India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர், கட்டியங்குப்பம் பகுதியைச் சேர்ந்த கோபாலகண்ணன், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கோபால கண்ணன் மனைவி விஜயாவிற்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக கணவன் மனைவியிடையே தகராறு இருந்த நிலையில், விஜயா மீன்குழம்பில் விஷம் வைத்து கணவனை கொலை செய்துள்ளார். இதையடுத்து போலீசார் விஜயா மற்றும் அவருக்கு உதவியாக செயல்பட்ட தேவநாதன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். கடலூர் மாவட்டத்தில் மட்டும் 51 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க
கடலூர் மாவட்டம் மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் மறைந்த திருஅறை திறக்கப்பட்டு ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதனை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். காலை 12 மணிக்கு திறக்கப்பட்ட திருஅறை பக்தர்கள் தரிசனம் செய்த பின்பு இரவு 7 மணிக்கு கதவு மூடப்பட்டு கோவில் செயல் அலுவலர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. மேலும் அடுத்த ஆண்டு இந்த சீல் அகற்றப்பட்டு திருவரை தரிசனம் நடைபெறும்.
மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. கணினி வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். 1 வருட பயிற்சிக்கு பின்னர் ரூ.60,000 – ரூ.1,80,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். நாளைக்குள் (பிப்.14) <
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மாநிலம் முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்கள் கூட்டுறவு அமைப்புகள் மற்றும் மருந்தாளுநர்கள் மூலம் ரூ.30 கோடி மதிப்பீட்டில் அரசு மானியம் மற்றும் கடன் வசதியுடன் தொடங்கப்படும் என அறிவித்தார். அதன்படி கடலூர் மாவட்டத்தில் 36 முதல்வர் மருந்தகங்கள், கூட்டுறவு அமைப்புகள் மற்றும் மருந்தாளுநர்கள் மூலமாக தொடங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் இன்று 12 ஆம் தேதி அதிகாலை 5.30 மணியளவில் 6 ஆம் கால ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று 5 ஆம் கால ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புவனகிரி அருகே கீரப்பாளையம் பகுதியில் சிதம்பரம் புவனகிரி நெடுஞ்சாலையில் வேகமாக வந்த தனியார் பேருந்து முன்னாள் சென்ற டாக்டர் மீது மோதியதில் டிராக்டர் மற்றும் லோடு டிப்பர் தனித்தனியே கழண்டு சாலையில் இரு புறங்களிலும் சிதறி பெரும் விபத்து டிராக்டரில் பயணித்த ஐந்து வயது பெண் குழந்தை உயிர் இழப்பு மேலும் பேருந்தில் பயணித்த பலர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி.
கடலூர் மாவட்டம் குற்ற ஆவண காப்பகம் துணை காவல் கண்காணிப்பாளராக சார்லஸ் இன்று பொறுப்பேற்று கொண்டார். கடலூர் மாவட்டம் ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளராக அப்பண்டைராஜ் பொறுப்பேற்று கொண்டார். புதிதாக பொறுப்பேற்று கொண்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS யை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தேசிய குடற்புழு நீக்க நாளினை முன்னிட்டு கடலூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பி.ஆதித்யா செந்தில்குமார் இன்று (10.02.2025) பள்ளி மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார். உடன் மாநகராட்சி ஆணையாளர் அனு, துணை இயக்குநர் சுகாதார பணிகள் பொற்கொடி, மாவட்ட கல்வி அலுவலர் ஞானசங்கர், தலைமையாசிரியர் இந்திரா மற்றும் பலர் உடன் இருந்தனர்.
குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் தைப்பூசத்தை முன்னிட்டு 11,12,13 ஆகிய மூன்று நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 06147/48 விழுப்புரம் – விருத்தாசலம் -வடலூர் கடலூர் துறைமுகம் சந்திப்பு- வடலூர் -விருத்தாச்சலம் -விழுப்புரம் MEMU. 06133/32 விருத்தாச்சலம் – வடலூர் -கடலூர் துறைமுகம் சந்திப்பு – வடலூர் – விருத்தாச்சலம் MEMU. 8 முன்பதிவில்லா பெட்டிகள் கொண்ட MEMU சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.