும் செப்.17-க்குள் விண்ணபிக்க வேண்டும். வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 29, 2025

கடலூரில் இன்று விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

image

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஆக.29) விவசாயிகள் குறைதீர் கூட்டம், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற உள்ளது. இதில், கோரிக்கை குறித்து பேச விரும்பும் விவசாயிகள் அன்று காலை 8 மணி முதல் 10 மணிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் கூட்டத்தில் விவசாயிகள் மனுக்களை அளித்து பயன்பெறலாம் என ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News August 29, 2025

கடலூர்: கோவில் பாதுகாவலர் வேலை அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் உள்ள 34 கோயில்களில் பாதுகாவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு மாதம் ரூ.7300 சம்பளமாக வழங்கப்படும். இதில், பணியாற்ற விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் உரிய ஆவணங்களுடன், கடலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 04142-220732 என்ற எண்ணின் வாயிலாகவோ தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். SHARE

News August 29, 2025

கடலூரில் நாளை ”உயர்வுக்குப் படி” வழிகாட்டி நிகழ்ச்சி

image

கடலூர் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்குப் படி” வழிகாட்டி நிகழ்ச்சி முகாம் மற்றும் கல்விக்கடன் வழங்கும் முகாம் இன்று (ஆக.29) கடலூர் புனித அன்னாள் பெண்கள் பள்ளியில் நடைபெற உள்ளது. இதில். கல்விக் கடன் கோரும் மாணவர்கள் <>vidyalakshmi <<>>என்ற இணையவழி மூலமாக விண்ணப்பித்தும், உரிய ஆவணங்களுடன் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News August 28, 2025

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் இன்று (ஆக.28) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 28, 2025

கடலூர் மக்களே.. இலவச சட்ட உதவிகள் வேண்டுமா?

image

கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பல்வேறு வழக்குகளுக்கு வாதாட இலவசமாக வழக்கறிஞர் உதவியை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தகவலுக்கு கடலூர் மாவட்ட சட்ட ஆலோசனை மையத்தை (04142-212660) தொடர்பு கொள்ளலாம். இதை மறக்காமல் SHARE செய்யவும்!

News August 28, 2025

கடலூர் மக்களே.. இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

கடலூர் மக்களே… தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் வீடு மற்றும் நிலம் இல்லாதவர்களுக்கு கான்கிரீட் வீடு கட்ட இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு கடலூர் ஆட்சியர் அலுவலகத்தை (04142 – 230555) தொடர்பு கொள்ளவும். இதை SHARE பண்ணவும்!

News August 28, 2025

கடலூர்: மாணவிகளின் டென்னிஸ் போட்டியை பார்வையிட்ட ஆட்சியர்

image

கடலூர் அறிஞர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிக்கான மாவட்ட அளவிலான இறகுபந்து விளையாட்டுப் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், இன்று (28.08.2025) தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாணவிகள் டென்னிஸ் போட்டி விளையாடியதை பார்வையிட்டார். அப்போது மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ் குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!