India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கம்மாபுரம் அடுத்த கோட்டேரியைச் சேர்ந்தவர் ஆறுமுகத்தின் மகள் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்நிலையில் நேற்று வெளியான தேர்வு முடிவில் அவர் கணித பாடத்தில் தோல்வி அடைந்தார். இதனால் மனமுடைந்த அவர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கம்மாபுரம் அடுத்த கோட்டேரியைச் சேர்ந்தவர் ஆறுமுகத்தின் மகள் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்நிலையில் நேற்று வெளியான தேர்வு முடிவில் அவர் கணித பாடத்தில் தோல்வி அடைந்தார். இதனால் மனமுடைந்த அவர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்த நிலையில் நேற்று கடலூர் 38 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 39 டிகிரி செல்சியஸ், புவனகிரி 39 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 39 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 41 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 42 டிகிரி செல்சியஸ், பண்ருட்டி 41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறிஞ்சிப்பாடியில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் ஜி.கே மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஏ.பிரணவி 592 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்தார். மேலும் அதே பள்ளியைச் சேர்ந்த பி. ஸ்ரீ கோதைநாயகி, அபினவ் தென்றல் மற்றும் வினோதினி ஆகியோர் 591 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் 2-ம் இடம் பிடித்தனர்.அவர்களுக்கு பள்ளி முதல்வர் வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ்நாடு முழுவதும் இன்று பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 246 பள்ளிகளில் 26 ஆயிரத்து 911 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். கடலூர் மாவட்டத்தில் 71 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.இதில் அரசு பள்ளிகள் 12, அரசு உதவி பெறும் பள்ளிகள் 2, மற்றும் தனியார் பள்ளிகள் 57 என மொத்தம் 71 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
கடலூர், மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் மாணவ, மாணவிகளுக்கு கோடைக்கால 3ஆம் கட்ட நீச்சல் வகுப்புகள் கடந்த 30ம் தேதி துவங்கி வரும் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், 4ஆம் கட்ட நீச்சல் பயிற்சி வகுப்பு வரும் 14ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக மாவட்ட விளையாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி கடலூரில் நேற்று நடந்தது. இதில் மாணவ- மாணவிகள் மொத்தம் 230 பேர் பங்கேற்றனர். தொடர்ந்து அவர்களை 7, 10, 13, 17 ஆகிய வயதுக்குட்பட்டோர் மற்றும் பெரியவர்கள் ஆகிய பிரிவுகளில் பிரித்து போட்டிகள் நடத்தப்பட்டன. தலைமை நடுவர் அரவிந்தசாமி தலைமையிலான குழுவினர் ஒவ்வொரு பிரிவுகளிலும் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை தேர்வு செய்து பரிசு வழங்கினர்.
பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. இதில் கடலூர் மாவட்டத்தில் இருந்து 28,518 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 26911 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதன் மூலம் கடலூர் மாவட்டம் 94.36 சதவீத தேர்ச்சி பெற்று மாநில அளவில் 22-வது இடத்தை பிடித்தது. இது கடந்த ஆண்டைவிட தேர்ச்சி சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் 92.04 சதவீத தேர்ச்சி பெற்று 27-வது இடத்தை பிடித்தது.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், கடலூர் மாவட்டத்தில் 94.36 தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் – 92.32 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர்கள் – 96.29 % தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தென்னிந்திய கடலோர பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடல் அலை சீற்றத்துடன் காணப்படுகிறது. இதற்கு “கள்ளக்கடல்”என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதன்படி இன்று கடலூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று இரவு வரை நீடிக்கும் எனவும், 5 அடி முதல் 7 அடிவரை கடல் அலை சீற்றத்துடன் காணப்படும் என இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.