Cuddalore

News August 22, 2024

கடலூரில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

image

கடலூர், சிதம்பரம் கிள்ளை ரயில்வே மார்க்கத்தில் இன்று அதிகாலை கோவிலாம்பூண்டியில் ரயிலில் அடிபட்ட ஒரு அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக சிதம்பரம் ரயில்வே காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். உடற்கூறு ஆய்வுக்காக சிதம்பரம் அரசு காமராஜ் மருத்துவமனையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

News August 22, 2024

கடலூரில் 40 வீடுகளுக்கு நோட்டீஸ்

image

கடலூர், சிதம்பரம் ரயில் நிலையம் அருகில் அமைக்கப்பட்ட வடிவாக்கால் பகுதியில் தனிநபர்கள் ஆக்கிரமித்து வீடு கட்டி வசித்து வருவதாக அப்பகுதி மக்களிடையே புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் சிதம்பரம் நீர்வள கொள்ளிட வடிவாய்க்கால் செயற்பொறியாளர் காந்தரூபன் தலைமையில் விசாரித்து நேற்று மாலை தனி நபர்கள் கட்டியுள்ள 40 க்கும் மேற்பட்ட வீடுகளில் நோட்டீஸ் ஒட்டி நடவடிக்கை எடுத்தனர்.

News August 22, 2024

அரசு பள்ளியில் கல்வித்துறை அமைச்சர் ஆய்வு

image

திட்டக்குடி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் விதம் குறித்தும் தலைமை ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பலர் உடன் இருந்தனர்.

News August 22, 2024

அரசு பள்ளியில் கல்வித்துறை அமைச்சர் ஆய்வு

image

திட்டக்குடி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் விதம் குறித்தும் தலைமை ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பலர் உடன் இருந்தனர்.

News August 22, 2024

அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம்

image

கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் இன்று விருத்தாசலம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் அனைத்துத் துறை அலுவலர்களும் மேற்கொண்ட கள ஆய்வுகள் குறித்து விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் இராஜசேகரன், கூடுதல் ஆட்சியர் / திட்ட இயக்குநர் சரண்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

News August 21, 2024

கடலூர் மாவட்ட ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (21/08/2024) கடலூர் உதவி ஆய்வாளர் கவியரசன், சிதம்பரம் காவல் ஆய்வாளர் கலையரசன், விருத்தாசலம் உதவி ஆய்வாளர் சிவராமன், நெய்வேலி காவல் ஆய்வாளர் வள்ளி, சேத்தியாத்தோப்பு உதவி ஆய்வாளர் வாசுதேவன் ஆகியோர் ரோந்துப்பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 21, 2024

மாணவிகளுடன் அமர்ந்து பாடம் கவனித்த கலெக்டர்

image

விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அரசு பெண்கள் பள்ளியில் உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் மாணவிகளுடன் பெஞ்சில் அமர்ந்து மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று ஆசிரியர் நடத்திய பாடத்தை கவனித்தார். பின்னர் அவர், மாணவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார். அப்போது அரசு அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

News August 21, 2024

சிதம்பரத்தில் மீனவர்களுக்கான கூடுதல் வசதி

image

கிள்ளை பேரூராட்சிக்குட்பட்ட முடசலோடை மீனவர் கிராமத்தில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் மீன் இறக்குவதற்கு கூடுதல் வசதிகள் அமைக்கும் பணியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சியை மூலமாக இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது கிள்ளை பேரூராட்சி தலைவர் மல்லிகா மற்றும் துணைத் தலைவர் வழக்கறிஞர் ரவீந்திரன் கலந்து கொண்டனர்.

News August 21, 2024

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்

image

தமிழகத்தில் 1.14 லட்சம் மாணவர்களுக்கு மனநலம் சார்ந்த பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என, அமைச்சர் மகேஷ் கூறினார். கடலுாருக்கு நேற்று வருகை தந்த அமைச்சர் மகேஷ், பள்ளிகளில் ஆய்வு செய்தார். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் ஆசிரியர்கள் மூலம் 1.14 லட்சம் மாணவர்களுக்கு மனநலம் சார்ந்த பயிற்சி வழங்கப்பட்டும், 800 டாக்டர்கள் மூலம் மனநலம் ஆலோசனை வழங்கப்பட்டும் வருகிறது என்றார்.

News August 21, 2024

கடலூர் மாவட்டத்தில் ரோந்து பணி விவரம்

image

கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் இன்று இரவு ரோந்து அதிகாரிகள் அலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. புகார் எண்:கடலூர் : 94981 52946 சிதம்பரம்: 94981 14281 விருத்தாசலம்: 96007 83600, நெய்வேலி: 94981 06200, சேத்தியாத்தோப்பு: 97879 43502, பண்ருட்டி: 94981 34556

error: Content is protected !!