India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் மாவட்டத்தில் உள்ள முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டை தாரர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் 31.3.2025-க்குள் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று கைரேகை (இ. கே.ஒய்.சி.) பதிவு செய்யப் பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த 13 வயது மற்றும் 14 வயது பள்ளி மாணவிகளை கடந்த 2014ம் ஆண்டு அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார் (39), இவரது மனைவி தமிழரசி (39) ஆகியோர் சிறுமிகளை கடத்தி சென்று,பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த இருவரையும் சிபிசிஐடி போலீசார் நேற்று கைது செய்தனர். இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
கடலூர் மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் செயல்பட்டு வரும் பல்வேறு மருத்துவ சேவை நிலையங்களில் பணிபுரிய மருத்துவ அலுவலர், பல்நோக்கு சுகாதார மேற்பார்வையாளர், செவிலியர் அடிப்படை பணியாளர்கள் உள்ளிட்ட பணிகளுக்கு 16 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 24.3.2025 தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு இங்கே <
காட்டுமன்னார்கோயில் அருகே முட்டம் மேலத்தெருவில் உள்ள கொள்ளிடம் ஆற்றில், இன்று மதியம் மனோகரன் (52) என்பவரை முதலை கடித்து இழுத்ததில், கை,கால் பகுதியில் பலத்த காயம் அடைந்தார். தற்போது முட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நேற்றிரவு, இதே பகுதியில் ஒருவரை முதலை கடித்தது குறிப்பிடத்தக்கது.
ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற சமூக மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வு இலவச பயிற்சி வகுப்பை நடத்துகிறது. இதற்கு குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.4லட்சத்துக்குள் இருக்க வேண்டும். பயிற்சியில் சேர விருப்பம் உள்ள மாணவர்கள் <
பெண்ணாடம் லோட்டஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 22.3.2025 அன்று நடக்கிறது. இதில் தனியார் துறை நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்து உடனடியாக பணி நியமன ஆணை வழங்கவுள்ளது. அதனால் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார். SHARE NOW
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கு, புற்றுநோய், பக்கவாதம், நீரிழிவு நோய் மற்றும் காசநோய் போன்ற நெடிய நோய்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திட சிறப்பு மருத்துவ முகாம் வரும் 20ஆம் தேதி காலை 7 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு சார்பில் இலவச மொபைல் ஆப் டெவலப்பர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், இப்பயிற்சிக்கு பின்னர் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் <
மங்கலம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் சொந்தமாக டியூஷன் நடத்தி வருகிறார். கடந்த 14ம் தேதி காலை டியூஷனுக்கு வந்த பிளஸ் 2 மாணவியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இது குறித்து மாணவியின் தாய் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் நேற்று வெங்கடேசனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குறிஞ்சிப்பாடி மேல கொளக்குடியைச் சேர்ந்தவர் பார்த்திபன்(32). இவர் நேற்று சிதம்பரம் அடுத்த வேலக்குடி பைபாஸ் மேம்பாலத்தில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் எதிர்பாராமல் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் பார்த்திபன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சிதம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.