India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (15/05/24) இரவு கடலூர் உதவி ஆய்வாளர் கதிரவன், சிதம்பரம் உதவி ஆய்வாளர் நந்தகுமார், விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் சந்திரசேகரன், நெய்வேலி காவல் ஆய்வாளர் சுமதி மற்றும் பண்ருட்டியில் காவல் ஆய்வாளர் பலராமன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரங்கிப்பேட்டை பகுதியில் உள்ள மஞ்சக்குழி ஊராட்சி மன்ற தலைவர் சிவகுருநாதன் என்பவர் தனது ஊராட்சியில் 15 லட்சம் மதிப்பில் பல்வேறு அரசு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரர் சந்தோஷ் குமார் என்பவரிடம் லஞ்சமாக 15,000 பெற்றுள்ளார்.அப்பொழுது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்து கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டு, விசாரணை மேற்கொண்டனர்
கடலூர் அருகே பண்ருட்டி எம்.புதுப்பாளையம் பகுதியில் இன்று காலை ஒருவரை நான்கு பேர் கொண்ட கும்பல் கொடூரமாக தாக்கியுள்ளார். இருப்பினும் அவர் உயிர் தப்பித்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தகவலின் பேரில் புதுநகர் காவல் நிலைய அதிகாரிகள் அவரிடம் விசாரணை செய்ததில் அவர் பெயர் ஜெயபிரகாஷ் (28). சொந்த ஊர் ஆரோவில் இவர் தனது மாமியார் வீடு பண்ருட்டியில் தங்கியுள்ளதாக கூறினார்.
கடலூர், திருப்பாதிரிப்புலியூர் உழவர் சந்தையில் நேற்று உணவு பாதுகாப்பு அதிகாரி சந்திரசேகர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், உணவு பாதுகாப்பு பற்றியும், பழங்கள் பழுக்க வைக்க பயன்படுத்தப்படும் ரசாயன திரவம் மற்றும் கார்பைடு கல் போன்றவற்றை தவிர்க்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் விளக்கி கூறி விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது வேளாண்மை அலுவலர் மகாதேவன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
கடலூர் மாவட்டத்தில் 117 அரசு பள்ளிகளில் இருந்து 6,153 மாணவர்களும் 7,407 மாணவிகளும் என மொத்தம் 13,560 மாணவ – மாணவிகள் பதினொன்றாம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில் 5,022 மாணவர் களும், 6,733 மாணவிகளும் என மொத்தம் 11,755 மாணவ – மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 81.62, மாணவிகளின் தேர்ச்சி சத வீதம் 90.90. இதன் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 86.69 ஆகும்.
பண்ருட்டியில் விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி இளைஞர் உயிரிழந்தார்.கலையரசன் உடலை மீட்ட போலீசார், கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நிலத்தின் உரிமையாளர்களான ஆறுமுகம் (37) மற்றும் குப்பனை (45) கைது செய்தனர். விசாரணையில் கரும்பு தோட்டத்தைக் காட்டுப் பன்றிகள் நாசம் செய்து விடுவதாகவும், அதனைத் தடுக்க மின்கம்பிகள் அமைத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
கடலூர் மத்திய சிறைச்சாலையில் ஆயிரத்துக்கும் அதிகமான விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு 8 ஆயுள் தண்டனை கைதிகள் பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இதில் தேர்வு எழுதிய 8 கைதிகளும் தேர்ச்சி பெற்று உள்ளனர். தேர்ச்சி பெற்ற ஆயுள் தண்டனை கைதிகளுக்கு சிறை அதிகாரிகள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 16,908 மாணவர்கள், 15,661 மாணவிகள் என மொத்தம் 32,569 பேர் தேர்வு எழுதினர். அதில் 15,230 மாணவர்கள், 14 ஆயிரத்து 939 மாணவிகள் என மொத்தம் 30,169 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த நிலையில் கடலூர், திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தலைமை ஆசிரியை வழங்கினார்.
மாநில அளவிலான கபடி போட்டி, செங்கல்பட்டு மாவட்டம், கோவிலாச்சேரியில் நடைபெற்றது. இந்த போட்டியில் மாநில அளவில் பல்வேறு அணிகள் பங்கேற்றன. அதில் கலந்து கொண்ட கடலூர் அடுத்த உண்ணாமலை செட்டி சாவடியைச் சேர்ந்த ராஜா பிரதர்ஸ் கபடி அணி முதலிடம் பிடித்து ரூ.30,000 பரிசு தொகை வென்றது. இதையடுத்து ராஜா பிரதர்ஸ் கபடி அணிக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் முட்டை விலை திடீரென உயர்ந்துள்ளது. கடந்த வாரம் வரை 5 ரூபாய் 60 காசுக்கு விற்கப்பட்ட ஒரு முட்டை இன்று 6 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தினமும் பயன்படுத்தக்கூடிய முட்டை விலை திடீரென உயர்ந்து உள்ளதால் கடலூர் பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.