Cuddalore

News April 28, 2024

கடலூரில் மீன்கள் விலை உயர்வு

image

கடலூரில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்கும் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. அதனால் இன்று கடலூர் துறைமுகத்திற்கு குறைந்த அளவே மீன்கள் வந்ததால், மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. இதில் வஞ்சிரம் ஒரு கிலோ 1000 ரூபாய் முதல் 1300 ரூபாய் வரை விற்பனையானது. அதேபோல் பிற மீன்களின் விலையும் உயர்ந்து காணப்பட்டது.

News April 28, 2024

கடலூரில் ஹாக்கி பயிற்சி முகாம்

image

கடலூர் ஹாக்கி அகாடமி நடத்தும் இலவச கோடைக்கால ஹாக்கி பயிற்சி முகாம் கடலூர் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வரும் 29 ஆம் தேதி துவங்க உள்ளது. இதில் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி பெறுபவர்களுக்கு காலை மற்றும் மாலையில் சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு 9444832122 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 28, 2024

கடலூரில் ஸ்பீக் ஈஸி இங்கிலீஷ் பயிற்சி!

image

கடலூர் ஸ்பீக் ஈஸி ஸ்போக்கன் இங்கிலீஷ் இன்ஸ்டிடியூட்டில் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் கற்றுக் கொள்ள விரும்புபவர்களுக்கு சிறப்பு கோடைகால பயிற்சி வகுப்பு வரும் 1ஆம் தேதி துவங்குகிறது. இங்கு சர்வதேச தரத்தில் வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொள்ள விரும்புவோர் 7708133111 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஸ்பீக் ஈஸி ஸ்போக்கன் இங்கிலீஷ் இன்ஸ்டியூட் நிர்வாகி தெரிவித்துள்ளார்.

News April 28, 2024

கடலூர் அருகே கர்ப்பமான சிறுமி; வாலிபர் கைது

image

சிதம்பரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி இவரை கிள்ளை பகுதியை சேர்ந்த கார்த்திக் (22) என்பவர் காதலிப்பதாக கூறி பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த சிறுமி 5 மாதம் கர்ப்பமாக உள்ளார். இதைப் பற்றி தகவல் அறிந்த சிதம்பரம் காவல்துறையினர் கார்த்திக்கை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்

News April 28, 2024

இறகு பந்து விளையாடிய இளைஞர் மரணம்

image

பெண்ணாடம் சோழன் நகரை சேர்ந்தவர்  பண்பரசு (22). இவர் நேற்று தனது நண்பர்களுடன் இறகு பந்து விளையாடியபோது, அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதை பார்த்த அவரது நண்பர்கள், பண்பரசை மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

News April 28, 2024

இறகு பந்து விளையாடிய இளைஞர் மரணம்

image

பெண்ணாடம் சோழன் நகரை சேர்ந்தவர்  பண்பரசு (22). இவர் நேற்று தனது நண்பர்களுடன் இறகு பந்து விளையாடியபோது, அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதை பார்த்த அவரது நண்பர்கள், பண்பரசை மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

News April 28, 2024

கடலூர்:விளையாட்டு விடுதிகளில் சேர தேர்வு

image

விளையாட்டு விடுதிகளில் தங்கி பயிற்சி பெற 7-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடலூர் மாவட்ட அளவிலான தேர்வு கடலூரில் நடைபெறுகிறது. இதில் மே மாதம் 10-ம் தேதி மாணவர்களுக்கும், 11-ம் தேதி மாணவிகளுக்கும் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வுக்கு வருகிற 8-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

News April 27, 2024

சிதம்பரம் ரயில் நிலையத்தில் அலை மோதிய கூட்டம்

image

சிதம்பரம் ரயில் நிலையத்தில் இன்று பயணிகள் கூட்டம் அலைமோதியது. கோடை விடுமுறை தொடங்கி விட்டதால் சென்னை மார்க்கம் மற்றும் திருச்சி மார்க்கம் செல்லும் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் கட்டுக்கடங்காத கூட்டம் நிரம்பி வழிகிறது. கோடை முன்பதிவு இல்லாமல் பயணிப்போர் எண்ணிக்கை அதிகம் உள்ளது. எனவே கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்று சிதம்பரம் ரயில் பயணிகள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

News April 27, 2024

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் ஒத்திவைப்பு

image

கடலூரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், “போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி 30ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய உத்தேசிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதால், போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளோம்” என்றார்.

News April 27, 2024

கடலூர்: கடும் எச்சரிக்கை 

image

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள நடைபாதையில் ஏராளமான கடைகள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியருக்கு புகார் வந்தது. இதனைத்தொடர்ந்து இன்று வருவாய் கோட்டாட்சியர் அபிநயா நேரடியாக பேருந்து நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்தார். அப்பொழுது நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் வைத்திருந்தவர்களை உடனடியாக அகற்றுமாறு எச்சரிக்கை விடுத்தார்.

error: Content is protected !!