Cuddalore

News February 27, 2025

கடலூர் மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினம்தோறும் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (27/02/2025) வியாழக்கிழமை இரவு மாவட்டத்தில் அனைத்து உதவி காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து காவல் நிலைய அதிகாரிகளும் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 26, 2025

கடலூர்: குளோபல் சிறப்பு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

கடலூரில் இயங்கிவரும் மாற்றுத்திறனாளிகளுக்கான குளோபல் அறக்கட்டளை சிறந்த பெண் ஆளுமைகளுக்கான குளோபல் சிறப்பு விருதுகள் 2025 வழங்கப்பட உள்ளது. விண்ணப்பங்களை <>லிங்க்<<>> அல்லது மின்னஞ்சல் globalawards.iwd@gmail.com, வாட்ஸ்ஆப் 9786334741 மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 26, 2025

கடலூரில் 28ஆம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

image

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 28-ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் கோரிக்கை குறித்து பேச விரும்பும் விவசாயிகள் அன்று காலை 8 மணி முதல் 10 மணிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவசாயிகள் கூட்டத்தில் கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News February 26, 2025

கடலூரில் 28ஆம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

image

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 28-ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் கோரிக்கை குறித்து பேச விரும்பும் விவசாயிகள் அன்று காலை 8 மணி முதல் 10 மணிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவசாயிகள் கூட்டத்தில் கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News February 25, 2025

விருதுக்கு விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில்
2024 -ஆம் ஆண்டிற்கான பசுமை சாம்பியன் விருது, தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில், சுற்றுப்புறச் சூழல் மீட்புக்கு தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்களுக்கு அதவாது தனிநபர்களுக்கு வழங்கபடவுள்ளது.
தகுதியானவர்கள் விண்ணப்பத்தினை www.tnpcb.gov.in இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் அறிவித்துள்ளார.

News February 25, 2025

சிதம்பரம்: டீ காபியின் விலை கிடு கிடு உயர்வு

image

சிதம்பரத்தில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் டீக்கடை மற்றும் காப்பி கடைகளில் டீ, காபியின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. டி பத்து ரூபாய் காசி 15 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த நிலையில் தற்சமயம் டீ ₹12 முதல் ₹15 ரூபாய் வரையிலும் காபி ₹20 வரையிலும் விளைவு செய்யப்பட்டுள்ளது.
டீ, மற்றும் காபித்தூளின் விலை மிக கடுமையாக உயர்ந்து விட்டதால் இந்த விளைவுகள் என கடைக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

News February 24, 2025

காட்டுமன்னார்கோயிலில் 26ஆம் தேதி ஆட்சியர் களஆய்வு

image

காட்டுமன்னார்கோயில் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 26-ம் தேதி ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், அரசின் அனைத்து நலத்திட்டங்கள், சேவைகள், மக்களின் தேவைகள் குறித்து களஆய்வு மேற்கொள்ள உள்ளார். மேலும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை காட்டுமன்னார்கோயில் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறுகிறார்.

News February 24, 2025

தபால் ஆபிசில் வேலை: உடனே அப்ளை பண்ணுங்க

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். கடலூர் மாவட்டத்தில் மட்டும் 51 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News February 24, 2025

கடலூரில் 49 முதல்வர் மருந்தகம் திறப்பு

image

1,000 இடங்களில் தமிழகம் முழுவதும் இன்று முதல்வர் மருந்தகங்கள் இன்று திறக்கப்படுகிறது. கோயமுத்தூர் மாவட்டத்திற்கு 42 மருந்தகமும், மதுரை மாவட்டத்திற்கு 52 மருந்தகமும், கடலூர் மாவட்டத்திற்கு 49 மருந்தகமும் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 40 மருந்தகம் திறக்கப்பட உள்ளன. பிரதமரின் மக்கள் மருந்தகம் உள்ளிட்ட எந்த மருந்தகளிலும் இல்லாத வகையில் சந்தை மதிப்பை விட 75% வரை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும்.

News February 23, 2025

சிதம்பரம் அருகே எந்திரம் கவிழ்ந்து மாணவன் பலி

image

சிதம்பரம் அருகே புதுச்சித்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ஹரிஷ் நேற்று மாலை வயலில் உழவு எந்திரம் தில் அமர வைத்து எந்திரத்தில் சுற்றி வந்தனர் எதிர்பாராத விதமாக எந்திரம் கவிழ்ந்து மாணவர்கள் இருவர் சக்கரத்தில் சிக்கிக்கொண்டார் அதில் ஒருவர் படுகாயம் அவர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பிவிட்டனர் சிகிச்சை பலன்னிறி உயிரிழந்தார் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

error: Content is protected !!