Cuddalore

News September 12, 2024

சிதம்பரம் அருகே லாரி மோதி 5 பேர் பலி

image

சிதம்பரம் அருகே பி.முட்லூர் ஆனையாங்குப்பம் விழுப்புரம் – நாகை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் விபத்து. லாரியும், காரும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் உடல்களை மீட்டு, இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 12, 2024

கடலூரில் லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது

image

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் எஸ்.ஐ. கதிரவன் மற்றும் போலீசார் இன்று கடலூர் பஸ் நிலையம் அருகில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கே லாட்டரி சீட்டுகளை பதுக்கி வைத்து விற்றுக் கொண்டிருந்த வசந்தராயன் பாளையத்தை சேர்ந்த வைத்தியநாதன் மகன் மணிகண்டன் (39) என்பவரை போலீசார் கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

News September 11, 2024

கடலூர் மாவட்டத்தில் ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (11/09/2024) கடலூர் உதவி ஆய்வாளர் கவியரசன், சிதம்பரம் காவல் ஆய்வாளர் சுஜாதா, விருத்தாசலம் உதவி ஆய்வாளர் மாணிக்கராஜா, நெய்வேலி காவல் ஆய்வாளர் ராஜதாமரை பாண்டியன், சேத்தியாத்தோப்பு உதவி ஆய்வாளர் கோபிகுமார் ஆகியோர் ரோந்துப்பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 11, 2024

அங்கன்வாடி மையத்தில் ஆட்சியர் ஆய்வு

image

கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டத்திற்குட்பட்ட டி.இளமங்கலம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று (11.09.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் குறித்து கேட்டறிந்தார். அப்போது அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

News September 11, 2024

கடலூரில் நாளை ‘உயர்வுக்கு படி’ நிகழ்ச்சி

image

கடந்த இரண்டு ஆண்டுகளில் பள்ளிப் படிப்பை முடித்து உயர்கல்வியில் சேர இயலாத மாணவர்கள், கடலூர் புதுப்பாளையம் புனித அன்னாள் பள்ளியில் நாளை நடைபெற உள்ள ‘உயர்வுக்கு படி’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கடலூர் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிகழ்வில் மாணவர்களுக்கு உயர் கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமில்லாமல், பிற வசதிகளும் மேற்கொண்டு தரப்படும்.

News September 11, 2024

விளை நிலங்களில் ஆட்சியர் ஆய்வு

image

கடலூர் அருகே வரக்கால்பட்டு பகுதி விளைநிலத்தில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் பயிர்களுக்கு தேவையான உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கிறதா? என விவசாயிகளிடம் கேட்டறிந்தார். அப்போது மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

News September 11, 2024

அமைச்சர் வேண்டுகோள் விடுப்பு

image

பேரறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வரும் செப்.15 முதல் கடலூர் கிழக்கு மாவட்டத்தில் இல்லம் தோறும் திமுக உறுப்பினர் சேர்க்கை துவங்குதல் மற்றும் செப்.17 பேரறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியார் சிலை மற்றும் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News September 11, 2024

நுகர்பொருள் வாணிப கழகத்தில் ஆட்சியர் ஆய்வு

image

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கடலூர் மண்டல அலுவலகத்திலுள்ள வட்ட செயல்முறை கிடங்கிலிருந்து நியாயவிலைக் கடைகளுக்கு நகர்வு செய்யப்படும் விதம் மற்றும் உணவுப் பொருட்களின் தரம் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அவர்கள் நேற்று (10.09.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

News September 11, 2024

சிறப்பு ஆய்வுக்குழு அமைப்பு: ஆட்சியர் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் சட்ட விதிகளுக்குட்பட்டு தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆய்வுக்குழு அமைத்து பட்டாசு தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும். இதில் விதி மீறல்கள் காணப்பட்டால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News September 11, 2024

கடலூர் மாணவிகள் நான்கு பேர் சிதம்பரத்தில் மீட்பு

image

கடலூரில் ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் நான்கு பேர் திடீரென மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், சிதம்பரம் பகுதியில் நள்ளிரவு 11 மணி அளவில் சுற்றித்திரிந்த மாணவிகள் நான்கு பேரையும் சிதம்பரம் போலீசார் விசாரணை செய்தனர். அவர்கள் கடலூர் பள்ளியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. பின்னர் அவர்களை மீட்டு கடலூர் அழைத்து வந்து ஒப்படைத்தனர்.

error: Content is protected !!