India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேத்தியாத்தோப்பு அடுத்த வானமாதேவியை சேர்ந்தவர் வனத்தையன் மகன் பரிசுத்தராஜா. இவர் நேற்று முன்தினம் மாலை அகரபுத்துார் செல்லும் சாலையில் உள்ள வாய்க்கால் பாலத்தில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பாலத்தில் இருந்து தவறி விழுந்து பரிசுத்தராஜா உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த சோழதரம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூா் சான்றோா்பாளையம், பள்ளிக் கூட தெருவைச் சோ்ந்தவா் சந்திரசேகா் மகன் சங்கா் (34). இவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்ததாக சுத்துக்குளம் பகுதியைச் சோ்ந்த சதீஷ் (33), அன்பு (33) ஆகியோரை முதுநகா் போலீஸாா் கடந்த ஜன.1-ஆம் தேதி கைது செய்தனா். இந்நிலையில், மாவட்ட எஸ்.பி. பரிந்துரையின்பேரில், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் இருவரையும் ஒராண்டு குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.
திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி கடலூர் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் மேற்பார்வையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நல்லதுரை அவர்கள் தலைமையில், 6 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 20 காவல் ஆய்வாளர்கள், 71 உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் தலைமை காவலர்கள், ஆயுதப்படை போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 1000 காவல்துறையினர் நாளை பாதுகாப்பு பணியில் மேற்கொள்வார்கள்.
கடலூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளி, அலுவலகங்களுக்கும். 13.01.2025 அளிக்கப்பட்ட ஆருத்ரா தரிசன உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் பணிநாளாக இன்று 01.02.2025 சனிக்கிழமை அன்று பள்ளி வேலைநாளாக செயல்பட தெரிவிக்கப்பட்டுள்ளதால், கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை பள்ளிகள் மற்றும் அலுவலகங்களும் நாளை (01.02.2025) சனிக்கிழமை முழு வேலைநாளாக செயல்பட வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.
கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினம்தோறும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (ஜன.,31) இரவு கடலூர் காவல் ஆய்வாளர் ரேவதி, சிதம்பரம் உதவி ஆய்வாளர் பொன்மகரம், விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் சங்கர், பண்ருட்டி காவல் ஆய்வாளர் நந்தகுமார் மற்றும் திட்டக்குடியில் காவல் ஆய்வாளர் சசிகலா ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் கடலூர் வடக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினராக ஜி.கோகுல் என்பவரை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நியமனம் செய்தார். இந்த நிலையில் த.வெ.க கடலூர் வடக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்ட கோகுலுக்கு கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த த.வெ.க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளி, அலுவலகங்களுக்கும். 13.01.2025 அளிக்கப்பட்ட ஆருத்ரா தரிசன உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் பணிநாளாக நாளை 01.02.2025 சனிக்கிழமை அன்று பள்ளி வேலைநாளாக செயல்பட தெரிவிக்கப்பட்டுள்ளதால், கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை பள்ளிகள் மற்றும் அலுவலகங்களும் நாளை (01.02.2025) சனிக்கிழமை முழு வேலைநாளாக செயல்பட வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.
கடலூர் மாவட்டத்தில் தற்போது யூரியா 8 ஆயிரத்து 787 மெட்ரிக் டன்னும், டி.ஏ.பி 1,885 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 3 ஆயிரத்து 624 மெட்ரிக் டன்னும், காம்பளக்ஸ் உரம் 4 ஆயிரத்து 607 மெட்ரிக் டன்னும், சூப்பர் பாஸ்பேட் 1,014 மெட்ரிக் டன்னும் என மொத்தம் 19 ஆயிரத்து 916 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு உள்ளது. இதனை விவசாயிகள் வாங்கி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சி.பி. ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் விவசாயிகள் குறைதீர்வுநாள் கூட்டம் இன்று (31.01.2025) நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் கோமதி, வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) கென்னடி ஜெபக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) கதிரேசன் உட்பட பலர் உள்ளனர்.
ஸ்ரீமுஷ்ணம் அருகே சாத்த வட்டம் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ஆக்கிரமிப்பு இருந்து வருவதை அகற்றக் கோரி சி.பி.எம் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை தடுத்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பேச்சுவார்த்தை ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.