Cuddalore

News January 4, 2025

கடலூரில் இன்று அறிஞர் அண்ணா சைக்கிள் போட்டி

image

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளினை சிறப்பிக்கும் வகையில் அறிஞர் அண்ணா சைக்கிள் போட்டி இன்று காலை 8 மணிக்கு கடலூர், சாவடி அக்ஷ்சரா வித்யாசரம் மெட்ரிக்குலேசன் பள்ளியில் தொடங்கி நடைபெறும். இதில் 13, 15 மற்றும் 17 வயதுக்குள் உள்ளவர்கள் போட்டிகளில் கலந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News January 3, 2025

சிதம்பரம் வழியாக பொங்கல் சிறப்பு ரயில் அறிவிப்பு

image

பொங்கலை முன்னிட்டு சிதம்பரம் வழியாக தாம்பரத்திலிருந்து கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் 13-01-2025 கன்னியாகுமரியில் இருந்து 14-01-2025 அன்று தாம்பரத்தில் இருந்தும் புறப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. விரைவில் முன்பதிவு சேவையும் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 3, 2025

திருநங்கைகளுக்கு கட்டப்படும் குடியிருப்புகளை ஆட்சியர் ஆய்வு

image

குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கருங்குழி ஊராட்சியில் ரூ.80.5 இலட்சம் மதிப்பீட்டில் 23 திருநங்கைகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுவரும் குடியிருப்புகளை ”நிறைந்தது மனம்” திட்டத்திற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், இன்று (03.01.2025) திருநங்கைகளுடன் சென்று பார்வையிட்டார்.

News January 3, 2025

கடலூர்: புத்தாண்டு தினத்தில் பிறந்த 21 குழந்தைகள்

image

கடலூர் மாவட்டத்தில் புத்தாண்டு தினத்தில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் 7 குழந்தைகள், பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம், விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி, பரங்கிப்பேட்டை, புவனகிரி, வேப்பூர் ஆகிய அரசு மருத்துவமனைகளில் 14 குழந்தைகள் என மொத்தம் 21 குழந்தைகள் புத்தாண்டு தினத்தில் பிறந்துள்ளது.

News January 3, 2025

கால்நடைகளுக்கு தடுப்பூசி பணியை துவக்கி வைத்த ஆட்சியர்

image

கடலூர், நாணமேடு மற்றும் உச்சிமேடு கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கோமாரி தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று தொடங்கி வைத்தார். இந்த முகாமில் செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை, குடற்புழு நீக்கம் போன்ற சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன. தொடர்ந்து பயனாளிகளுக்கு பசுந்தீவனம், தாது உப்பு கலவை ஆகியவற்றை வழங்கினார்.

News January 3, 2025

ஆருத்ர தரிசனம் கடலூரில் உள்ளூர் விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு

image

கடலூர் : சிதம்பரம் வட்டம், சிதம்பரம் நடராஜர் திருக்கோயில் ஆருத்ர தரிசனம் முன்னிட்டு ஜன.13ஆம் தேதி அன்று ஒருநாள் மட்டும் உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அறிவித்துள்ளார். அவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் பிப்.01ஆம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

News January 3, 2025

சிதம்பரம் நடராஜர் கோயிலில் 30 ஆண்டுக்கு பிறகு தெப்ப உற்சவம்

image

சிதம்பரம் ஞானப்பிரகாசம் குளத்தில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடராஜர் கோயிலில் தரிசன விழா, தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. இதற்காக தமிழக அரசு வேளாண் அமைச்சர் மூலமாக 15 கோடி நிதி ஒதுக்கி கோயில் குளத்தை சீர் செய்தனர். மார்கழி 4ஆம் தேதி துவக்க விழா, 15ஆம் தேதி நிறைவு விழா நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை நடராஜர் கோயில் தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

News January 3, 2025

போக்சோ வழக்கில் இளைஞர் மீது வழக்கு

image

நெல்லிக்குப்பம் அருகே முள்ளிகிராம்பட்டை சேர்ந்தவர் ராஜ்குமார் மகன் சசிகுமார் (19). இவர் கடலூரில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் 16 வயதுடைய சிறுமியிடம் பழகி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அந்த சிறுமியை அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த சிறுமி 2 மாத கர்ப்பமானார். இது குறித்து பண்ருட்டி போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் சசிகுமார் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News January 2, 2025

கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் பணி- ஆட்சியர்

image

தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின்” (NADCP) கீழ் கடலூர் மாவட்டத்தில் 2025ஆம் ஆண்டில் 3.1.2025 முதல் 31.1.2015 வரை கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசிப்பணி அனைத்து கிராமங்களிலும் 3 இலட்சம் எண்ணிக்கை உள்ள பசுவினம் மற்றும் எருமையினங்களுக்கும் 100% தடுப்பூசிப்பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 83 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர்  தெரிவித்தார்.

News January 2, 2025

கடலூர்: ஒரே ஆண்டில் 101 பேர் குண்டர் சட்டத்தில் அடைப்பு

image

கடலூர் மாவட்டத்தில் கடந்த 2024ஆம் ஆண்டில் தொடர் கொலை, கொள்ளை, சாராய கடத்தல், கஞ்சா விற்பனை போன்ற குற்ற செயலில் ஈடுபட்ட 101 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். மேலும் 16 போக்சோ குற்ற வழக்கில் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் 16 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுக்கப்பட்டுள்ளதாக கடலூர் எஸ்.பி ராஜாராம் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!