India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூர் மக்களே, உங்களை முன்னறிவிப்பின்றி வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் நீங்கள் புகார் அளிக்கலாம். அதன்படி, வீட்டு வேலை செய்பவர்கள் நலவாரியம் – 04428110147, கட்டுமான தொழிலாளர் நலவாரியம் – 044-28264950, 044-28264951, 04428254952, உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம் – 044-28110147. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

விருத்தாசலம் அடுத்த எருமனூரை சேர்ந்தவர் செந்தில்குமார் மகள் தர்ஷினி (17). விருத்தாசலம் அரசு கல்லூரியில் படித்து வரும் தர்ஷினி, பகுதி நேரமாக விருத்தாசலத்தில் உள்ள செல்போன் கடையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று அவரது காதலருடன் செல்போனில் வீடியோ காலில் பேசிய தர்ஷினி திடீரென கடையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

கடலூர் மாவட்ட சிறுபான்மையின முஸ்லீம் மாணவர்களுக்கு, வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு பயில்வதற்கு தலா ரூ.36 லட்சம் வீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள்<

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் இன்று (செப்.21) இரவு 10 மணி முதல் நாளை (செப்.22) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் இந்திய பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில்(NLC)சுகாதார ஆய்வாளர் காலிப்பணியிடங்க்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்காக மாத சம்பளமாக ரூ.38,000 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இங்கே <

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் இன்று (செப்.21) காலை 8.30 மணி நிலவரப்படி, கடலூர் மாவட்டம் வேப்பூரில் 11 மில்லி மீட்டர் மழை, அண்ணாமலை நகரில் 11 மில்லி மீட்டர் மழை, புவனகிரியில் 7 மில்லி மீட்டர் மழை, திட்டக்குடி அடுத்த பெலாந்துறையில் 5.2 மி.மீ மழை, சேத்தியா தோப்பு 2 மி.மீ மழை மற்றும் கடலூரில் 0.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இலவச ‘பால் கணக்கெடுப்பு, அக்கவுண்டிங்’ பயிற்சி வழங்கப்படுகிறது. 20 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில் தினசரி பால் கணக்கீடு, கலெக்ஷன், நிர்வாகம் உள்ளிட்டவை சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படும். இதில் பயிற்சி பெற்றால் ஆவின் நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பை பெறலாம். இதற்கு விண்ணப்பிக்க <

கடலூர் மாவட்டம் பண்ருட்டி எம்எல்ஏ மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பிரதமர் மோடியே! இந்தியப் பெருநிலத்தில் வாழும் அனைத்து மொழிவழித் தேசிய இனங்களையும் மதியுங்கள் என விமர்சித்துள்ளார். மேலும் குஜராத்தில் நடைபெற்ற நிகழ்வில், குஜராத்தி மொழியில் பேசாமல் இந்தியில் பேசியதற்காக, அங்குள்ள மக்களிடம் பிரதமர் மன்னிப்பு கேட்டுள்ளார் என அவர் தெரிவித்தார்.

கடலூர் மக்களே, Bank வேலைக்கு போக ஆசை இருக்கா? இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாகவுள்ள 127 Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது.
1.நிறுவனம்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
2.பணி: Specialist Officer
3.கல்வி தகுதி: B.E./B.Tech, MBA, M.Sc,
4.சம்பளம்: 64,820
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
6.வயது வரம்பு: 24 முதல் 40 வரை
7.கடைசி தேதி: 03.10.2025
இந்த தகவலை SHARE பண்ணுங்க

கடலூர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம்.<
Sorry, no posts matched your criteria.