Cuddalore

News March 8, 2025

கடலூர்: ரூ.1,30,400 சம்பளத்தில் வேலை

image

தமிழக மருத்துவ தேர்வாணையம் பார்மசிஸ்ட் பிரிவில் உள்ள 425 காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக தேர்வு நடைபெறும். ஊதியம் ரூ.35,000 – ரூ.1,30,400ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே டி.பார்ம், பி.பார்ம், பார்ம்.டி படிப்பை முடித்தோர் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க மார்ச்.10 கடைசி நாளாகும். பிறரும் பயனடைய SHARE பண்ணுங்க…

News March 8, 2025

இலவச பஸ் பயண அட்டை புதுப்பிக்க சிறப்பு முகாம்

image

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பஸ் பயண அட்டை ஒவ்வொரு நிதியாண்டும் புதுப்பித்து வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025-2026-ம் நிதியாண்டிற்கு இலவச பஸ் பயண அட்டையை புதுப்பிக்கும் முகாம் வருகிற 15-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடக்கிறது.

News March 7, 2025

கடலூரில் நாளை பொது வினியோகத்திட்ட குறைதீர் முகாம்

image

கடலூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை அன்று பொதுவினியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி மார்ச் மாதத்திற்கான பொதுவினியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தாலுகா அலுவலகங்களில் நடைபெற உள்ளது என கடலூர் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News March 6, 2025

வியாபாரம் செழிக்க ஒரு முறையாவது இந்த கோயிலுக்கு போயிட்டு வாங்க!

image

திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அருகே அய்யன்பேட்டையில் ஸ்ரீ படி அளந்தநாயகி சமேத செட்டியப்பர் கோயில் உள்ளது. சிவபெருமான் தராசு பிடித்தும், பார்வதி தேவி அளவை படியை ஏந்தியும் வியாபாரம் செய்யும் கோலத்தில் காட்சியளிக்கும் இந்த கோயிலுக்கு வியாபாரிகள் ஒரு முறை சென்று தரிசித்தால் தங்களது வியாபாரம் பெருகும், நஷ்டம் தீரும் கடன்கள் அடையும் என்பது ஐதீகம்.. வியாபார நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்

News March 5, 2025

கடலூர்: சமுதாய கூடத்தை திறந்து வைத்த அமைச்சர்

image

கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோண்டூர் ஊராட்சியில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடத்தினை உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் அவர்கள் இன்று (05.03.2025) திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் மற்றும் பலர் உள்ளனர்.

News March 5, 2025

விருத்தாசலம்: மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வு

image

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் விருத்தாச்சலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆவணங்களை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். இது மட்டும் இல்லாமல் கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் தொடர்ந்து அதிகாரிகளுக்கு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் ஆய்வு செய்து அறிவுரை வழங்கி வருகிறார்.

News March 5, 2025

நில அளவை; இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்!

image

கடலூரில் உள்ள நில உரிமைதாரர்கள் தங்களது நிலங்களை அளவை செய்ய அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பித்துக்கலாம். நில அளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கப்படும். நில அளவை செய்யப்பட்ட பின்னர், நில அளவர் கையொப்பமிட்ட அறிக்கை/வரைபடம் நில அளவரால் பதிவேற்றம் செய்யப்பட்டு <>லிங்க் <<>> இந்த இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் என கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News March 4, 2025

கடலூரில் 2000 ஆண்டு பழமையான கோயில்

image

கடலூரில் உள்ள பாடலீஸ்வரர் கோயில் பழமையான கோயில்களில் ஒன்றாகும். தோராயமாக 2000 ஆண்டுகளுக்கு முன்பு பல்லவர் மற்றும் இடைக்கால சோழர் காலத்தில் கட்டப்பட்டது. இங்குள்ள சிவனை ஒரு முறை வழிபடுவது காசியில் 16 முறையும், தி.மலையில் 8 முறையும், சிதம்பரத்தில் 3 முறையும் வழிபடுவதற்கு சமம் என நம்பப்படுகிறது. புலியூர் என்ற புலிக்கால் துறவி இப்பகுதியில் பாவமன்னிப்பு பெற்றதால் பாடலீஸ்வரர் கோயில் என அழைக்கப்படுகிறது.

News March 4, 2025

பிளஸ் 2 மொழிப்பாட தேர்வு; கடலூரில் 350 பேர் ஆப்சென்ட்

image

கடலுார் மாவட்டத்தில் பிளஸ் 2 முதல் நாள் மொழிப்பாட தேர்வில் 350 பேர் ஆப்சென்ட் ஆகினர். முதல் நாளான நேற்று தமிழ் மொழிப் பாடம் தேர்வு நடந்தது. நேற்றைய தேர்வில் தொடர் விடுப்பில் இருந்த 73 மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. தனித்தேர்வு எழுதும் 27 மாணவர்கள், பிரெஞ்ச் மொழி விருப்ப பாடமாக எடுத்த ஒரு மாணவர் உட்பட 350 பேர் ஆப்சென்ட் ஆகினர்.

News March 3, 2025

தபால் ஆபிசில் வேலை: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். கடலூரில் மட்டும் 51 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!