India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூர் இந்திய அஞ்சல் வங்கியில் (IPPB) Executive காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடம்: சிதம்பரம் & கடலூர்
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4. வயது வரம்பு: 20-35
5. சம்பளம்: ரூ.30,000
6. கடைசி தேதி: 29.10.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <

பரிசமங்கலம் கிராமத்தில் பிச்சம்மாள் என்பவரின் இறுதி ஊர்வலத்தில் வான வெடி வெடித்ததை தொடர்ந்து, நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தை மிகைப்படுத்தி இரு சமுதாயங்களுக்கு இடையே வன்முறையை தூண்டும் வகையில் சிலர் செய்திகளை பரப்பி வருகின்றனர். இதுபோல தவறான செய்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி எச்சரித்துள்ளார்.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், நாம் பலரும் பேக்கரி மற்றும் உணவகங்களில் இனிப்பு உணவு வகைகளை வாங்குவது வழக்கம். இந்நிலையில் அப்படி வாங்கப்படும் பொருட்கள் தரமில்லாமல் இருந்தால் என்ன செய்வதென்று பலருக்கும் தெரியாது. இதுபோன்ற சூழல் உங்களுக்கு ஏற்பட்டால் ‘94440 42322’ என்ற வாட்ஸ்அப் எண்ணின் வாயிலாக தமிழக உணவுப் பாதுகாப்பு துறையிடம் உங்களால் வீட்டிலிருந்தே புகார் அளிக்க முடியும். ஷேர் பண்ணுங்க!

கடலூரில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு உடந்தையாக இருந்த கடலூர் துறைமுகம் காவல் நிலைய போலீசார் காங்கேயன், கம்மாபுரம் காவல் நிலைய காவலர் மணிகண்டன், நடுவீரப்பட்டு காவல் நிலைய காவலர் தீனதயாளன், கடலூர் புதுநகர் காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் முத்துக்குமாரன் ஆகியோரை அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

கடலூர் மஞ்சக்குப்பம் அருகே சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஜெயராமன், சாரதி, மல்லிகா, பிரகாஷ், ஆகியோரை புதுநகர் காவல் போலீசார் கடந்த அக்.13 அன்று பிடித்து சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் சில போலீசார் உதவியுடன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், 5 செல்போன்கள், லாட்டரி சீட்டுகள் விற்ற பணம் ரூ.22,94,500 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கடலூர் மாவட்டம், குமராட்சி பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகம் அளிக்கும் வகையில் நின்ற சேட்டு (24) என்பவரை போலீசார் பிடித்து விசாரித்ததில், அவரிடம் 200 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (அக்.13) இரவு 10 மணி முதல் இன்று (அக்.14) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.

கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ்(42). இவர் செட்டிபாளையம் பெட்ரோல் பங்கில் ஊழியராக பணிப்புரிந்து வந்தார். இந்நிலையில், வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவர், குடும்பப் பிரச்சினையால் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து புதுப்பேட்டை போலீசார் இன்று வழக்கு பதிந்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

கடலூர் மக்களே, 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம்.<

கடலூர் மாவட்டத்தில் நாளை (அக்.14) உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடலூர் மாவட்டம், திட்டக்குடி நகராட்சி அலுவலக வளாகம், கம்மாபுரம் வட்டாரம், அரசகுழி அருமை மகால், குமராட்சி வட்டம், உசுப்பூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஸ்ரீனிவாசா திருமண மண்டபம் மற்றும் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.