Cuddalore

News April 25, 2024

கடலூர் வழியாக நாகர்கோவிலுக்கு சொகுசு பேருந்து

image

புதுச்சேரியில் இருந்து தென் தமிழகத்திற்கு மற்றும் குமரி போன்ற சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் சென்று வர வசதியாக, 45 இருக்கைகளுடன் கூடிய புதுச்சேரி – நாகர்கோவில் புதிய சொகுசு (Ultra Deluxe) பேருந்து (PRTC) இன்று (25/04/2024) முதல் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி டவுன்ஷிப், விருத்தாச்சலம் வழியாக நாகர்கோவில் சென்றடையும். ( இந்த பேருந்து கடலூரில் இருந்து மாலை 7 மணிக்கு புறப்படும் )

News April 25, 2024

கடலூர்: அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல்

image

அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி அறிவுறுத்தலின்படி, கடும் வெயிலில் இருந்து மக்களை காக்கும் பொருட்டு, கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் இளநீர், தர்பூசணி போன்ற பழ வகைகளுடன் மக்களின் தாகம் தீர்க்கும் வகையில் நீர் மோர் பந்தல் இன்று அமைக்கப்பட்டது. இதில் அதிமுக கடலூர் மாவட்ட செயலாளர் எம்.சி. சம்பத், அதிமுக நிர்வாகிகள்‌ மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

News April 25, 2024

கடலூர் வழியாக நாகர்கோவிலுக்கு சொகுசு பேருந்து

image

புதுச்சேரியில் இருந்து தென் தமிழகத்திற்கு மற்றும் குமரி போன்ற சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் சென்று வர வசதியாக, 45 இருக்கைகளுடன் கூடிய புதுச்சேரி – நாகர்கோவில் புதிய சொகுசு (Ultra Deluxe) பேருந்து (PRTC) இன்று (25/04/2024) முதல் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி டவுன்ஷிப், விருத்தாச்சலம் வழியாக நாகர்கோவில் சென்றடையும். ( இந்த பேருந்து கடலூரில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் )

News April 25, 2024

கடலூர்: தாக்குதல்.. பஸ் ஊழியர்கள் போராட்டம்

image

விருத்தாசலத்தில் இருந்து இன்று மாலை 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. சாலையின் நடுவே குடிபோதையில் தனுஷ் என்பவர் நின்று கொண்டிருந்தார். இதை பார்த்த நடத்துநர் அருண்ராஜ் தனுசை தட்டிக்கேட்டதில் ஆத்திரமடைந்த தனுஷ் அருண்ராஜை தாக்கபட்டதை அறிந்த அருண்ராஜ் சக பேருந்துகளின் டிரைவர்கள் நடத்துநர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

News April 25, 2024

கடலூர் மாநகராட்சி சார்பில் தண்ணீர் பந்தல்

image

கடலூரில் கடந்த ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடலூர் மஞ்சக்குப்பம் தபால் நிலைய பேருந்து நிறுத்தம், செம்மண்டலம் பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பல பகுதிகளில் கடலூர் மாநகராட்சி சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கடும் வெயிலில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் பானையில் வைத்திருக்கும் தண்ணீரை பருகி தாகத்தை தீர்த்து செல்கின்றனர்.

News April 25, 2024

கடலூரில் பக்தர்களுக்கு அன்னதானம்

image

திருப்பாதிரிப்புலியூர் பாரதிதாசன் நகரில் உள்ள புட்லாயி அம்மன் கோவிலில் நேற்று இரவு திருவிளக்கு பூஜை, ஊஞ்சல் உற்சவம் நடந்ததும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு அதிமுக மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி துணை செயலாளர் கடலூர் சி.கே.எஸ். கார்த்திகேயன் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News April 25, 2024

சிதம்பரம் அருகே பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

image

சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாத்தோப்பு பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று(24.4.2024) இரவு லஞ்ச ஒழிப்புத்துறை சுமார் 3 மணி நேரமாக ஆய்வு செய்தனர். அதில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி தேவநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் பணத்தை கைப்பற்றினர் தணிக்கை குழுவிற்கு லஞ்சம் கொடுப்பதற்காக வைத்திருந்த பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி கைப்பற்றியதால் அப்பகுதியில் பரபரப்பு

News April 25, 2024

கடலூர் அருகே பயங்கர விபத்து; சம்பவ இடத்தில் மரணம் 

image

விருத்தாசலம் அடுத்த முகுந்தநல்லூரை சேர்ந்தவர் வைத்தியநாதன் மகன் விஜயகுமார் (19).டூவீலர் மெக்கானிக் நேற்று முன்தினம் இரவு தனது பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது முன்னால் சென்ற மகேந்திரா பிக்அப் வேன் தாறுமாறாக சென்று திடீரென்று பிரேக் போட்டதால் விஜயகுமார் ஓட்டி சென்ற பைக் மீது வேன் மோதி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.விருதை இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

News April 25, 2024

கடலூர் அருகே பயங்கர விபத்து; சம்பவ இடத்தில் மரணம் 

image

விருத்தாசலம் அடுத்த முகுந்தநல்லூரை சேர்ந்தவர் வைத்தியநாதன் மகன் விஜயகுமார் (19).டூவீலர் மெக்கானிக் நேற்று முன்தினம் இரவு தனது பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது முன்னால் சென்ற மகேந்திரா பிக்அப் வேன் தாறுமாறாக சென்று திடீரென்று பிரேக் போட்டதால் விஜயகுமார் ஓட்டி சென்ற பைக் மீது வேன் மோதி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.விருதை இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

News April 25, 2024

கடலூர் அருகே தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது 

image

விருத்தாசலம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் மன்சூர்அலி (38). இவர் மீது விருத்தாசலம் மற்றும் கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையங்களில் 3 வழக்குகள் உள்ளன. இதனால் அவரது தொடர் குற்றச்செயலை கட்டுப்படுத்தும் வகையில் மன்சூர்அலியை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அருண்தம்புராஜ் இன்று உத்தரவிட்டார். அதன் பேரில் மன்சூர் அலி இன்று தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

error: Content is protected !!