India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூர் மக்களே உங்கள் டிரைவிங் லைசன்ஸ், வண்டியின் ஆர்.சி புக் மறந்துட்டீங்களா? கவலை வேண்டாம்! உடனே இங்கே <

கடலூர் மாவட்டம் மருங்கூர் பழைய காலணியைச் சேர்ந்தவர் ராமராஜன்(19). தனியார்ப் பள்ளி வேனில் கிளீனராக வேலை பார்க்கும் ராமராஜன் நேற்று (செப்.23) காலை தனது வீட்டில், பின்பக்கம் கைகள் கட்டப்பட்ட நிலையில் தூக்கில் சடலமாகத் தொங்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இது குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் மர்ம சாவு என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் இன்று (செப்.24) உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஜி.என் மஹால்; சாத்தப்பாடி ஊராட்சி மன்ற அலுவலகம்; பரங்கிப்பேட்டை ராமகிருஷ்ணா திருமண மண்டபம்; முத்துகிருஷ்ணாபுரம் ஜெய் ரமேஷ் மண்டபம்; கோ.ஆதனூர் அரசு உயர்நிலைப்பள்ளி; கோண்டூர் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடம் ஆகிய இடங்களில் நடக்கிறது.

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று(செப்.23) இரவு 10 மணி முதல் இன்று (செப்.24) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பல்வேறு துறைகளில் தூய்மை மிஷன் 2.0 இயக்கத்தின் மூலம் பயனற்ற பழைய பொருட்களை சேகரித்தனர். பின் அதனை தரம்பிரித்து மறுசுழற்சிக்காக விற்பனை செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், இன்று (செப்.23) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

கடலூர் மக்களே.. மாதம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை சம்பளத்தில் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 171 Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இந்த பணியிடத்திற்கு B.Tech., B.E., M.E., CA., M.Sc., MBA., MCA., உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்த 23 முதல் 36 வயதுக்கு உட்பட்டவர்கள், <

புதுச்சேரி மாநிலம் ஆராய்ச்சிக்குப்பத்தை சேர்ந்தவர் சீனிவாசன் மனைவி ருக்குமணி (57). இவர் கடலூர் உழவர் சந்தையில் வைத்து ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இந்நிலையில் சீட்டு கட்டியவர்களுக்கு பணம் திருப்பி கொடுக்காமல் ரூ.33,32,000 மோசடி செய்து விட்டார். இது குறித்து கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து மோசடியில் ஈடுபட்ட ருக்குமணியை நேற்று கைது செய்தனர்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 26.9.2025 அன்று விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சி.பி.ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் கோரிக்கை குறித்து பேச விரும்பும் விவசாயிகள் அன்று காலை 8 மணி முதல் 10 மணிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவசாயிகள் மனுக்களை அளித்து பயன்பெறலாம் என ஆட்சியர் சி.பி.ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரபப்படவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் <
Sorry, no posts matched your criteria.