Cuddalore

News January 2, 2025

கடலூர் மாவட்டத்தில் ரூ.4 கோடிக்கு மது விற்பனை

image

தமிழகத்தில் பண்டிகை காலங்களில் மது விற்பனையானது உச்சம் தொடுவது தற்போது வழக்கமான ஒன்றாகவே மாறிவிட்டது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் மட்டும் புத்தாண்டை முன்னிட்டு, சுமார் 4.5 கோடி அளவுக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. இருப்பினும் இது கடந்த ஆண்டை காட்டிலும் ரூ.51 லட்சம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இதைப்பற்றிய உங்கள் கருத்து? கமெண்டில் தெரிவிக்கவும்! ஷேர் செய்யவும்..

News January 1, 2025

போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு

image

கடலூர் மாவட்டம், திருமுட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் ரிஷிகா மற்றும் ஆறாம் வகுப்பு படிக்கும் ரித்திகா ஆகியோர் கடலூர் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று இருவரும் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர். அவர்கள் இருவரும் இன்று கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வனை சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றனர். உடன்‌ விசிக நிர்வாகிகள் உள்ளனர்.

News January 1, 2025

அதிமுக மாவட்ட செயலாளர் புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பு

image

2025ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் தொழில்துறை அமைச்சருமான எம்.சி. சம்பத் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் “அனைவருக்கும் 2025ஆம் ஆண்டு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

News December 31, 2024

இந்த புத்தாண்டை Way2News உடன் கொண்டாடுங்கள்

image

புத்தாண்டை முன்னிட்டு நீங்கள் உங்கள் வீடுகளில் போடும் அசத்தலான கோலங்களை Way2News-இல் பதிவிடலாம். நீங்கள் போடும் கோலங்களை உங்கள் பெயருடன் போட்டோ எடுத்து, உங்கள் பெயர், மாவட்டம், தாலுகா, கிராமம் உள்ளிட்ட விவரத்தை பதிவிட்டு, அனுப்பி வைக்கவும். இதற்க்கு நீங்கள் செய்ய வேண்டியது என்ன? என்ற விவரம் மேலே உள்ள வீடியோவில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இந்த புத்தாண்டை way2news உடன் கொண்டாடி மகிழுங்கள்.

News December 31, 2024

கடலூர் மாவட்டத்தில் அதிமுக-வினர் 1475 பேர் கைது

image

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை சம்பவத்தில், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிய திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் நேற்று கடலூர் மாவட்டத்தில் கடலூர், குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்  தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பெண்கள் உட்பட 1475 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News December 31, 2024

பண்ருட்டி அருகே கடனை அடைக்க முடியாததால் வாலிபர் தற்கொலை

image

பண்ருட்டி அருகே சூரக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (23). திருமணமாகாத இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு நடந்த தனது தங்கையின் திருமண செலவுக்காக பலரிடம் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடனை திருப்பி அளிக்க முடியாத காரணத்தால் மிகுந்த மன வேதனை அடைந்த விக்னேஷ் விஷம் அருந்தியதில் நேற்று காலை உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News December 31, 2024

கடலூரில் 5-ம் தேதி மாரத்தான் ஓட்ட போட்டி

image

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளினை சிறப்பிக்கும் வகையில் அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டப் போட்டி ஜன.5ஆம் தேதி காலை 7 மணிக்கு கடலூரில் நடக்கிறது. இதில் பங்கேற்க விருப்பமுள்ள 17 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் பெயர்களை 4.01.2025  க்குள் கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News December 30, 2024

பரங்கிப்பேட்டையில் அனுமன் ஜெயந்தி விழா

image

அனுமன் ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பரங்கிப்பேட்டை சஞ்சீவி ராயர் கோவில் தெருவில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது  அன்னதானத்திற்கான ஏற்பாடுகளை மரவாடி கோ. ஜெய்சங்கர் செய்திருந்தார் இதில் கவுன்சிலர் மரவாடி கோ‌. அருள்முருகன் முன்னிலை வகித்தார் இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

News December 30, 2024

கடலூர் மாவட்டத்திற்கு புதிய எஸ்.பி நியமனம்

image

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக எஸ்.ஜெயக்குமார் நியமனம் செய்ப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன் திருவாரூர் மாவட்ட எஸ்.பி-யாக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. மேலும் கடலூர் எஸ்.பி-யாக இருந்த ராஜாராம் தஞ்சை மாவட்ட எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். ஷேர் செய்யவும்!

News December 30, 2024

ஆட்சியர்கள் கண்காணிப்பில் கரும்பு கொள்முதல் 

image

பொங்கல் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கரும்பு, மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிப்பில் கொள்முதல் செய்யப்படும் என்றும், கரும்பின் உயரம் மற்றும் தரம் ஆகியவற்றை சோதித்து பொதுமக்களுக்கு தரமான கரும்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!