India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூரில் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் அளித்த ஒரு பேட்டியில், நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது, தேர்தலின் போதும் ஊர்க்காவல் படையினர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை வராமல் சிறப்பாக பணியாற்றியுள்ளார்கள். எப்போதும் சீருடை அணிந்து பணி மேற்கொள்ளும்போது பொறுப்பை ஏற்றுக்கொண்டு திறமையாக பணியாற்றினால் தான்பொதுமக்களிடம் நன்மதிப்பை பெறமுடியும்.அதனால் திறமையுடன் பணியாற்றுங்கள் என்றார்.
கடலூர் வெள்ளப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சுசிலா தேவநாதன் அதே பகுதியில் 10 ஏக்கர் நிலத்தில் வாழை மற்றும் கரும்பு நடவு செய்து வந்துள்ளனர்.இந்த நிலம் தொடர்பாக சில பேர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இதனை தொடர்ந்து நேற்று இரவு மர்ம நபர்கள் பயிரிடப்பட்டிருந்த நிலத்தை டிராக்டர் மூலம் உழதனர்.இதனை கண்டித்து ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் பொதுமக்கள் நெல்லிக்குப்பம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் திருவந்திபுரத்தில் புகழ்பெற்ற தேவநாதசாமி கோவில்108 வைணவ தலங்களில் பிரசித்தி பெற்ற இந்த தேவநாதசாமி கோவிலில் திருமணம் செய்து கொள்ள வேண்டிக் கொள்பவர்கள் தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் கோவிலுக்குவந்து திருமணம் செய்து கொள்வர்.இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் கோவில் திருமண மண்டபத்தில் 70 பேர், தனியார் திருமண மண்டபத்தில் 30 பேர் என மொத்தம் 100 திருமணங்கள் நடைபெற்றது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், இன்று (20.5.24) அடுத்த 3 மணி நேரத்தில் அதவாது 10 மணி வரை கடலூர் மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், இப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
கடலூர் முதுநகர் ஏ.பி.டி மாருதி கிளையில் ‘தி எபிக் நியூ ஸ்விப்ட்’ புதிய கார் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் டாக்டர் பிரவீன் ஐயப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய காரை அறிமுகம் செய்து வைத்தார். உடன் கிளை மேலாளர், கடலூர் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் இருந்தனர்.
கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (19/05/24) இரவு கடலூர் காவல் ஆய்வாளர் முத்துக்குமரன், சிதம்பரம் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயதேவி, விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் சிவகாமி, நெய்வேலி காவல் ஆய்வாளர் சுதாகர் மற்றும் பண்ருட்டியில் உதவி ஆய்வாளர் ஜவ்வாதுஉசைன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூரில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் தினசரி இரவு போலீசார் சுழற்சி முறையில் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடலூர் அண்ணா பாலம் அருகிலும், ஆல்பேட்டை சோதனை சாவடியிலும் போலீசார் இன்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குடியிருப்பு பகுதியிலும் இருசக்கர வாகனங்களில் போலீசார் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
திட்டக்குடி தாலுகாவுக்கு உட்பட்ட பெண்ணாடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை முதல் மாலை வரை வானம் மேக மூட்டமாக இருந்தது. இந்த நிலையில் மாலை 4 மணி அளவில் இடி மின்னலுடன் பலத்த மழை வெளுத்து வாங்கியது. சுமார் 30 நிமிடம் பெய்த மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதில் குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கி நிற்பதால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அடுத்த வடக்கனூர் சேர்ந்தவர் மொட்டையன் மனைவி சிவமாலை (69). இவர் நேற்று திட்டக்குடி அருகே தொழுதூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு, ஆட்டோவில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஆட்டோ கவிழ்ந்ததில் படுகாயம் அடைந்த சிவமாலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள தெற்கு இலங்கை கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக கடலூர் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புயுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.