Cuddalore

News October 18, 2025

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (அக்.17) இரவு 10 மணி முதல் இன்று (அக்.18) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.

News October 17, 2025

கடலூர்: அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவிப்பு

image

கழுதூர் கிராமத்தில் விவசாய பணிகளை மேற்கொண்டிருந்த ராஜேஸ்வரி, சின்னப்பொன்னு, கனிதா, பாரிஜாதம் ஆகிய 4 பெண்கள், மின்னல் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளதும் இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், பாமக நிறுவனர் ராமதாஸ், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் அரசு அவர்களது குடும்பத்திற்கு நிவாரணம் வங்கவும் கோரிக்கை வைத்துள்ளனர்

News October 17, 2025

கடலூர்: ரூ.29,0000 மாத சம்பத்தில் அரசு வேலை

image

ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 600
3. சம்பளம்: ரூ.29,735
4. கல்வித் தகுதி: Diploma
5. வயது வரம்பு: 18-40(SC/ST-45, OBC-43)
6.கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE .
8.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 17, 2025

கடலூர்: 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் – சீமான்

image

வேப்பூர் அருகே கழுதூரில் மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், கள்ளச்சாராயம் குடித்தும், கூட்ட நெரிசலில் சிக்கியும் உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு ரூபாய் 10 லட்சம் இழப்பீடு வழங்கியது, மின்னல் தாக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

News October 17, 2025

கடலூர்: ரூ.50,000,000-க்கு களைகட்டிய விற்பனை

image

கடலூர் மாவட்டம், வேப்பூரில் ஆட்டுச்சந்தை வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சந்தை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் தீபாவளி பண்டிகை வரும் 20-ம் தேதி கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, நேற்று இரவில் இருந்தே வேப்பூர் சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியது. ஒரு ஆடு ரூ.7,000 முதல் ரூ.35,000 ஆயிரம் வரை விற்பனையானது. இந்நிலையில் நேற்று ஒருநாளில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

News October 17, 2025

கடலூர்: மானியத்துடன் மின்மோட்டார் வேண்டுமா?

image

விவசாயிகளுக்கு 50% மானியத்துடன் கூடிய மின்மோட்டார் மற்றும் பம்புசெட்டுகள் பெறுவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிதாக வாங்கப்படும் மின் மோட்டார்களின் மொத்த விலையில் ரூ.15,000/-அல்லது 50% மானியமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க<> இங்கே கிளிக்<<>> செய்து உழவன் செயலி வாயலாக Apply செய்யவும். மேலும் விபரங்களுக்கு வட்டார வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தை நேரில் அணுகவும். தகவலை ஷேர் பண்ணுங்க!

News October 17, 2025

கடலூர்: 10 லட்சம் நிவாரணம் வழங்க கோரிக்கை

image

திட்டக்குடி வட்டம், கழுதூர் கிராமத்தில் வயலில் வேலை பார்த்து கொண்டிருந்த கனிதா, பாரிஜாதம், சின்ன பொண்ணு, ராஜேஸ்வரி, ஆகிய 4 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் இதில் தவமணி என்ற பெண்ணுக்கு கண்பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக முதலமைச்சர் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன் தெரிவித்துள்ளார்.

News October 17, 2025

கடலூர்: புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் வெளியீடு

image

கடலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, பலகாரம் மற்றும் உணவுப் பொருட்கள் தொடர்பாக பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ‘94440 42322’ என்ற வாட்ஸ்அப் எண்ணை நேற்று வெளியிட்டார். இந்த எண்ணில் தரம் மற்றும் சுகாதாரம் இல்லாத உணவுப் பொருட்கள் குறித்து புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 17, 2025

கடலூர்: பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

image

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், நாம் பலரும் சொந்த ஊர்களுக்கு அரசு பேருந்துகளில் செல்ல திட்டமிட்டிருப்போம். அவ்வாறு நீங்கள் பயணிக்கும் போது பேருந்துலேயே உங்கள் Luggage-ஐ மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதற வேண்டாம். ‘044-49076326’ என்ற எண்னை தொடர்பு கொண்டு, உங்கள் டிக்கெட் எண் மற்றும் பயண விவரங்களை கூறினால் போதும் உங்கள் பொருட்கள் அனைத்தும் பத்திரமாக வந்து சேரும். ஷேர் பண்ணுங்க !

News October 17, 2025

கடலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு வெளியீடு

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (அக்டோபர் 17) காலை 8.30 மணி நிலவரப்படி சேத்தியாத்தோப்பு 58.8 மில்லி மீட்டர், சிதம்பரம் 42 மில்லி மீட்டர், புவனகிரி 41 மில்லி மீட்டர், அண்ணாமலை நகர் 21 மில்லி மீட்டர், வேப்பூர் 25 மில்லி மீட்டர், கடலூர் 22.2 மில்லி மீட்டர், வானமாதேவி 13.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

error: Content is protected !!