Cuddalore

News August 21, 2024

கோவில் திருப்பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு

image

காட்டுமன்னார்குடி அருகே பேரூர் கிராமத்தில் அமைந்துள்ள அனந்தீஸ்வரர் திருக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான பணிகள் கோவிலில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று வேளாண்மை மற்றும் முழுவதும் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கோவில் திருப்பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News August 20, 2024

கடலூர் மாவட்டத்தில் வெப்பநிலை நிலவரம்

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெப்பநிலை குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் இன்று (20/08/2024) கடலூர் 34 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 32 டிகிரி செல்சியஸ், புவனகிரி 32 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 32 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 35 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 35 டிகிரி செல்சியஸ், பண்ருட்டி 35 டிகிரி செல்சியஸ், குறிஞ்சிப்பாடி 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

News August 20, 2024

கடலூர் மாவட்டத்தில் ரோந்து பணி அதிகாரிகள் விபரம்

image

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (20/08/2024) கடலூர் காவல் ஆய்வாளர் சந்திரன், சிதம்பரம் காவல் ஆய்வாளர் சுஜாத்தா, விருத்தாசலம் உதவி ஆய்வாளர் தனசேகரன், நெய்வேலி காவல் ஆய்வாளர் செந்தில்குமார், சேத்தியாத்தோப்பு உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் ரோந்துப்பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 20, 2024

கடலூர் மாவட்டத்தில் இன்றைய மழை நிலவரம்

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட்.20) காலை நிலவரப்படி கீழ்செருவாய் 4 செ.மீ., லக்கூர் 3 செ.மீ., வேப்பூர் 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இது மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து உள்ளதால் மழைநீர் தேங்கி நிற்கிறது.

News August 20, 2024

சிதம்பரம் கோயில் கனகசபை தரிசனம்; உயர்நீதிமன்றம் உத்தரவு

image

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சனத்தின் போது பக்தர்களை கனகசபை மீது நின்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பான இன்றைய விசாரணையில், ஆறு கால பூஜையை தவிர்த்து மற்ற நேரங்களில் பக்தர்களை கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வதை தடுக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

News August 20, 2024

கடலூர் அரசு பள்ளியில் அமைச்சர் ஆய்வு

image

கடலூர், மஞ்சக்குப்பம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று ஆய்வு மேற்கொண்டார். உடன் திமுக கடலூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் கதிரவன், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, திமுக கடலூர் மாநகர செயலாளர் கே.எஸ். ராஜா மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகள் உள்ளனர்.

News August 20, 2024

தபால் துறையில் உத்தேச பட்டியல் வெளியீடு

image

நாடு முழுவதும் தபால் துறையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் உத்தேசப் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, கடலூர் மாவட்டத்தில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர், கிராமின் டாக் சேவக் ஆகிய 233 பணியிடங்களை நிரப்ப அண்மையில் அறிவிப்பு வெளியானது. முழு விவரங்களை https://indiapostgdsonline.gov.in/# என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

News August 20, 2024

கடலூரில் வேலைவாய்ப்புடன் உயர்கல்வி

image

கடலூரில் நான் முதல்வன் திட்டத்தில் வேலைவாய்ப்புடான் உயர் கல்வி தேர்வு முகாம் இன்று நடைபெறுகின்றது. இதில் 12ஆம் வகுப்பில் 75% மேல் வாங்கியுள்ளவர்களுக்கும் மற்றும் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும் இந்த திட்டத்தில் வேலைவாய்ப்புடான் உயர் கல்வி வழங்கப்படவுள்ளது. இத்தேர்வு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் https://registrations.hcltechbee.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

News August 19, 2024

கடலூர் மாவட்டத்தின் இன்றைய வெப்பநிலை நிலவரம்

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெப்பநிலை குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் இன்று (19/08/2024) கடலூர் 32 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 34 டிகிரி செல்சியஸ், புவனகிரி 34 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 34 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 34 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 35 டிகிரி செல்சியஸ், பண்ருட்டி 34 டிகிரி செல்சியஸ், குறிஞ்சிப்பாடி 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

News August 19, 2024

835 மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர்

image

கடலூரில் இன்று பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடந்தது. இதில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 835 மனுக்களை பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்தனர். அந்த மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வுகாண வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!