India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மாலை 4 மணி வரை கடலூர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்கும் எண்ணும் மையமான தேவனாம்பட்டினம் அரசு கல்லூரியில் நேற்று கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், அடுத்த மாதம் (ஜூன்) 4-ம் தேதி வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட 336 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு விரையில் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்றார்.
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் கடலூர் மாவட்டம் 20 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 86.83% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 81.86 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 90.98 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியாகியுள்ளன.அதன்படி கடலூர் மாவட்டத்தில் மாணவர்கள் 87.99% பேரும், மாணவியர் 93.97% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 91.01 % தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
கடலூர் மாவட்ட தடகள கழக மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்ட தடகள வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு கோடைகால சிறப்பு பயிற்சி முகாம், கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் நாளை 15 ஆம் தேதி முதல் நடக்கிறது. சிறந்த பயிற்றுநர்கள் மற்றும் மூத்த தடகள வீரர்கள் மூலம் விளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன பயிற்சிகள் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதன்படி இன்று காலை 10 மணி வரை கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டக்குடியை சேர்ந்தவர் ஓம் பிரகாஷ் (42). இவர் நேற்று தனது குடும்பத்துடன் ஏற்காடு சுற்றுலா சென்று விட்டு நள்ளிரவு வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததுடன், பீரோவில் வைத்திருந்த ரூ.12 லட்சம் மதிப்பிலான 21 பவுன் நகைகளை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திட்டக்குடியை சேர்ந்தவர் ஓம் பிரகாஷ் (42). இவர் நேற்று தனது குடும்பத்துடன் ஏற்காடு சுற்றுலா சென்று விட்டு நள்ளிரவு வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததுடன், பீரோவில் வைத்திருந்த ரூ.12 லட்சம் மதிப்பிலான 21 பவுன் நகைகளை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் இன்று (மே.13) மாலை 4 மணி வரை மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர் மாவட்டத்தில், லேசான இடி மற்றும் மின்னலுடன், லேசானது முதல் மிதமானது வரை மழைப் பொழிவு பதிவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
கடலூரில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த அரசுப் பேருந்து, திண்டிவனம் அருகே கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே உள்ள மீடியனில் மோதி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்தில் இருந்த 60 பயணிகள் காயங்கள் இன்றி உயிர் தப்பினர். இதையடுத்து காயமடைந்தவா்களை சக பயணிகள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.