Cuddalore

News December 29, 2024

சிதம்பரத்தில் சப் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

image

சிதம்பரம் அருகே மனைப்பட்டா வழங்க கோரி, கிராம மக்கள் சப் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர். சிதம்பரம் அடுத்துள்ள பெரியப்பட்டு ஊராட்சி தலைவர் அர்சுணன் தலைமையில், ஜெயசங்கர், பாவாடை, ராதாகிருஷ்ணன், குப்புசாமி, ராஜசேகர், காமராஜ், சந்திரசேகர், கண்ணன், ரமேஷ், தேவதாஸ் உள்பட 100 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஊர் பொதுமக்கள், சிதம்பரம் சப் கலெக்டர் ராஷ்மிராணியிடம் மனு அளித்தனர்.

News December 28, 2024

கடலூர்: தூய்மை பணியில் ஈடுபட்டுள்ள 484 பணியாளர்கள்

image

கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகள், 14 பேரூராட்சிகள், 6 நகராட்சிகளில் இன்று கூட்டுதூய்மை பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் கடலூர் மாநகராட்சி பகுதியிலிருந்து 149 தூய்மை பணியாளர்கள், 335 தனியார் துறை சார்ந்த பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாதந்தோறும் குறைந்தபட்சம் இரண்டு முறை இப்பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News December 28, 2024

கடலூர் கடற்கரை சாலையில் நாளை கோலப்போட்டி

image

கடலூர் சில்வர் பீச் கடற்கரை சாலையில் நாளை (டிசம்பர் 29) காலை 7 மணிக்கு கோலப்போட்டி நடைபெற உள்ளது. இந்த கோலப்போட்டி ஒரு மணி நேரம் நடைபெறும். இதில் புள்ளி கோலம், டிசைன் கோலம், ரங்கோலி கோலம் ஆகிய கோலங்கள் மட்டுமே போட வேண்டும். இந்தப் போட்டியில் பங்கேற்க ஏற்கனவே பதிவு செய்தவர்கள் மட்டுமே தங்களது ஏதாவது ஒரு அடையாள சான்றுடன் கலந்து கொள்ளலாம்.

News December 28, 2024

கடலூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: எலக்ட்ரீசியன் கைது

image

கடலூர் அருகே உள்ள குமராபுரத்தை சேர்ந்தவர் பாரதிராஜா (43) எலக்ட்ரீசியன். மனைவியிடமிருந்து பிரிந்து வாழ்கின்ற இவர், கடலூரில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பாரதிராஜாவை கைது செய்தனர்.

News December 27, 2024

கடலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் கொடுவா மீன்வளர்ப்பு பயிற்சி பெற விருப்பமுள்ளவர்கள் உதவி இயக்குநர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, ரேவு மெயின் ரோடு, கடல்வாழ் உயிரியல் அண்ணாமைலை பல்கலைகழகம் எதிரில், பரங்கிப்பேட்டை-608502 என்ற முகவரியில் 10.01.2025க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News December 27, 2024

அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு: ஆட்சியர் அறிவிப்பு

image

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று இரவு மரணம் அடைந்தார். இந்த நிலையில் அவரது மறைவையொட்டி இன்று நடக்க இருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் இன்று (27.12.2024) நடைபெற இருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News December 27, 2024

சிறுமியிடம் அத்துமீறல்-  இளைஞர் மீது வழக்கு

image

பண்ருட்டி அடுத்த ஏ.ஆண்டிக்குப்பத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (30). இவர் பண்ருட்டி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த சிறுமி தற்போது 5 மாத கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில், பண்ருட்டி ஊர் நல அலுவலர் மோகன், பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் கோவிந்தராஜ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

News December 27, 2024

கடலூர்: பைக் மோதி ஆசிரியர் உயிரிழப்பு

image

கம்மாபுரம் அடுத்த பெருந்துறையை சேர்ந்தவர் தனபால்(58). விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வந்த இவர் நேற்று தனது பைக்கில் சு.கீணனூர் அருகே சென்றபோது எதிரே வந்த பைக் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கம்மாபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 26, 2024

பொது மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரித்து தங்கள் பகுதிக்கு வரும் தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும், காய்ச்சல் ஏற்படாவண்ணம் சுடுதண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும், மழைக்காலம் என்பதால் குளோரின் கலந்த குடிநீரை பயன்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News December 26, 2024

குமராட்சி: மனைவி மீது தாக்குதல் கணவன் கைது

image

குமராட்சியில், கணவன் மனையிடையே ஏற்பட்ட தகராறில், கோபித்துக் கொண்டு, குமராட்சி அடுத்த மேல்தவர்த்தம்பட்டில் உள்ள தாய் வீட்டிற்கு குழந்தைகளுடன் வந்து சத்யா தங்கினார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வெற்றிச்செல்வன், போதையில் மாமனார் வீட்டிற்கு வந்து, மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார்.குடும்பம் நடத்த வர மறுத்ததால், மனைவியை தாக்கினார் இது குறித்த புகாரில் கணவரை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!