India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரபப்படவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் <

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற செப்.26ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 10ம் வகுப்பு முதல் ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறும், இம்முகாமில் தேர்ந்தெடுக்கப்படும் பதிவுதாரர்களின் பதிவு எண், வேலைவாய்ப்பு அலுவலக பதிவிலிருந்து நீக்கம் செய்யப்படமாட்டாது எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

குள்ளஞ்சாவடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவர். கல்லூரியில் பி.எஸ்சி முதலாமாண்டு படித்து வரும் மாணவன், கடந்த செப்.20-ம் தேதி மாயமாகியுளார். புகாரின் பேரில், குள்ளஞ்சாவடி போலீசார் விசாரணை நடத்தினர். அதில், குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்த திருமணமான 45 வயது பெண் ஒருவர், மாணவனிடம் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது. இதையடுத்து அப்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

தவாக தலைவர் மற்றும் எம்எல்ஏ-வுமான வேல்முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘தமிழகம் என்றாலே கல்வி, அறிவு, திறமை என்று நாடு முழுவதும் பெருமையாகப் பேசப்படும் ஒன்று. அந்தக் கல்வித்தரத்தைக் குறைத்து மதிப்பிட்டு, தமிழகத்தில் தரமான கல்வி இல்லை என கூறியுள்ள ஆளுநரின் கருத்து, மாணவர்களின் உழைப்பையும், தமிழகம் கட்டியெழுப்பிய கல்வி மரபையும் அவமதிப்பதாகவும், அதனை கண்டிக்கிறோம்’’ என தெரிவித்துள்ளார் அவர்.

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று(செப்.22) இரவு 10 மணி முதல் இன்று (செப்.23) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மக்களே தீபாவளி பண்டிகை நாட்களில் நீங்க பணியாற்றும் கம்பெனிகளில் Payment of bonus act 1965படி 21,000 கீழ் சம்பாதிப்பவர்களுக்கு 8- 20% சதவீதம் கட்டாயம் போனஸ் வழங்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது. எனவே கம்பெனில உங்க தீபாவளி போனஸ் கேட்டு வாங்குங்க. போனஸ் தரலைனா கடலூர் தொழிலாளர் நலத்துறை அலுலகத்தில் 04142-223984 eன்ற எண்ணில் புகாரளியுங்க. இந்த தகவலை LIKE செய்து அனைவருக்கும் SHARE பண்ணுங்க.!

புவனகிரி அடுத்த சேர்ந்திரக்கிள்ளையை சேர்ந்தவர் கோகுலசந்துரு. இவர் நேற்று தனது பைக்கில் விருத்தாசலம்-சேலம் சாலை வழியாக வேப்பூருக்கு சென்று கொண்டிருந்தார்.வேப்பூர் அடுத்த என். நாரையூர் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது எதிரே வந்த டேங்கர்லாரி பைக் மீது மோதியதில் பலத்த காயமடைந்த கோகுலசந்துரு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டம், நல்லாத்தூரில் திரிபுரசுந்தரி உடனுறை சொர்ணபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் இத்தலத்தில் அம்பாளை வணங்கி தாமரை பூவால் அர்ச்சனை செய்தால் நோய்கள் குணமாவதோடு, மீண்டும் நம்மை அண்டாது என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் நவராத்திரி தினத்தன்று இக்கோவிலில் சென்று வழிப்படுவது கூடுதல் சிறப்பாகும். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

பண்ருட்டி அடுத்த கட்டியம்பாளையத்தைச் சேர்ந்த கட்டட தொழிலாளி கார்த்திகேயன் (35) என்பவர் கடந்த 18.9.2025 அன்று சொக்கநாதர் குளத்தில் கழுத்து அறுக்கப்பட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, முன்விரோதம் காரணமாக கார்த்திகேயனை கொலை செய்த அதே பகுதியைச் சேர்ந்த தென்குமார் (30), மணிகண்டன் (32) ஆகியோரை நேற்று (செப்.,21) கைது செய்தனர்.

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) மூலம் வங்கிகளில் காலியாக உள்ள 13,217 Manager, Assistant Manager உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 688 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பணிக்கு ரூ.35,000 முதல் 80,000 வரை சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் வரும் செப்.28-க்குள்,<
Sorry, no posts matched your criteria.