Cuddalore

News January 6, 2025

கடலூரில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

image

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, இறுதி வாக்காளர் பட்டியலினை மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (06.01.2025) காலை 10 மணியளவில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளின் பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட உள்ளார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் தேர்தல் தனி தாசில்தார் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

News January 6, 2025

கடலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

கடலூர் கலெக்டர் சிபி ஆதித்ய செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “விமான நிலையத்தில் பல்வேறு பணிகளில் சேர்வதற்கான பயிற்சியில் +2 அல்லது பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 23 வயதிற்குட்பட்ட பட்டியலினத்தவர் பங்கேற்கலாம் எனவும், பயிற்சி கால அளவு 6 மாதம், விடுதியில் தங்கி படிக்கும் வசதியும், பயிற்சிக்கான செலவினத்தொகை 95 ஆயிரம் வழங்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க.

News January 6, 2025

கடலூரில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

image

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, இறுதி வாக்காளர் பட்டியலினை மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (06.01.2025) காலை 10 மணியளவில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளின் பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட உள்ளார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் தேர்தல் தனி தாசில்தார் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

News January 5, 2025

கரும்பு கொள்முதல் செய்ய 14 குழு அமைப்பு

image

கடலூரில் பொங்கல் பரிசு வழங்குவதற்காக 7,78,296 குடும்ப அட்டைதாரர்களுக்கு முழு கரும்பு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்திடும் வகையில் வேளாண்மைத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்களான வேளாண் அலுவலர், கூட்டுறவுத்துறை கள அலுவலர், பொது விநியோகத்திட்ட சார்பதிவாளர் ஆகியோர் அடங்கிய வட்டார அளவிலான 14 கொள்முதல் குழு அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News January 5, 2025

பாட்டியை திட்டிய தொழிலாளியை கொலை செய்த இளைஞர்

image

விருத்தாசலம் அடுத்த வீராரெட்டிக்குப்பத்தைச் சேர்ந்தவர் தொழிலாளி சிவா (35). இவர் நேற்று இரவு அதே பகுதியைஅ சேர்ந்த கோவிந்தன் மனைவி செல்லம்மாள் (60) என்பவரை மது போதையில் திட்டியதாக கூறப்படுகிறது. இதைப் பார்த்து ஆத்திரமடைந்த செல்லம்மாளின் பேரன் அபிமன்யு (19), சிவாவை கத்தியால் குத்திக் கொலை செய்தார். இதுகுறித்து ஆலடி போலீசார் வழக்கு பதிந்து அபிமன்யுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

News January 5, 2025

கடலூரில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

image

கடலூர் கோட்ட மின்வாரிய அலுவலகத்தில் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் ஜன.07ஆம் தேதி (செவ்வாய்) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் கடலூர் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கக்கூடிய மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்கள் மின் தொடர்பான குறைகளை தெரிவிக்கலாம் என கடலூர் செயற்பொறியாளர் எம்.வள்ளி தெரிவித்துள்ளார்.

News January 4, 2025

கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

image

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ஐ.பி.எஸ்., கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டு கொலை வழக்கு சம்மந்தமாக அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இந்த நிலையில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எஸ்.ஜெயக்குமார் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

News January 4, 2025

விருதுக்கு விண்ணப்பிக்கலாம் அழைப்பு

image

நீர் நிலைகளை பாதுகாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் பொதுமக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகளைப் போற்றி கவுரவிக்கும் வகையில் “முதலமைச்சரின் நீர்நிலைப் பாதுகாவலர்” விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருது பெற விருப்பமுள்ளவர்கள் http://awards.tn.gov.in என்ற வலைதளம் மூலம் வருகிற 17.01.2025-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News January 4, 2025

பொங்கல் கரும்பின் தரத்தை ஆய்வு செய்த ஆட்சியர்

image

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பில் வழங்கப்படவுள்ள கரும்பின் தரம் மற்றும் அளவு குறித்து குறிஞ்சிப்பாடி வட்டம், கோரணப்பட்டு பகுதியில் உள்ள கரும்பு வயலில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

News January 4, 2025

நெய்வேலியில் கைத்திறன் கண்காட்சி: ஆட்சியர் அறிவிப்பு

image

நெய்வேலி பிளாக் 11 டவுன் ஷிப் லிக்னைட் ஹாலில் 01-01-2025 முதல் 13-01-2025 வரை காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி நடைபெறுகிறது. கைவினைப் பொருட்கள், கைத்திறன் துணி வகைகள், நகை வகைகள் மற்றும் கைத்திறன் அறைகலங்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் 10% தள்ளுபடி பெற்று பொருட்களை வாங்கி பயன்பெறலாம் என கடலூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!