Cuddalore

News April 20, 2024

கடலூர்: 3-ம் கட்ட நீச்சல் பயிற்சி

image

கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் கோடைக்கால 2-ம் கட்ட நீச்சல் வகுப்புகள் கடந்த 16-ம் தேதி துவங்கி வரும் 28ஆம் தேதிவரை நடைபெறுகிறது‌. இந்நிலையில் 3-ஆம் கட்ட நீச்சல் வகுப்பு வரும் 30-ம் தேதி முதல் மே மாதம் 12-ம் தேதிவரை நடைபெற உள்ளதாக மாவட்ட விளையாட்டு அலுவலர் செ. மகேஷ்குமார் தெரிவித்துள்ளாா்.

News April 20, 2024

நாதக நிர்வாகியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

image

நெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூரை சேர்ந்தவர் மாதவன். நாம் தமிழர் கட்சி நிர்வாகியான இவர், நேற்று இரவு அதே பகுதியில் நடந்து சென்றபோது, அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ராகுல் உள்ளிட்ட 3 போ், மாதவனை வழிமறித்து, தேர்தல் முன்விரோதம் காரணமாக 3 பேரும் மாதவன் மீது தாக்குதல் நடத்தினர். புகாரின்பேரில் நெல்லிக்குப்பம் போலீசார், ராகுல் உள்பட 3 போ் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2024

கடலூர்:கடந்த தேர்தலை விட 1.36% வாக்குகள் குறைவு

image

கடலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 72.28 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. இது கடந்த 2019-ம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பதிவாகி இருந்த வாக்குகளை விட 1.36 சதவீத வாக்குகள் குறைவாகும். அதாவது கடந்த 2019-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் 73.64 சதவீதம் மட்டுமே வாக்குகள் பதிவானது.

News April 20, 2024

கடலூர்:72.28% வாக்குகள் பதிவானதாக கலெக்டர் அறிவிப்பு

image

பாராளுமன்ற தேர்தல் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடந்தது. இதில் மாலை 6 மணிக்கு பிறகும் சில வாக்குச்சாவடி மையங்களில் வாக்களிக்க ஏராளமான வாக்காளர்கள் காத்திருந்தனர். இதையடுத்து அவர்களுக்கு டோக்கன் வினியோகம் செய்யப்பட்டு வாக்கு பதிவு நடந்தது. கடலூர் தொகுதியில் இரவு 9 மணி வரை வாக்கு பதிவு நடந்து முடிந்தது. இதில் 72.28% வாக்குகள் பதிவாகியுள்ளதாக கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்தார்.

News April 20, 2024

கடலூர்:72.28% வாக்குகள் பதிவானதாக கலெக்டர் அறிவிப்பு

image

பாராளுமன்ற தேர்தல் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடந்தது. இதில் மாலை 6 மணிக்கு பிறகும் சில வாக்குச்சாவடி மையங்களில் வாக்களிக்க ஏராளமான வாக்காளர்கள் காத்திருந்தனர். இதையடுத்து அவர்களுக்கு டோக்கன் வினியோகம் செய்யப்பட்டு வாக்கு பதிவு நடந்தது. கடலூர் தொகுதியில் இரவு 9 மணி வரை வாக்கு பதிவு நடந்து முடிந்தது. இதில் 72.28% வாக்குகள் பதிவாகியுள்ளதாக கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்தார்.

News April 20, 2024

வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டுவரப்பட்ட எந்திரங்கள்

image

கடலூர் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று விறுவிறுப்பாக நடந்தது. இதில் கடலூர் தொகுதிக்கு 1509 வாக்குச்சாவடியில் தேர்தல் நடந்தது. இதையடுத்து வாக்குப்பதிவு முடிந்ததும், இரவில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாக்குப்பதிவு எந்திரங்களை பெட்டியில் வைத்து பூட்டி, வாக்கு எண்ணிக்கை மையமான கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரிக்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு சென்றனர்.

News April 19, 2024

கடலூர் மாவட்டத்தில் 22 தேதி முதல் விண்ணப்பிக்கலாம்…..

image

கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறுபான்மைப் தனியார் சுயநிதி மழலையர் தொடக்கப்பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் 25 % இட ஒதுக்கீட்டில் எல்கேஜி சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், பள்ளி கல்வித்துறையின் இணையதளத்தில் வரும் 22ம் தேதி முதல் மே 20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 19, 2024

கடலூரை பாமக கைப்பற்றும்: தங்கர்பச்சான் 

image

கடலூரில் பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் கூறுகையில் நான் மற்ற வேட்பாளர்கள் போல உங்கள் பாதம் பணிந்து வேண்டுகிறேன் என்று கூறவில்லை. மாறாக தகுதிக்கு ஓட்டு போடுங்கள் என்று கூறினேன். முதல் முறையாக இம்முறை கடலூர் பாராளுமன்ற தொகுதியை பாமக கைப்பற்றும் என்றும், பணம் கொடுக்கும் வேட்பாளர்களை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்று வேட்பாளர் தங்கர்பச்சான் கூறினார்

News April 19, 2024

தேர்தல் பணியில் 7,556 ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள்!

image

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடலூர் லோக்சபா தொகுதியில் இன்று நடைபெற்று வரும் தேர்தல் பணியில் 7,556 ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். மேலும் கடலூர் லோக்சபா தொகுதியில் உள்ள 1509 ஓட்டுச் சாவடி மையங்களில் 119 ஓட்டு சாவடிகள் பதட்டமான ஓட்டுசாவடி, 53 ஓட்டு சாவடிகள் மிக பதற்றமான ஓட்டுச்சாவடி என கண்டறிந்து துணை ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

News April 19, 2024

சிதம்பரம் பாஜக வேட்பாளர் வாக்குப்பதிவு

image

இந்திய தேசிய ஜனநாயக கூட்டணி சிதம்பரம் நாடாளுமன்ற பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் கார்த்தியாயினி ஜனநாயக கடமையாற்ற இன்று அவரது தொகுதியில் தனது வாக்கை பதிவு செய்தார். பின்பு வாக்களித்த தனது விரல்களை காண்பித்த அவர், ஜனநாயக கடமையை ஆற்றி விட்டேன் என்று செய்தியாளர்களிடம் மகிழ்ச்சியுடன் கூறினார்.

error: Content is protected !!