Cuddalore

News September 24, 2025

கடலூர் மக்களே உஷார்; மழைக்கு வாய்ப்பு!

image

கடலூர் மக்களே இன்று (செப்.24) இரவு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது வருகிறது. மேலும், இன்று இரவு தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் சற்று எச்சரிக்கையோடு இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடை முக்கியம் மக்களே…!

News September 24, 2025

பாலம் கட்டும் பணி; தொடங்கி வைத்த அமைச்சர்!

image

கடலூர் மாவட்டம் ஓட்டேரி-பில்லாலி இடையே ரூ.16.75 கோடி மதிப்பீட்டில் கெடிலம் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டுமானப் பணிக்கு இன்று(செப்.24) அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு அடிக்கால் நாட்டினார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் பிரியங்கா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கற்றனர்.

News September 24, 2025

கடலூர்: சிறுமியிடம் அத்துமீறிய நபர் போக்சோவில் கைது

image

கடலூர் மாவட்டம் புவனகிரி சரவணா நகரில் தெய்வக்கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியை சேர்ந்த சிறுமிக்கு சாக்லேட் மற்றும் பழம் கொடுத்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் புவனகிரி காவல் நிலையத்தில் புகராளித்தனர். அதனைத் தொடர்ந்து புகாரின்பேரில், புவனகிரி போலீசார் தெய்வகண்ணு மீது போக்சோ வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.

News September 24, 2025

கடலூர்: திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை

image

விருத்தாசலம் புதுக்குப்பத்தை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி(26). இவருக்கும் விஜயமா நகரத்தை சேர்ந்த ராஜதுரை என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின் ராஜதுரை சிங்கப்பூருக்கு வேலைக்கு நிலையில், பாக்கியலட்சுமி புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கத்தில் தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், நேற்று பாக்கியலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

News September 24, 2025

கடலூர் மாவட்டத்தில் இன்றைய மழை நிலவரம்

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (செப்.24) காலை 8.30 மணி நிலவரப்படி எஸ்ஆர்சி குடிதாங்கி 1 மில்லி மீட்டர், லால்பேட்டை 1 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது மட்டும் இல்லாமல் மாவட்டத்தில் வேறு எந்த இடங்களிலும் மழை பதிவாகவில்லை.

News September 24, 2025

கடலூர்: கூடுதலாக 31 வாக்குச்சாவடி உருவாக்கம்

image

கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர் சட்டமன்றத் தொகுதியில் பகுப்பாய்வுக்கு முன் 227 வாக்குச்சாவடி, புதிய வாக்குச்சாவடி மையம் 31, இடம் மற்றும் கட்டட மாற்றம் 2 என பகுப்பாய்வுக்குப் பின்னர் மொத்தம் 258 வாக்குச்சாவடி உள்ளதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டுள்ளார்.

News September 24, 2025

கடலூர்: பெற்றோருக்கு பயந்து இளம்பெண் தற்கொலை

image

கடலூர், முதுநகர் அன்னவல்லியைச் சேர்ந்தவர் பிரபாவதி (25). இவர் தனது தோழிகளுடன் திருப்பதி சென்று விட்டு நேற்று சொந்த ஊர் திரும்பினார். அப்போது வரும் வழியில் தனது ஒரு பவுன் நகை மற்றும் செல்போனை தொலைத்து விட்டதால் பெற்றோர் திட்டுவார்கள் என பயந்த பிரபாவதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News September 24, 2025

கடலூர் மக்களே உங்கள் ஊர் இனி உங்கள் கையில்!

image

கடலூர் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? <>TNSMART என்ற இணையதளத்தின்<<>> மூலம் உங்கள் மாவட்டம், வட்டம், கிராமத்தை தேர்வு செய்து பிரச்சனைகளை நீங்களே அரசுக்கு நேரடியாக புகார் கொடுக்க முடியம். உங்கள் புகார் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மற்றவர்களுக்கும் இதனை SHARE பண்ணுங்க!

News September 24, 2025

கடலூர்: ரூ.75,000 கையாடல்-காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்

image

ராமநத்தம் காவல் ஆய்வாளர் பிருந்தா என்பவர் கடந்த 8-9-2025 அன்று மூதாட்டி ஒருவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட பிரபாகரனை (39) கைது செய்தார். இந்நிலையில் பிரபாகரனிடம் பறிமுதல் செய்த ரூ.75 ஆயிரத்தை ஆய்வாளர் பிருந்தா கையாடல் செய்ததாக அறிந்த விழுப்புரம் சரக டிஐஜி உமா, ஆய்வாளர் பிருந்தாவை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆயுதப்படைக்கு மாற்றிய நிலையில், நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

News September 24, 2025

கடலூர்: டிஜிட்டல் ஆதார் APPLY பண்ணுங்க!

image

கடலூர் மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HI-ன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதாரை தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும். இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

error: Content is protected !!