Cuddalore

News October 27, 2024

திட்டக்குடி: பாலத்தில் இருந்து தவறி விழுந்து இளைஞர் பலி

image

திட்டக்குடி அடுத்த வி.சித்தூரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் கண்ணன் (28). நேற்று இவர் குடிபோதையில் தொழுதூரில் உள்ள மோகினி பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News October 26, 2024

பெண்களுக்கு மானியத்தில் கோழி குஞ்சுகள்

image

கடலூர் மாவட்டத்தில் ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு கோழி குஞ்சுகள் 50% மானியத்தில் வழங்கும் திட்டத்தின்கீழ் 1400 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே தகுதியான பயனாளிகள் அரசு கால்நடை நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்/ கால்நடை உதவி மருத்துவர்களிடம் நேரில் விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News October 26, 2024

திட்டக்குடி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை

image

திட்டக்குடி அடுத்த வடக்கு விருதாங்கால் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் மனைவி தமிழரசி (37). இவர் குலதெய்வ கோயிலுக்கு பொங்கல் வைக்க தாமதமாக சென்றதால் ஆத்திரமடைந்த அவரது அண்ணன் புகழேந்தி, தமிழரசியை திட்டியுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த தமிழரசி, நேற்று தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News October 25, 2024

விஜய் மாநாட்டில் அஞ்சலை அம்மாள் “கட் அவுட்”

image

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் ஞாயிறு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி சாலையில் நடைபெறவுள்ளது. மாநாட்டு திடலில் மொழிப் போர்த்தியாகி அஞ்சலை அம்மாள் “கட் அவுட்” இடம் பெற்றிருப்பது கவனத்தை பெற்றுள்ளது. அஞ்சலை அம்மாள் கடலூர் முதுநகர் சுண்ணாம்புக்கார தெருவில் பிறந்து வளர்ந்தவர். இவர் தென்னிந்திய ஜான்சி ராணி என காந்தியடிகளால் அழைக்கப்பட்டவர். SHARE IT.

News October 25, 2024

கடலூரில் 29ஆம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

image

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 29-ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது. இதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கி, விவசாயிகளிடம் மனுக்கள் பெற உள்ளார். இதில் தங்களது கோரிக்கை குறித்து பேச உள்ள விவசாயிகள் சிட்டா, அடங்கல், கிசான் கடன் அட்டையுடன் காலை 8 மணி முதல் 10 மணிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News October 25, 2024

கடலூர் ஒழுங்குமுறை கூடத்தில் வரத்து நிலவரம்

image

கடலூர் முதுநகர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு தினம் தோறும் மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (அக்.,25) மணிலா வரத்து 8.79 மூட்டை, நெல் (ஐ.ஆர்-50) வரத்து 3.38 மூட்டை வந்துள்ளது. இது மட்டுமல்லாமல் வேறு எந்த விளை பொருட்களும் கடலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு இன்று விற்பனைக்கு வரவில்லை.

News October 25, 2024

நல்லூரில் மருத்துவ காப்பீடு சிறப்பு முகாம்

image

கடலூர் மாவட்டம் நல்லூரில் உள்ள சாந்தி மஹாலில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் இணைவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. வேப்பூர் வருவாய் வட்டாட்சியர் மணிகண்டன் முகாமை துவக்கி வைத்தார். மருத்துவ காப்பீட்டு திட்ட மாவட்ட அலுவலா் மணிவண்ணன், மக்கள் தொடர்பு அலுவலர்கள் சசிதரன், சம்சத்பேகம், வருவாய் ஆய்வாளர் ராஜவேலு, கிராம நிர்வாக அலுவலர் ராகுல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News October 25, 2024

வேப்பூரில் 5 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

image

கடலூர் மாவட்டம் வேப்பூர் ஆட்டுச் சந்தையில் விடிய விடிய ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. 5 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று மாலை 4 மணிக்கு துவங்கிய ஆட்டுச் சந்தை இன்று காலை 6 மணி வரை நடைபெற்றது. இந்த சந்தையில் வெள்ளாடு, குறும்பாடு, கொடியாடு, மாலாடு என பல்வேறு வகையான ஆடுகள் ரூ. 5ஆயிரம் முதல் ரூ. 37 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.

News October 25, 2024

பரவளூரில் 6 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை

image

விருத்தாசலம் அடுத்த பரவளூரை சேர்ந்தவர் மாரியப்பன். இவரை அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் (42), வெற்றிவேல் (30), ராம்பிரகாஷ் (35), ராஜா (33), ஆதிமூலம் (37), தமிழ்மணி (32) ஆகியோர் சாதி பெயரை சொல்லி திட்டி தாக்கினர். இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குபதிந்து ஆனந்த் உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்தனர். இவ்வழக்கில் நேற்று நீதிபதி விஜயகுமார், 6 பேருக்கும் தலா ஒரு வருடம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

News October 24, 2024

கடலூரில் ஓய்வு பெற்றவர்களின் குறைகேட்பு கூட்டம்

image

கடலூர் மாவட்டத்தில் அரசுத் துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களின் குறைகள் கேட்பு கூட்டம் கடலூரில் 22.11.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடக்க உள்ளது. அதனால் ஓய்வுபெற்றவர்கள் தங்களது கோரிக்கைகளை 2 பிரதிகளில் “ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் மனு” என குறிப்பிட்டு 30.10.2024-க்குள் ஆட்சியர் அலுவலகத்திற்கு தபால் அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

error: Content is protected !!