Cuddalore

News October 15, 2025

கடலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் நீர்நிலைகள் மற்றும் ஆற்றில் குளிக்க செல்வதை தவிர்க்க வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுதியுள்ளார். மேலும் பேரிடர் காலங்களில் அவரச உதவி தேவைப்படும் மக்கள், ஆட்சியர் அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ள அவசரகால கட்டுப்பாட்டு அறையை ‘1077’, ‘04142-20700’ ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News October 15, 2025

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (அக்.14) இரவு 10 மணி முதல் இன்று (அக்.15) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.

News October 14, 2025

கடலூர்: சரவெடிகளை வெடிக்க கூடாது-ஆட்சியர் அறிவுறுத்தல்

image

தீபாவளி பண்டிகை நாளில் அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்

News October 14, 2025

கடலூர்: மாசு இல்லாத தீபாவளி; ஆட்சியர் வேண்டுகோள்

image

கடலூர் மாவட்டத்தில் விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளி கொண்டாட வேண்டுமென ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதேவேளையில், பட்டாசுகளால் மாசு ஏற்படுவதால், மாசு இல்லாமல் தீபாவளி கொண்டாட வேண்டுகோள் விடுத்தார்.

News October 14, 2025

வடகிழக்கு பருவமழை தொடக்கம்: ஆட்சியர் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டம் வடகிழக்கு பருவமழை பரவலாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை-2025 காரணமாக, பரவலாக மழை பெய்து வருவதால், நீர் நிலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளின் அருகில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News October 14, 2025

கடலூர்: ரேஷன்கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

ரேஷன் கார்டுகளில் மாற்றம் செய்ய போறீங்களா? தமிழக அரசு ரேஷன் கார்டுகளுக்கு கொண்டு வந்துள்ள புதிய நடைமுறைகள் இதோ: நபர்கள் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம், கார்டு மீண்டும் பிரிண்ட் செய்தல் போன்றவைகளை வருடத்திற்கு 2 முறை மட்டுமே ஆன்லைனில் செய்ய முடியும். எனவே மாற்றம் செய்யும் போது ஆவணங்களை சரிபார்த்து சரியா பண்ணுங்க.. ரேஷன் அட்டைகளில் மாற்றம் செய்ய<> க்ளிக் செய்யவும்<<>>. இதனை SHARE பண்ணுங்க.!

News October 14, 2025

கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

கடலூர் மாவட்​டத்​தில், பெண் குழந்​தைகளின் சமூக முன்​னேற்​றத்​துக்​காக, சிறப்​பாக பங்​காற்​றிய 13-18 வயதுக்குட்​பட்ட பெண் குழந்​தைகளுக்கு ஆண்டுதோறும் மாநில அரசின் சார்​பில், விருது மற்​றும் ரூ.1 லட்​சத்​துக்​கான காசோலை வழங்​கப்​பட்டு வருகிறது. விருதுக்கு விண்​ணப்​பிக்க http://awards.tn.gov.in என்ற இணை​யதளத்​தில் வரும் நவ. 29-க்​குள் விண்​ணப்​பிக்க வேண்​டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News October 14, 2025

கடலூர்: தண்டவாளத்தில் தலை இல்லாமல் கிடந்த உடல்

image

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கும், மணிமுத்தாறு மேம்பாலத்திற்கும் இடையே நேற்று இரவு தண்டவளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் உடல் கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News October 14, 2025

கடலூர் போஸ்ட் ஆபீஸ் வங்கியில் வேலை!

image

கடலூர் இந்திய அஞ்சல் வங்கியில் (IPPB) Executive காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடம்: சிதம்பரம் & கடலூர்
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4. வயது வரம்பு: 20-35
5. சம்பளம்: ரூ.30,000
6. கடைசி தேதி: 29.10.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>இங்கே கிளிக் <<>>செய்யவும். ஷேர் பண்ணுங்க!

News October 14, 2025

கடலூர் எஸ்.பி கடும் எச்சரிக்கை

image

பரிசமங்கலம் கிராமத்தில் பிச்சம்மாள் என்பவரின் இறுதி ஊர்வலத்தில் வான வெடி வெடித்ததை தொடர்ந்து, நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தை மிகைப்படுத்தி இரு சமுதாயங்களுக்கு இடையே வன்முறையை தூண்டும் வகையில் சிலர் செய்திகளை பரப்பி வருகின்றனர். இதுபோல தவறான செய்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!