India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெண்ணாடம் சோழன் நகரை சேர்ந்தவர் பண்பரசு (22). இவர் நேற்று தனது நண்பர்களுடன் இறகு பந்து விளையாடியபோது, அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதை பார்த்த அவரது நண்பர்கள், பண்பரசை மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
பெண்ணாடம் சோழன் நகரை சேர்ந்தவர் பண்பரசு (22). இவர் நேற்று தனது நண்பர்களுடன் இறகு பந்து விளையாடியபோது, அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதை பார்த்த அவரது நண்பர்கள், பண்பரசை மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விளையாட்டு விடுதிகளில் தங்கி பயிற்சி பெற 7-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடலூர் மாவட்ட அளவிலான தேர்வு கடலூரில் நடைபெறுகிறது. இதில் மே மாதம் 10-ம் தேதி மாணவர்களுக்கும், 11-ம் தேதி மாணவிகளுக்கும் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வுக்கு வருகிற 8-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் ரயில் நிலையத்தில் இன்று பயணிகள் கூட்டம் அலைமோதியது. கோடை விடுமுறை தொடங்கி விட்டதால் சென்னை மார்க்கம் மற்றும் திருச்சி மார்க்கம் செல்லும் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் கட்டுக்கடங்காத கூட்டம் நிரம்பி வழிகிறது. கோடை முன்பதிவு இல்லாமல் பயணிப்போர் எண்ணிக்கை அதிகம் உள்ளது. எனவே கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்று சிதம்பரம் ரயில் பயணிகள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
கடலூரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், “போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி 30ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய உத்தேசிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதால், போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளோம்” என்றார்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள நடைபாதையில் ஏராளமான கடைகள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியருக்கு புகார் வந்தது. இதனைத்தொடர்ந்து இன்று வருவாய் கோட்டாட்சியர் அபிநயா நேரடியாக பேருந்து நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்தார். அப்பொழுது நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் வைத்திருந்தவர்களை உடனடியாக அகற்றுமாறு எச்சரிக்கை விடுத்தார்.
கடலூர் சுற்று வட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனை முன்னிட்டு கடலூர் செம்மண்டலம் பகுதியில் கோடை வெயிலுக்கு குளிர்ச்சியான குடிநீர் வழங்கும் மண் பானைகள் விற்பனை அதிகரித்துள்ளது. இதுகுறித்து மண்பானை விற்பனையாளர்கள் கூறுகையில், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் வீடு, அலுவலகத்திற்கு என பொதுமக்கள் மண் பானைகள் வாங்க ஆர்வம் காட்டி வருவதாக தெரிவித்தனர்.
சிதம்பரத்தில் உள்ள தில்லை நடராஜர் கோயில், தில்லை கூத்தன் கோயில் என்றும் அறியப்படுகின்றது. இவ்வூர் தில்லை என புராணகாலத்தில் அழைக்கப்பட்டுள்ளது. இத்தலம் 4000 ஆண்டுகளுக்கும் பழமையானதாக கருதப்படுகிறது. சைவ குரவர்கள் நால்வராலும் தேவாரம் பாடப்பட்ட தலமாகும். மனித உடலே கோயில் என்பதைக் குறிக்கும் வகையில் இக்கோவில் அமைக்கப்படிருக்கிறது. கிழக்கு கோபுரத்தில் 108 சிவதாண்டவச் சிற்பங்கள் செதுக்கப்படுள்ளது.
கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு குறைந்த கட்டணத்தில் கோடைக்கால 2-ம் கட்ட நீச்சல் வகுப்புகள், சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் கடந்த 16-ம் தேதி துவங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த 2-ம் கட்ட நீச்சல் பயிற்சி வகுப்பானது நாளையுடன் (28-ஆம் தேதி) நிறைவடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பருவ மழை குறைவாக பெய்ததால் வெயிலின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் இதுவரை 100 டிகிரி வரை வெப்பம் உயரவில்லை. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் நேற்று வெயில் அளவு அதிகபட்சமாக கடலூரில் 96 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.