Cuddalore

News October 9, 2025

கடலூர்: லாரி மோதி பெண் துடிதுடித்து பலி

image

ஸ்ரீமுஷ்ணம் சக்கர குளத் தெருவை சேர்ந்தவர் கலியன் மனைவி ஆண்டாள் (58). இவர் நேற்று ராஜேந்திரபட்டிணம் பேருந்து நிறுத்தம் அருகே நின்றபோது, அவ்வழியாக வேகமாக வந்த மினி லாரி ஒன்று ஆண்டாள் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் ஆண்டாள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இது குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

News October 9, 2025

கடலூர்: போலீஸ் எஸ்.ஐ மீது தாக்குதல்

image

கடலூர், மந்தாரக்குப்பம் போலீஸ் எஸ்.ஐ. கவிநிலவன் மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வடக்கு வெள்ளூரில் குடிபோதையில் நின்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த அஜித் (28), விக்னேஷ் (36) ஆகியோரிடம் விசாரித்த போது, இருவரும் எஸ்.ஐ. கவிநிலவனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து மந்தாரக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து 2 பேரையும் கைது செய்தனர்.

News October 9, 2025

கடலூர்: இரவு ரோந்து பணி செல்லும் காவலர்கள் விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (அக்.8) இரவு 10 மணி முதல் இன்று (அக்.9) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்!

News October 8, 2025

குட்கா கடத்தியவர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்

image

கடலூர் மாவட்டம் ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் போலிசார் இன்று சோதனையில் ஈடுபட்டபர். அப்போது ஹான்ஸ், குட்கா கடத்திய பாகூர், குருவிநத்தத்தைச் சேர்ந்த சரவணன்(38), என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர் மீது 3 வழக்குகள் நிலுவை உள்ளதையெடுத்து எஸ்.பி ஜெயக்குமார் பரிந்துரையில், மாவட்ட ஆட்சியர், சரவணனை ஓராண்டு காலம் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

News October 8, 2025

கடலூர்: சிதம்பரம் அருகே ரயில் மோதி ஒருவர் பலி

image

சிதம்பரம் கோவிந்தசாமி தெருவை சேர்ந்த குஞ்சிதபாதம். இவர் இன்று காலை (அக்.8) சிதம்பரம் இருப்புப்பாதை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிள்ளை ரயில் நிலையத்திற்கு இடையே விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே போலீசார், உடலை கைப்பற்றி தற்கொலையா? அல்லது விபத்தா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

News October 8, 2025

கடலூர்: ரயில்வேயில் கொட்டிக் கிடக்கும் வேலை…

image

இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் 5,800 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
5. ஆரம்ப தேதி: 21.10.2025
6. கடைசி தேதி: 20.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>> . ஷேர் பண்ணுங்க!

News October 8, 2025

கடலூர் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று அக்.8-ம் தேதி காலை 8.30 மணி நிலவரப்படி கொத்தவாச்சேரியில் 21 மி.மீ, சேத்தியாத்தோப்பு 10 மி.மீ, குறிஞ்சிப்பாடி 7 மி.மீ என கடலூர் மாவட்டத்தில் 38 மி.மீ மழை பதிவு மழை பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

News October 8, 2025

கடலூர்: இனி வங்கி செல்ல தேவையில்லை!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

News October 8, 2025

கடலூர்: துப்புரவு பணியாளர் தற்கொலை

image

ராமநத்தம் அடுத்த கீழ்செருவாயை சேர்ந்தவர் அண்ணாதுரை(57). தொழுதூரில் உள்ள அரசு சமூகநீதி பள்ளி மாணவர் விடுதியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்த அண்ணாதுரை, நீரிழிவு நோய் காரணமாக மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில், நேற்று இரவு விடுதியில் அண்ணாதுரை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News October 8, 2025

கடலூர்: நீரில் மூழ்கி பரிதாப பலி

image

குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர் முத்துராமன் (58). மீன்பிடி தொழிலாளியான இவர் ஆயத்துறை பெருமாள் ஏரிக்கரையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் தவறி விழுந்ததில் முத்துராமன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!