India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர், மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டரங்கில் நவீன வசதிகளுடன் இயங்கி வரும் நீச்சல் குளத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் கோடைக்கால முதல் கட்ட நீச்சல் பயிற்சி வகுப்புகள் கடந்த 2-ம் தேதி தொடங்கிய நிலையில் நாளையுடன் முடிகிறது. இந்நிலையில் 2-ம் கட்ட நீச்சல் வகுப்பு வரும் 16ம் தேதி முதல் 28ம் தேதிவரை நடைபெற உள்ளதாக மாவட்ட விளையாட்டு அலுவலர் தெரிவித்துள்ளாா்.
கடலூர் மாவட்டத்தில் இயங்கும் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கு வாக்களிக்க ஏதுவாக ஏப்ரல் 19ஆம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். வெளிமாநில தொழிலாளர்களுக்கு வாக்குரிமை உள்ள தொகுதியில் ஓட்டுப்பதிவு நடக்கும் நாளன்று வாக்களிக்க வசதியாக சம்பளத்துடன் கூடிய விடுமுறையும் அளிக்க வேண்டும் என நேற்று தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
கடலூர் புனித வளனார் பள்ளியில் கடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 227 வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரியும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான மூன்றாம் கட்ட பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இந்த பயிற்சி கூட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தை கையாள்வது மற்றும் வாக்குச்சீட்டு முறைகளை கையாள்வது போன்ற பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது இதில் 2000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்டத்தில் தீயணைப்புத்துறையினர், வீடு ஒன்றில் பாம்பு நுழைந்திருப்பதாக கிடைத்த தகவலில் சென்று பாம்பு பிடித்துள்ளனர். அதனை பாம்பு பிடி தன்னார்வலர் உமர் அலி (36) வனப்பகுதிக்குள் விடுவதற்காக டப்பாவில் அடைக்க முற்பட்டார். அப்போது பிடிபட்ட பாம்பு உமர் அலியை கடித்துள்ளது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் தொல். திருமாவளவன், அம்பேத்கர் இயற்றி தந்த அரசியலமைப்புச் சட்டத்தை ஒழிப்பது தான் மோடி அரசும் இலக்காக உள்ளது. இதனை வெளிப்படையாகவே பாஜகவை சேர்ந்த தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் பல இடங்களில் தெரிவித்து வருகின்றனர். இதை முறியடித்து சமூக நீதி காக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் அனைத்தும் வரும் 17 ஆம் தேதி முதல் வாக்குப்பதிவு நாள் 19 ஆம் தேதி மற்றும் வாக்கு எண்ணும் நாளான ஜூன் 4 ஆம் தேதி ஆகிய 4 நாட்கள் மூடப்படுகிறது. இதனை மீறி மதுபானம் விற்கும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென கூறப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (12/04/2024) இரவு கடலூர் உதவி ஆய்வாளர் கதிரவன், சிதம்பரம் உதவி ஆய்வாளர் பரணிதரன், விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் சிவராமன், நெய்வேலி காவல் ஆய்வாளர் சந்திரன் மற்றும் பண்ருட்டியில் காவல் ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜாராம் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது. சாதி வேறுபாடுகள் கலைந்து சட்டத்தை வகுத்து தந்த அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில் சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க அனைவரும் பாடுபடுவோம் என உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் அசோக்குமார், பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பணியில் ஈடுபட உள்ள காவல்துறையினருக்கு இன்று தபால் வாக்கு பதிவு நடத்தப்பட்டது.இதில் கடலூர் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தபால் வாக்கினை செலுத்தினார்.அப்பொழுது, கலெக்டர் அருண் தம்புராஜ் வருவாய் கோட்டாட்சியர் அபிநயா ஆகியோர் உடன் இருந்தனர்.அது மட்டும் இன்றி கடலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 810 காவல்துறையினர் தபால் வாக்கு செலுத்த உள்ளனர்.
விருத்தாசலம் அடுத்த கொளஞ்சியப்பர் கோவில் அருகே உள்ள நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் கோயம்புத்தூரில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது கொளஞ்சியப்பர் கோவில் அருகே சாலையின் நடுவே உள்ள தடுப்பு கட்டையில் மோதி பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் சிறு காயம் கூட ஏற்படவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.