India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் FL-1 மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான கூடம் மற்றும் FL-2 / FL-3 உரிமம் பெற்று இயங்கும் மனமகிழ் மன்றங்கள், மதுபான கூடங்களை மூட வேண்டும். இதை மீறி மதுபான கடைகளை திறந்து மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

உத்தரகாண்ட் பகுதியில் உள்ள நிலச்சரிவில் சிக்கிய பராசக்தி 75 வயது பெண் உட்பட 5 பேர் முதற்கட்டமாக அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது. தொடர்ந்து ஐந்து, ஐந்து பேராக மீட்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுவரை 10 பேர் மீட்கப்பட்டுள்ள நிலைகள் தற்போது மேலும் ஐந்து பேரை மீட்க நடவடிக்கை மேற்கொள்வதாக ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.

ஜார்க்கட் மாநிலத்தில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிக்கொண்ட கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்தவர்களின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதில் சிதம்பரத்தை சேர்ந்தவர்கள் தான் அதிக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் மீண்டு வர வேண்டும் என உறவினர்களும் நண்பர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

சிதம்பரத்தில் இருந்து ஆதி கைலாஷ் பகுதிக்கு ஆன்மீக சுற்றுலா 30 பேர் சென்றனர். இந்நிலையில் உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் சொந்த ஊருக்கு திரும்பி வர முடியாமல் அங்கே உள்ள ஆசிரமத்தில் சிக்கி தவிக்கின்றனர். அவர்கள் இன்று சொந்த ஊருக்கு திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே உத்தரகாண்டில் சிக்கியுள்ள சிதம்பரம் பகுதியை சேர்ந்த 30 பேரின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி பல்வேறு பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு இன்று காலை நடைபெற்றது. இதில் கடலூர், பண்ருட்டி, விருதாச்சலம், சிதம்பரம், திட்டக்குடி, சேத்தியாத்தோப்பு போன்ற மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 113 மையங்களில் 32,983 பேர் தேர்வெழுத விண்ணப்பித்தனர் இதில் 24,272 பேர் தேர்வு எழுதினர் 8711 பேர் தேர்வு எழுத வரவில்லை.

வடகிழக்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் இன்று காலை ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இது மிக தூரத்தில் புயல் உருவாகியிருப்பதைக் குறிக்கிறது. இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

கடலூர் மாவட்டத்தில் இன்று காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை குரூப் 2 தேர்வு நடைபெறுகிறது. தேர்வு மையத்திற்கு தேர்வர்கள் காலை 8.30 மணிக்கு வரவேண்டும். 9 மணிக்கு பிறகு வரும் தேர்வர்கள் தேர்வுக் கூடத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

கடலூர், மஞ்சக்குப்பம் மைதானத்தில் அரசு பொருட்காட்சி துவக்க விழா நேற்று நடந்தது. பொருட்காட்சியை துவக்கி வைத்து அமைச்சர் பன்னீர்செல்வம் பேசுகையில், கடலூர் வளர்ச்சிக்கு ரூ.307 கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மழைக்காலங்களில் வெள்ளநீர் புகாமல் இருக்க கடலூர் மாவட்டத்தில் அனைத்து பாலங்களும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் சதீஷ், சிதம்பரம் அரசு மருத்துவ கல்லூரி முன்னாள் மாணவர் இவர். அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவியை காதலிப்பதாக வீடியோ காலில் பேசி அந்த மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து மாணவி சிதம்பரம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் மகளிர் காவல் ஆய்வாளர் அமுதா வழக்கு பதிவு செய்து சதீஷை கைது செய்தனர்.

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று கடலூர் உதவி ஆய்வாளர் முருகன், சிதம்பரம் காவல் ஆய்வாளர் ஜெர்மின்லதா, விருத்தாசலம் காவல் ஆய்வாளர் முருகேசன், நெய்வேலி காவல் ஆய்வாளர் பிருந்தா, சேத்தியாத்தோப்பு காவல் ஆய்வாளர் சேதுபதி ஆகியோர் ரோந்துப்பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.